மங்கள் பாண்டே (1827, ஜூலை 19- பலிதானம்: 1857, ஏப்ரல் 8) 1857 வரலாற்றில் முத்திரை பதித்துவிட்ட ஆண்டு. கிழக்கிந்திய கம்பெனியார் பொருள்களை விற்பனை செய்ய இந்தியாவில் காலடி எடுத்து வைத்துவிட்டு, இங்கு நாடுபிடிக்கத் தொடங்கினர். கிழக்கிந்திய கம்பெனிக்கு சேவகம் செய்ய ஆங்கில படைகளைத் தவிர இந்திய வீரர்களைக் கொண்ட படைகளையும் தயாரித்து வைத்திருந்தனர். இதில் நடந்த கொடுமை, ஆங்கில சிப்பாய்களின் ஊதியத்துக்கும், சலுகைகளுக்கும், சீருடையிலும் மலைக்கும் மடுவுக்குமான ஏற்றத்தாழ்வு காட்டியிருந்தனர். மகாராஜாக்களைப் போல ஆங்கில சிப்பாய்கள் ... Read More »
Monthly Archives: April 2017
வந்தேமாதரம் தந்த ரிஷி
April 14, 2017
பக்கிம் சந்திர சட்டர்ஜி (பிறப்பு: 1838, ஜூன் 27 – மறைவு: 1894 ஏப்ரல் 8) ‘வந்தே மாதரம்’ -இந்த வார்த்தைகள் விடுதலைப் போராட்டக் காலத்தில் சுதந்திர எழுச்சியை, உத்வேகத்தை ஊட்டிய மந்திர வார்த்தைகள். அன்று மட்டும் அல்ல, இன்றும் ‘வந்தே மாதரம்’ என்றால் நாடி நரம்பெல்லாம் தேசபக்தி கணல் பாய்கிறது. இந்த வார்த்தைக்கு சொந்தக்காரர், இந்த நாட்டை நம் அனைவருக்கும் சொந்தமாக்க விதை தூவியவர், பக்கிம் சந்திர சட்டோபத்யாய என்னும் பக்கிம் சந்திர சட்டர்ஜி. 1838 ... Read More »
முள்ளுக்கும் திறமை உண்டு…
April 13, 2017
விவசாயி ஒருவருக்கு மலை அருகே தோட்ட்மிருந்தது. அதில் துளசி பயிர் செய்து இருந்தார். துளசி செடிகளுக்கு இடையே முளைக்கும் களைகள், முட்செடிகள் அகியவற்றை பிடுங்கி எடுத்து துளசி செடிகைள கண்ணும் கருத்துக பாதுகாத்து வளர்த்து வந்தார். ஒரு நாள் துளசி செடிக்கு இடைேய வள்ர்ந்து இருந்த ஒரு முட்செடி செடி ஒன்றை பிடுங்கி எறிந்தார். உடனே அந்த முட்செடி கண்ணீர் விட்டு அழுதது.விவசாயி அந்த முட்செடியிடம் சென்டற போது அது சொன்னது ” நான் தான் யாருக்குமே ... Read More »
அம்பேத்கரும் தேசியமும்
April 13, 2017
டாக்டர் பீமராவ் அம்பேத்கர் (பிறப்பு: ஏப். 1891, 14 – மறைவு: 1956, டிச. 6 ) அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை புரட்சியாளர்களுக்கே உரித்த மேடு பள்ளங்கள் நிரம்பியது. அதுபோலவே அவரது கருத்துகளிலும் பலத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவின் கொடிய பழக்கங்களுள் ஒன்றான தீண்டாமையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவரான அம்பேத்கரின் உடனடி எதிர்வினை இயல்பு, அவரது கருத்துப் பரிமாற்றங்களில் காணப்படுகிறது. அவரது தேசியம், ஹிந்துத்துவம் தொடர்பான கருத்துகளிலும், அவரது ஆரம்பகால கருத்துகளில் இருக்கும் கோபமும் கடுமையும் பின்னாளில் நிதர்சனத்தை ... Read More »
சாவர்க்கரின் தமிழகத் தோழர்
April 12, 2017
வ.வே.சு.ஐயர் (பிறப்பு: 1881, ஏப். 2- மறைவு: 1925, ஜூன் 4) திருச்சி நகரத்தில் ஒரு பகுதி வரகநேரி. இங்கு கல்வி இலாகாவில் பணிபுரிந்து கொண்டிருந்த வேங்கடேச அய்யர் என்பவருக்கும் காமாட்சி அம்மாளுக்கும் 1881, ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி பிறந்தவர் வ.வே.சுப்பிரமணியம் என்கிற வ.வே.சு.ஐயர். திருச்சியில் இவரது ஆரம்பக் கல்வி. தனது 12-ஆவது வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வில் மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். பிறகு திருச்சி தூய வளனார் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். அப்போது ... Read More »
இன்றைய நகைச்சுவை!!!
April 11, 2017
நாராயணசாமி ஒரு தூக்கு தண்டனைக் கைதி. நாராயணசாமி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டார். அப்போது மாம்பழ சீசன் இல்லை. எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆறு மாதத்திற்குப்பி ன் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர். செர்ரிப் பழம் என்று பதில் வந்தது. அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு. பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது . மூன்றாவது ... Read More »
மகாத்மா காந்தியின் நிழல்
April 11, 2017
கஸ்தூரிபா காந்தி (பிறப்பு: 1869, ஏப். 11 -மறைவு: 1944, பிப். 22) தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நிழலாக வாழ்ந்தவர், அவர்தம் வாழ்க்கைத் துணைவியார் கஸ்தூரிபா காந்தி. கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்த பாரத மங்கையர் திலகம் அவர். குஜராத் மாநிலத்தின் போர்பந்தரில், வணிக குடும்பத்தில், கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக 11.04.1869-இல் பிறந்தார் கஸ்தூரிபா. இவருக்கு 13 வயதான போது (1883) குடும்ப உறவினரான மோகன்தாஸ் கரம்சந்த் (மகாத்மா) காந்தியுடன் திருமணம் செய்து ... Read More »
எலும்புகளின் உறுதித் தன்மைக்கு… புரோட்டீன்களே அவசியமானது!
April 10, 2017
எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய சின்னச் சின்ன, ஆனால் அவசியமான விசயங்களை நாம் பார்ப்போம்…இவை அனைத்துமே நம் நலனைப் பாதுகாக்கும் முத்தான செய்திகள்தான். 1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் ... Read More »
தமிழைக் காத்த தாத்தா
April 10, 2017
உ.வெ.சாமிநாத ஐயர் பிறப்பு: 1855, பிப். 19- மறைவு: 1942, ஏப். 28) தமிழ்மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாதன் என்கிற உ.வே.சா! 1855, பிப். 19-ஆம் நாள், நாகை மாவட்டம் சூரியமூலை என்ற ஊரில், வேங்கடசுப்பையா- சரஸ்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர், தமிழுக்கு ஆற்றிய ... Read More »
இன்றைய நகைச்சுவை!!!
April 9, 2017
விரட்டியடித்த மழையில் நண்பரின்வீட்டில் சிக்கிக்கொண்டார் நாராயணசாமி. மழை நின்றதும் கிளம்பலாம் என்ற எண்ணத்தில், நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார் நாராயணசாமி. ஆனால், நன்றாக இருட்டிய பிறகும் மழை நின்றபாடில்லை. என்ன செய்வது என நாராயணசாமி யோசித்துக்கொண்டிருக்கையில், நண்பர் சொன்னார், ” நாராயணசாமி…இந்த மழையில் நீங்கள் வீட்டுக்குப் போக முடியாது.இன்று இரவு எங்கள் வீட்டிலேயே சாப்பிடுங்கள்”. வேறு வழியில்லை. இவரும் ஒப்புக்கொண்டார் . நாராயணசாமிக்கும் சேர்த்து உணவு தயாரிக்க மனைவியிடம் சொல்ல வீட்டுக்குள் சென்றார் நண்பர். பின் திரும்பி வந்து பார்த்தபோது ... Read More »