Home » விவேகானந்தர்

Category Archives: விவேகானந்தர்

பழைய கோயில்!!!

பழைய கோயில்!!!

மாமரத்திற்கு வடக்கில் மாடிக்குச் செல்லும் படிகள் காணப்படுகின்றன. அவற்றின் வழியாகச் சென்றால் பழைய கோயிலை அடையலாம். அங்கே இரண்டு அறைகள் உள்ளன. இடது பக்கம் இருக்கின்ற அறை தான் ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயிலாகத் திகழ்ந்தது. ஆரம்பத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் புனித அஸ்தி (ஆத்மா ராம் என்று வழங்கப்பட்டது) , ஒரு கலசத்தில் இங்கே பூஜிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஸ்ரீராமகிருஷ்ணரின் படம் வைக்கப்பட்டு, 1938 ஜனவரி 14 வரை சுமார் 40 வருடங்கள் பூஜை நடைபெற்றது. அன்னை சுவாமிஜி மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணரின் ... Read More »

சுவாமிஜியின் அறை!!!

சுவாமிஜியின் அறை!!!

மாமரத்தின் கீழிருந்து கங்கையை நோக்கி நடந்தால், நமக்கு இடது பக்கமாக, சுவாமிஜியின் அறைக்குச் செல்வதற்கான படிக்கட்டினைக் காணலாம். மாடியிலுள்ள சுவாமிஜியின் அறையைத் தரிசிப்பதற்காக பின்னாளில் கட்டப்பட்ட படிக்கட்டு இது. தியான சித்தன் என்று ஸ்ரீராமகிருஷ்ணரால் அடையாளம் காட்டப்பட்டவரும், உலகின் சிந்தனைப் போக்கிற்கே ஒரு திருப்பத்தைக் கொண்டுவந்தவருமான அந்த மாமுனிவர் வாழ்ந்த அறையைப் பார்ப்போம். கட்டில், நாற்காலி, அலமாரி என்று சுவாமிஜியின் அறை, பொருட்மயமாகக் காட்சியளிக்கிறது. இத்தனை பொருட்களுக்கிடையே அவர் எப்படி வாழ்ந்தார் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. உண்மை ... Read More »

பிரம்மானந்தர் கோயில்!!!

பிரம்மானந்தர் கோயில்!!!

பிரம்மானந்தர் கோயில்! நாம் முதலாவதாகக் காண்பது பிரம்மானந்தர் கோயில், ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மீகப் புதல்வராகக் கருதப்பட்ட சுவாமி பிரம்மானந்தர் ராமகிருஷ்ண இயக்கத்தின் முதல் தலைவர். ராஜா மஹாஜ், ராக்கால் மஹராஜ் என்றெல்லாம் அழைக்கப்படுபவர். 1922 ஏப்ரல் 10 ஆம் நாள் மறைந்த அவரது திருமேனியை எரியூட்டிய இடத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. அவரது சீடரான சியாம் கோஷ்(இவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான நவகோபால் கோஷின் புதல்வர்) முழுச்செலவான ரூ40,000 ஐயும் ஏற்றுக்கொள்ள, இரண்டு ஆண்டுகளில் கோயில் கட்டப்பட்டது. 1924 பிப்ரவரி ... Read More »

குருவின் உறைவிடம்!!!

குருவின் உறைவிடம்!!!

ராமகிருஷ்ண இயக்க குருவின் உறைவிடம்! வில்வ மரத்திற்குத் தென்மேற்கில் சில அடி தூரத்தில் அமைந்துள்ள கட்டிடம் ராமகிருஷ்ண இயக்கத்தின் குரு வசிக்கும் இடமாகும். அவர் மடத்தில் இருக்கின்ற நாட்களில், காலையிலும் மாலையிலும் குறிப்பிட்ட நேரங்களில் அவரது தரிசனம் பெறலாம். அவர் வாழும் கட்டிடத்தின் கீழ்ப் பகுதி வங்க நாடக உலகினரின் நன்கொடையால் கட்டப்பட்டதாகும். எனவே அந்தப் பகுதி, வங்க நாடக உலகின் தந்தை என்று போற்றப்படுபவரும் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடருமான கிரீஷ் சந்திர கோஷின் நினைவாக கிரீஷ் நினைவில்லம் ... Read More »

எதையும் சாரா ஆன்ம இன்பம்!!!

எதையும் சாரா ஆன்ம இன்பம்!!!

சில மீனவப் பெண்கள் ஒருநாள் கடும்புயலில் மாட்டிக் கொண்டனர். வேறு வழியின்றி ஒரு பணக்காரனின் வீட்டில் தஞ்சம் புகுந்தனர். அவன் அவர்களை அன்புடன் வரவேற்று, உணவு கொடுத்து, தங்கவும் இடமளித்தான். இந்த இடம் அழகிய பூக்கள் மலர்ந்திருந்த ஒரு தோட்டத்தின் நடுவே இருந்தது. பூக்களிலிருந்து வீசிய நறுமணம் அந்த இடம் முழுவதையும் நிறைத்திருந்தது. ஆனால் அந்த நறுமணச் சொர்க்கத்தில் படுத்த மீனவப் பெண்களுக்குத் தூக்கம் வரவில்லை. ஏதோ ஒன்றை இழந்துவிட்டதுபோல் அவர்களுக்குத் தோன்றியது. அவர்களின் மனம் வேதனையில் ... Read More »

ஜீவ-ப்ரம்ம ஐக்கியம்!!!

ஜீவ-ப்ரம்ம ஐக்கியம்!!!

பொன்னிறச் சிறகுகள் கொண்ட இரு பறவைகள் ஒரு மரத்தில் அமர்ந்திருந்தன. மேற்கிளையில் இருந்த பறவை, அமைதியாக, கம்பீரமாகத் தனது மகிமையில் ஆழ்ந்திருந்தது. கீழ்க் கிளையில் இருந்த பறவை பரபரப்பாக இருந்தது. அது சிலவேளை இனிப்பான பழங்களைத் தின்று மகிழ்கிறது, சிலவேளைகளில் கசப்பான பழங்களைத் தின்று வருந்துகிறது. ஒருமுறை அது மிகக் கசப்பான பழம் ஒன்றைத் தின்ன நேர்ந்தது. அப்போது அது சற்று நிதானத்துடன், மேற்கிளையில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் பறவையைப் பார்த்து, நானும் அவனைப் போல் ஆவேன் என ... Read More »

சந்நியாசி கீதம் உருவான கதை!!!

சந்நியாசி கீதம் உருவான கதை!!!

அமெரிக்காவில் தன் ரம்மியமான சிறகுகளை பிரித்துப் பாய்ந்து செல்லும் செயிண்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது ஆயிரம் தீவுப் பூங்கா. அங்கு சுவாமி விவேகானந்தர் மிஸ் எலிசபெத் டச்சர் என்பவரின் குடிலில் 1895 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 19 ஆம் நாள்( புதன் கிழமை) முதல் ஆகஸ்டு 6ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை தங்கி யிருந்தார். மிஸ் டச்சர் அடங்கிய மாணவக் குழுவிற்கு தினசரி ஆன்மிக வகுப்புகள் எடுத்து வந்தார் சுவாமிஜி. அங்கிருந்த மாணவியரில் சகோதரி கிறிஸ்டைன் ... Read More »

நீயே அது!!!

நீயே அது!!!

ஒரு தேவன் மற்றும் ஒரு அசுரனும் ஆன்மாவைப் பற்றி அறிவதற்காக் முனிவர் ஒருவரிடம் பல வருடங்கள் கல்வி பயின்றனர். இறுதியில் ஒரு நாள் அம்முனிவர் அவர்களிடம், நீங்கள் தேடும் ஆன்மா நீங்களே எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார். அசுரனின் இயல்பே அறிவீனமும், மடத்தனமும்தானே. எனவே அவன் மேற்கொண்டு சிந்திக்கவில்லை. உடலே ஆன்மா என்று பூரண திருப்தி அடைந்துவிட்டான். தேவனும் முதலில் இந்த உடலே ஆன்மா என நினைத்தான். அவன் தூய இயல்பு படைத்தவன், ஆதலால் சிறிது ... Read More »

எது மாயை?

எது மாயை?

புராணக் கதை ஒன்று இருக்கிறது. ஒருமுறை நாரதர், ஸ்ரீகிருஷ்ணரைப் பார்த்து, பகவானே, மாயையை எனக்குக் காட்டுங்கள் என்றார். சில நாட்களுக்குப் பின்னர், கிருஷ்ணர் நாரதரைத் தன்னோடு ஒரு பாலைவனத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு வெகு தூரம் பயணித்ததால் தாகம் ஏற்படவே, அவர் நாரதரை எங்கிருந்தாவது சிறிது தண்ணீர் கொண்டு வர சொன்னார். நாரதர் ஒரு வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினார். அழகான இளமங்கை ஒருத்தி கதவைத் திறந்தாள். அவளது அழகில் மயங்கிய அவர் தண்ணீரை மறந்தார், பகவானை ... Read More »

கடமையே கடவுள்!!!

கடமையே கடவுள்!!!

ஒரு துறவி நெடுங்காலம் காட்டில் ஒரு மரத்தடியில் தவமியற்றிக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் தலைமீது சில சருகுகள் வீழ்ந்தன. அவர் கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தார். மேலே மரக்கிளையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த காகமும், கொக்கும் அவரது உக்கிரப் பார்வையினால் எரிந்து சாம்பலாகின. தனது தவ ஆற்றலைக் கண்டு துறவிக்கு மிக்க மகிழ்ச்சி. சிறிது நேரத்திற்குப் பின்னர் அவர் அருகிலுள்ள கிராமத்தில் ஒரு வீட்டின் முன் பிச்சை கேட்டு நின்றார். கொஞ்சம் பொறு என வீட்டினுள் இருந்து ஒரு பெண்மணியின் ... Read More »

Scroll To Top