Home » தன்னம்பிக்கை

Category Archives: தன்னம்பிக்கை

நம்புங்கள்..! நீங்கள்தான் சிறந்தவர்..!!!

நம்புங்கள்..! நீங்கள்தான் சிறந்தவர்..!!!

“நீங்கள்தான் உலகிலேயே அழகானவர். அறிவுள்ளவர். அனைவரிடமும் அன்பு பாராட்டுபவர். உங்கள் திறமையில் எந்தச் சந்தேகமுமில்லை. நீங்கள் படிக்கின்ற பாடக் கல்வியில் தலை சிறந்தவர்.” என்று உறுதியாக நம்புங்கள். ஆனால், நீங்கள் படிக்கின்ற கல்வியின் கூடவே கொள்ள வேண்டிய மென் திறன்தான் உங்களைத் தனித்திறனுள்ளவர்களாகக் காட்டி மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி, உங்களை உயர்நிலையை அடையச் செய்யும். நாம் நம் முன்னேற்றத்தில் கவனம் கொள்ளாமல் அடுத்தவர்களைப் பற்றி அதிகம் சிந்திக்கிறோம். நமக்குப் பிடித்த நபர்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்ற ... Read More »

வெற்றிமொழி!!!

வெற்றிமொழி!!!

வெற்றிமொழி‬ – நெப்போலியன் 1883-ஆம் ஆண்டு பிறந்த நெப்போலியன் ஹில், அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். 1908-ஆம் ஆண்டு, புகழ்பெற்ற தொழிலதிபர் ஆண்ட்ரூ கார்னெகியை சந்தித்ததே நெப்போலியன் ஹில்லின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. வெற்றிக்கான கார்னெகியின் எளிய செயல்முறை, ஹில்லின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நெப்போலியன் ஹில்லின் “திங்க் அண்ட் க்ரோ ரிச்” என்னும் புத்தகம், மிகவும் பிரபலமாக விற்பனையான சிறந்த புத்தகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கை முறைக்கான இவரது கருத்துகள் உலகளவில் மிகவும் ... Read More »

தத்துவங்கள்!!!

தத்துவங்கள்!!!

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். – விவேகானந்தர் ========================= வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது இறுதியானதுமல்ல! ========================= ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம். ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம். ========================= நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும். ========================= நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன; ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. ... Read More »

மாத்தியோசிங்க‬!!!

மாத்தியோசிங்க‬!!!

எனக்கு எப்போதும் தோல்விதான், கொஞ்சம்கூட ராசி இல்லாதவன், வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று பலரும் புலம்பக் கேட்டிருப்போம். ஒரு வியாபாரத்தைத் தொடங்கி, அதில் சின்னஞ்சிறு சறுக்கல் வந்தால்கூட சோர்ந்து போய்விடும் பலரையும் பார்த்திருப்போம். இதில் உண்மை என்னவெனில், எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாகச் செய்ய நினைத்து அதில் தோல்வி அடைந்தவர்கள் அதே செயலில் சின்னச் சின்ன மாற்றங்களை மட்டும் செய்துவிட்டால் வெற்றிக்கனியைச் சுலபமாகச் சுவைக்க முடியும். வாடிக்கையாளர்கள் தேடிவந்து வாங்குவதைவிட, நாமே தேடிப்போய் ... Read More »

தன்னம்பிக்கை – 2

தன்னம்பிக்கை – 2

* மனிதனின் எண்ணத்தையும் மீறி சிலநேரங்களில் கால சக்தி வேலை செய்வதுண்டு. எனவே, எது நடந்தாலும் அதை ஏற்கும் வகையில், மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். * வாழ்க்கையில் எப்போதும் சமாதானத்தையும், சகிப்புத்தன்மையையும் நமது லட்சியங்களாக கொள்ள வேண்டும். * கடந்து போன நாட்களும், செயல்களும் மீண்டும் வருவதில்லை. எனவே, கடந்த கால வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க கூடாது. * அறிவு தான் அரசன். மனமும், இந்திரியங்களும், உடம்பும் அறிவுக்கு அடங்கி வாழ வேண்டும். * ஒவ்வொரு ... Read More »

ஜேம்ஸ் வாட் சிந்தனைகள்!!!

ஜேம்ஸ் வாட் சிந்தனைகள்!!!

நீராவி இயந்திரத்தை கண்டு பிடித்து தொழில் புரட்சி செய்த ஜேம்ஸ் வாட் சிந்தனைகளுடன்.. 01. நீராவி இயந்திரத்தைக் கண்டு பிடித்த ஜேம்ஸ்வாட் குடும்பம் வசதியால் உயர்ந்த செல்வந்தக் குடும்பம். ஆனால் அந்தக் குடும்பம் உலகத்தில் சிறந்த செல்வம் கல்விதான் என்று நம்பியது,அந்தக் குடும்பத்தில் இருந்துதான் ஜேம்ஸ்வாட் உருவானார். 02. பெற்றோர் கல்வியே செல்வம் என்று கருதிய காரணத்தால் அவர்கள் மகன் ஜேம்ஸ்வாட் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென அல்லும் பகலும் பாடுபட்டார். 03. பாடசாலைக் கல்வியையும், அதை ... Read More »

சந்தோசம் எனும் சவாரி!!!

சந்தோசம் எனும் சவாரி!!!

சந்தோசம் எனும் சவாரி போவோம்… சந்தோசத்தை தன்னுள்ளே வைத்திருக்கிறவன் அதை வெளியே தேடிக்கொண்டிருக்க மாட்டான். அதற்காக அவன் அலையப்போவதுமில்லை. சந்தோசம், சந்தோசமாக இருக்கவேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில்தான் இருக்கிறது. கவலைப் படுவதற்கான காரணிகளைத்  தேடித்தேடி கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிற நீங்கள்தான் அங்கிருக்கும் சந்தோசத்திற்கான வெளியை மறைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். கேவலம் டிபன் பாக்ஸில் இருக்கிற உப்புமாவிற்கு ..உங்கள் சந்தோசத்தைக் கெடுக்கும் வல்லமை இருக்குமென்றால் உங்களின் சந்தோஷ உணர்வு எவ்வளவு பலவீனமானதாக இருக்கிறது என்று யோசித்துப்பாருங்கள். ஏன் இப்படித் தேடித்தேடிக் கவலையை அனுபவிக்க நீங்கள் உங்கள் ... Read More »

வெற்றிக்கு!!!

வெற்றிக்கு!!!

1.தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாய் உழையுங்கள்.., 2.வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான்… 3.வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்…, 4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏற்வேண்டும்…, 5.ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது, மற்றொன்று நாமே ஏறுவது…, 6.வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது…, 7.பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் மாற்றி கொள்ள வேண்டும். ... Read More »

உழைப்பால் வரும் தன்னம்பிக்கை!!!

உழைப்பால் வரும் தன்னம்பிக்கை!!!

உழைப்பால் வரும் தன்னம்பிக்கை: “உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள், உங்களது சுய ஆற்றல்களில் நியாயமான நம்பிக்கை வைக்காமல் உங்களால் வெற்றிபெறவோ, மகிழ்ச்சியை அனுபவிக்கவோ முடியாது” என நீங்கள் பேசியதைக் கேட்டேன். என் மீது எப்படி நான் நம்பிக்கை கொள்வேன்? குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தத் திறமைகளும் என்னிடம் இல்லை. நான் குழப்பத்தில் இருக்கிறேன். நீங்கள் சொல்வது உண்மைதான் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், நீங்கள் சொல்வது எனக்குப் பொருந்தாது என ... Read More »

நாலு வார்த்தைக்கு நன்றி!!!

நாலு வார்த்தைக்கு நன்றி!!!

அந்த நாலு வார்த்தைக்கு நன்றி! சர்.வின்ஸ்டன் சர்ச்சில், இங்கிலாந்தில் பிரதமராக இருந்தவர். சர் பட்டம் வாங்கிய இவர், பள்ளிப்படிப்பில் எப்படி தெரியுமா? இவருக்கு ஆங்கிலமே வராது. ஆங்கிலத்தில் பெயிலானதற்காக, ஒரே வகுப்பில் மூன்று வருஷம் இருந்தார். இப்படிப்பட்டவர்,விடாமுயற்சியுடன் படித்து “சர்‘ பட்டம் வாங்குமளவு தகுதி பெற்றார். வின்ஸ்டன் சர்ச்சிலின் தலையில் தொப்பி, கையில் ஊன்றுகோல், வாயில் சுருட்டு எப்போதும் புகைந்து கொண்டிருக்கும். ஒருமுறை, அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டார். ஆங்கிலத்தில் “வீக்‘ ஆக இருந்த அவர், ... Read More »

Scroll To Top