விரட்டியடித்த மழையில் நண்பரின்வீட்டில் சிக்கிக்கொண்டார் நாராயணசாமி.
மழை நின்றதும் கிளம்பலாம் என்ற எண்ணத்தில், நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார் நாராயணசாமி. ஆனால், நன்றாக இருட்டிய பிறகும் மழை நின்றபாடில்லை.
என்ன செய்வது என நாராயணசாமி யோசித்துக்கொண்டிருக்கையில், நண்பர் சொன்னார்,
” நாராயணசாமி…இந்த மழையில் நீங்கள் வீட்டுக்குப் போக முடியாது.இன்று இரவு எங்கள் வீட்டிலேயே சாப்பிடுங்கள்”.
வேறு வழியில்லை. இவரும் ஒப்புக்கொண்டார் .
நாராயணசாமிக்கும் சேர்த்து உணவு தயாரிக்க மனைவியிடம் சொல்ல வீட்டுக்குள் சென்றார் நண்பர்.
பின் திரும்பி வந்து பார்த்தபோது நாராயணசாமியைக் காணவில்லை.சிறிது நேரம் சென்றபின் நாராயணசாமி மழையில் நனைந்து கொண்டே வந்தார்.
“அடடா,மழையில் நனைந்துகொண்டு எங்கே போனீர்கள்?” என்று நண்பர் கேட்டார்.
நாராயணாசாமி நிதானமாகச் சொன்னார்,
“என் வீட்டிற்கு சென்று என் மனைவியிடம், இன்றிரவு உங்கள் வீட்டில் விருந்து என்பதையும் அதனால் சமைக்க வேண்டாம் என்றும் சொல்லிவிட்டு வந்தேன்”.