ஒரு குளத்தடியில் ஒநாய் ஒன்று கடும் பசியோடு மீன் ஏதும் வந்தால் பிடிப்போம் என்று காத்துக்கொண்டு இருந்தது .! ஒரு மீனும் வரவில்லை …சிறுது நேரத்தில் ஒரு ஆமை வந்தது ..அதை ஒநாய் பிடித்து விட்டது அதை விழியே எடுத்து நிலத்தில் உருட்டி உருட்டி கடித்தது கடைசியில் ஓநாயின் வாயில் இரத்தம் தான் வந்தது …ஆமை ஓடை கடிக்க முடியுமா ? ஆமை சொன்னது நீ என்னை தண்ணீரில் ஊற வைத்தால் இலகுவாக கடிக்கலாம் என்றது ..! ... Read More »
Monthly Archives: March 2017
அப்பாவும் மகனும்
March 26, 2017
ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள் . அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது.. கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்… பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது ... Read More »
டாக்டர் ஹெட்கேவார்
March 26, 2017
டாக்டர் ஹெட்கேவார் (1889 யுகாதி – மறைவு: 1940, ஜூன் 21) “கோயிலைப் போலே உடல்கள் புனிதம் மாந்தர் அனைவரும் உபகாரி ! சிங்கத்துடனே விளையாடிடுவோம் ஆவினம் எங்கள் அன்புத்தாய்….” – என்ற அற்புதமான, அர்த்தமுள்ள வரிகளை சுமந்துகொண்டு வந்தது அந்தப் பாட்டு. இனிமையான குரலுடன் மனதையும் அறிவையும் கிறங்க வைத்த பாடல் வந்த திசை நோக்கி தானாக நடந்தது எனது கால்கள் பதினைந்து முதல் முப்பதுக்கும் இடைப்பட்ட வயதுள்ள சுமார் 20 இளைஞர்கள் வட்டமாக அமர்ந்திருந்தனர்; ... Read More »
அன்றாடம் பின்பற்ற வேண்டிய… சில உடல் நலக் குறிப்புகள்!
March 25, 2017
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! 2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. 3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி (15 மில்லி) எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை தினமும் சில மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால், உடல் எடை குறையும். 4. ... Read More »
தைரியசாலி
March 25, 2017
ஒரு பெரிய பாறையின் மீது செம்மறி ஆடு அமர்ந்து அசைபோட்டுக்கொண்டு இருந்தது ..!அந்த சமயம் ஒரு சிங்கம் அதன் முன் தோன்றியது செம்மறி ஆடு கொஞ்சமும் பயப்பிட வில்லை அசைபோட்டுக்கொண்டு இருந்தது ..! ஆய் நான் ராஜா வந்திருக்கிறேன் பயம் இல்லாமல் அசைபோட்டுக்கொண்டு இருக்கிறாயே ..? என்ன அசை போடுகிறாய் …? நான் இந்த மலையை கொஞ்சம் கொஞ்சாமாக அசைபோட்டுக்கொண்டு இருக்கிறேன் ..என்றது பாறையை மென்று விழுங்கியதும் உன்னையும் விழுங்குவேன் என்று உரத்த தொனியில் கூற சிங்கம் ... Read More »
மாய குதிரை
March 25, 2017
நொடிக்கும் குறைவான நேரத்தில், ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மணல் மேட்டில் குடை பிடித்து நடக்க இந்த மனத்தால் முடிகிறது. அடுத்த கணம், என் வீட்டு மொட்டைமாடியில் என்றோ விட்டு சென்ற தோழியுடன் அமர்ந்து கதை பேச முடிகிறது…. மனம் எங்கு வேண்டுமானாலும் செல்லும் மாய தந்திரம் படைத்தது.. ஆனால் எங்கோ சென்று விட்ட தோழியை அழைத்து வந்து வீட்டு மொட்டை மாடியில் அமர வைத்து கதை பேசுவது மனதின் பயணமில்லை….. அது கற்பனை… சரி, ... Read More »
அடியார்க்கு ஆடை தந்து சிவம் உணர்ந்தவர்
March 25, 2017
நேச நாயனார் (திருநட்சத்திரம்: பங்குனி-ரோகிணி) (மார்ச் 25) “மன்னியசீர் மறைநாவன் நின்றவூர் பூசல்வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்”-திருத்தொண்டத்தொகை. நல் ஒழுக்கம் உடைய பெரியோர்கள் நிலைபெற வாழும் காம்பீலி என்னும் பழம்பதி (தொன்மையான இடம்) ஒன்றுண்டு. அதில் அறுவையார் குலத்தில் செல்வம் மிக்க குடியில் வந்தவர் நேசர் என்பவர். அவர் இடையறாது சிவனடியார்களைப் போற்றி வந்தார். ஒரு போதும் சிவனடிச் சிந்தை மறவார். வாக்கினால் திருவைந்தெழுத்து ஓதுவதையும் மறவார். தமது மரபின் கைத்தொழிலான நெசவை அவர் சிவனடியர்களைக்காகவே செய்துவந்தார். ... Read More »
உப்பு!!!
March 24, 2017
உப்பு மிக சாதாரணமாக நாம் அன்றாட உணவில் சேர்க்கும் ஒன்று. கடலே இதன் இருப்பிடம். ஒரு லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு கிடைக்கும். 6 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உப்புக்கு எத்தனை முக்கியத்துவம் அளித்து உபயோகித்துள்ளனர் என்பதை ஆய்வுகளும் குறிப்புகளும் கூறுகின்றன. உப்புக்காக யுத்தங்களே நடந்துள்ளன என்றால் நம்ப முடிகின்றதா? ஆனால் இது உண்மை. பண்ட மாற்று வியாபாரத்தில் உப்புக்காக தங்கத்தை கூட கொடுத்துள்ளனர் என்றால் உப்பின் முக்கியத்துவத்தை அறியலாம். கடல் நீரை பாத்தி ... Read More »
பொறுமையும் பொறுப்பும்
March 24, 2017
விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், ஆயிரம் முறைகளுக்கு மேல் தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின் மின்சார பல்பை கண்டுபிடித்தார். ஆனால் வெற்றிக்குப் பின்னரும் அந்த ‘பல்பு’ எடிசன் உதவியாளரால் உடைத்து நொறுக்கப்பட்டது. அப்போது எடிசன் எப்படி நொந்து போயிருப்பார்…? அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் எடிசன் பொறுமையுடன் நடந்து கொண்ட சுவாரஸ்ய சம்பவம்… தனது நண்பர்களுக்கும், சக விஞ்ஞானிகளுக்கும் மின்சார பல்பை ஒளிர வைத்துக் காட்டுவதற்காக எடிசன், ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார், அவரது ஆய்வகத்தின் ... Read More »
தங்க நாணய கதை
March 24, 2017
ஒரு ஊரில் ராமசாமி என்ற சுயநலமிக்க செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஊருக்கு சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டார். இதனால் வருத்தமடைந்த செல்வந்தர் தனது நண்பர் குருவிடம் நடந்ததை கூறி புலம்பினார். சில நாட்கள் கழித்து குரு ஊரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டார். அந்த பை ராமசாமியுடையது என தெரிந்துகொண்ட குரு அதை அவரிடம் கொடுத்தார். குருவிடமிருந்து தங்க நாணயங்களை பெற்றுக்கொண்ட ... Read More »