Home » படித்ததில் பிடித்தது » அரசனுக்கே விளங்காத‌ புதிர்..?
அரசனுக்கே விளங்காத‌ புதிர்..?

அரசனுக்கே விளங்காத‌ புதிர்..?

அரசன் ஒருவன் மாறுவேடத்தில் வயல் வழியே சென்று கொண்டிருந்தார் ..அங்கு வயல்கள் உழவு வேலைகளில் ஈடுபட்டுகொண்டிருந்தன …!

அந்த வழியால் வந்த மூன்று பெண்கள் வந்தனர் ..

அவர்களில் ஒருத்தி -இந்த நிலம் முகத்துக்குத்தான் ஆகும் – என்றாள்…!

இல்லை இல்லை இது -வாய்க்கு தான் ஆகும் -என்றாள் …!

மூன்றாவது பெண் சொன்னாள் இல்லை இல்லை..
இது -பிள்ளைக்குத்தான் – ஆகும் என்றாள் …!

அரசனுக்கு எவ்வளவோ சிந்தித்தும் அவர்கள் பேசியது விளங்கவில்லை …!

மாறு வேடத்தை கலைத்த ராஜா மூவரையும்
அழைத்து விளக்கம் கேட்டார் …?
*
*
*
*
*

விடை :

முகத்துக்கு உதவும் என்றது :மஞ்சள் பயிரிட உதவும் …

வாய்க்கு உதவும் என்றது :வெற்றிலை பயிரிட உதவும் …

பிள்ளைக்கு உதவும் என்றது :தென்னம் பிள்ளை பயிரிட உதவும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top