Home » சிறுகதைகள் » தந்தைக்கு பாடம்!!!
தந்தைக்கு பாடம்!!!

தந்தைக்கு பாடம்!!!

விடுமுறை நாள் என்றாலே வீட்டில் அவ்வப்போது செல்ல சண்டைகள் நடக்கும்.

குடும்பம் என்றால் சண்டைகள் நடப்பது சகஜம் தானே.
இன்று அந்த செல்ல சண்டை நடந்தது மகளுக்கும் தாய்க்கும் நடுவே.

யாரின் தந்தை அதிக பாசக்காரர் என்ற சண்டை தான் தாய்க்கும், மகளுக்கும் நடுவே..

நான் எதைக்கேட்டாலும் வாங்கித்தருவார் என் தந்தை என்றாள் தாய்.

நான் கேட்காமலேயே அனைத்தையும் வாங்கித்தருவார் என் தந்தை என்றாள் மகள்.

என்னை தங்கத் தட்டில் தாங்கியவர் என் தந்தை என்றாள் தாய்.

என்னை தன் நெஞ்சில் போட்டு தாங்கியவர் என்றாள் மகள்.
செல்ல சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தது.

என் தந்தை தான் பாசக்காரர் என்னை அடிக்கவே மாட்டார் என்றாள் தாய்.

இல்லை இல்லை… என் தந்தை தான் பாசக்காரர் மற்றவர்கள் என்னை அதட்டக் கூடவிடமாட்டார். என் தந்தை உங்களை அடிப்பது தெரிந்து மௌனமாக இருக்கிறாரே என்தாத்தா. அப்போ என் தந்தை தானே பாசக்காரர் என்றாள் மகள் விளையாட்டாக.

இதை கேட்டுக்கொண்டிருந்த தந்தைக்கு தூக்கிவாரிப் போட்டது.

தான் தன் மகளை நேசிப்பது போல் தானே தன் மனைவியையும் அவரின் தந்தை நேசித்திருப்பார் என்று உணர்ந்தார்.

மகளின் செல்ல சண்டை தந்தைக்கு பாடம் புகட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top