Home » சிறுகதைகள் » தாய் சொல்!!!
தாய் சொல்!!!

தாய் சொல்!!!

ஒரு குளத்தில் அம்மா மீனும்….அதனுடைய குட்டி மீனும் இருந்தன…அம்மா மீன் குட்டி மீனுக்கு நீந்த கற்றுக்கொடுத்தது.

நாளாக ஆக… அம்மா மீனுக்கு வயதானதால்..அதனால் வேகமாக நீந்த முடியவில்லை..

ஆனால் குட்டி மீனோ..அதி வேகமாக நீந்த ஆரம்பித்தது…அதனால் அதற்கு கர்வம் ஏற்பட்டது…அம்மா மீனை கிண்டல் செய்தது…’உன்னால்.. உன் உணவை பெறக்கூட நீந்த முடியவில்லை..ஆனால் என்னைப்பார்..எவ்வளவு அழகாக நீந்துகிறேன்…’என டைவ் எல்லாம் அடித்து நீந்தியது…அம்மா மீன் சொல்வது எதையும் குட்டி மீன் கேட்பதில்லை..

ஒரு நாள் … மீன் பிடிப்பவன் ஒருவன் …மீன் பிடிக்க தூண்டிலுடன் வந்தான்….கரையில் அமர்ந்து …சிறு புழுவை தூண்டிலில் சொருகி …குளத்தில் வீசினான்..

புழுவைத் தூண்டிலில் பார்த்ததும் ..அதை பிடித்து உண்ண குட்டி மீன் விரைந்தது…உடனே ..தாய் மீன் அதனிடம் போகாதே…அது உன்னைப் பிடிக்க வைக்கும் தூண்டில் ..அதில் மாட்டினால் நீ இறந்து விடுவாய் ‘என்றது.

‘உனக்கு முடியாததால்… எதைப்பார்த்தாலும் நீ சந்தேகப்படுகிறாய்..அந்தப் புழுவை நான் பிடித்து வருகிறேன் பார்’ என்றது குட்டி மீன்.அதற்குள் வேகமாக வந்த வேறொரு மீன் தூண்டிலைக் கவ்வி அதில் மாட்டிக்கொண்டு உயிரிழந்தது..

பயத்துடன் குட்டி மீன் தாயைப்பார்த்தது….பின் ‘அம்மா நீ சொன்னது உண்மை..உன் பேச்சைக் கேட்காமல் நான் தூண்டிலைக் கவ்வியிருந்தால் அந்த மீனுக்கு ஆன கதியே எனக்கும் ஆகியிருக்கும்..உன்னால் என் உயிர் காப்பாற்றப்பட்டது. தாய் சொல்லை மீறக்கூடாது என்பதை உணர்ந்து கொண்டேன்,,’என அம்மா மீனிடம் மன்னிப்புக் கேட்டது.

குழந்தைகளே.. நாமும் நம்மை விட மூத்தவர்கள் சொல்லும் அறிவுரைகளை கேட்டு நடக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top