Home » உடல் நலக் குறிப்புகள் » வழுக்கை தலையா ? இனி கவலை வேண்டாம்!!!
வழுக்கை  தலையா ? இனி கவலை வேண்டாம்!!!

வழுக்கை தலையா ? இனி கவலை வேண்டாம்!!!

வழுக்கை ஒரு இரவில் ஏற்படும் விவகாரம் அல்ல. இது ஒரு நீண்ட கால செயல்பாடு ஆகும்.உலக அளவில் 40 சதவிகிதம் ஆண்கள் வழுக்கையால் பாதிக்கப்படுகின்றனர் . ஆனால் பெண்கள் வெறும் 15 சதவிகிதம் அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

34

உண்மையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக முடி உதிர்தல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். ஆனால்பெண்கள் முடி உதிர்தல் பிரச்சினை ஆரம்பித்த உடனேயே, முடியை சரியாக பராமரிக்க ஆரம்பித்து விடுவதால், வழுக்கை தலை ஏற்படாமல்தப்பிக்கின்றனர்.

imgres

ஆகவே வழுக்கைத் தலை பிரச்சினையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. இத்தகைய முறையான பராமரிப்பின்மையினால், ஆண்கள் இளம் பருவத்திலேயே முடி உதிர்தல் பிரச்சினைக்கு உள்ளாகி, வழுக்கையை பெறுகின்றனர்.

images

ஆண்களோ, அதிகப்படியான வேலைப் பளுவினால், முடியை சரியாக பராமரிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் வழுக்கை தலையை அடைகின்றனர். என்ன செய்வது, வழுக்கை தலை வராமல் தடுக்க வேண்டுமெனில் முடியை பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது.

imgres

எனவே ஆண்களே! நேரம் கிடைக்கும் போது, வெளியே அதிகம் ஊர் சுற்றாமல், சற்று முடியின் மீது அக்கறைகொண்டு, சில எளிமை யான முடி பராமரிப்புக்களை மேற் கொள்ளுங்கள்.

உலக அளவில் ஆண்களின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று வழுக்கைத்தலை. ஆண்களின் அழகுக்கு மிகப்பெரிய எதிரியாக வழுக்கைத் தலை பார்க்கப்படுகிறது. இதை தடுக்க விரும்பாத ஆண்களே இல்லை எனலாம்..

images

தலைப்பாகை துவங்கி, தொப்பியாக வளர்ந்து இன்றைய விக் வரை வழுக்கையை மறைக்க ஆண்கள் பலவகையான தந்திரங்களை கையாண்டு வந்திருக்கிறார்கள். வழுக்கையை தடுக்கும் மருந்துகள், முடி உதிராமல் தடுக்கும் மருந்துகள், உதிர்ந்த முடி வளர்க்கும் மருந்துகள், கடைசியாக முடிமாற்று அறுவை சிகிச்சை முறை என்று பலவகையான மருத்துவ தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இவை எதுவுமே வழுக்கை பிரச்சனைக்கான நீடிக்கத்தக்க நிரந்தர தீர்வை தரவில்லை என்றே பார்க்கப்படுகிறது.

ஒரு சிலர் இதை மிக பெரிய பதிப்பாக எடுத்து கொள்ளவில்லை என்றாலும் மனதளவில் மிகவும் பாதிப்பு அடைவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

Hair-Growth-for-Baldness

காரணங்கள் மற்றும் தீர்வுகள்

காரணங்கள்

1. மரபுசார்ந்த விஷயங்கள் :

உங்கள் குடும்பத்தில் உங்கள் பெற்றோர்களுக்கோ அல்லது அவர்கள் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கோ இருக்கும் பட்சத்தில் …………. மரபணுவின் மூலம் கடத்தப்படுவது ( 80% வழுக்கை பிரச்சன்னைக்கு இதுவே காரணமாகிறது )

images

2. நோய்கள்  :

நீங்கள் டைபாய்ட் அல்லது மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் உங்களை தாக்கி இருந்து இருந்தால் அதன் மூலம் வழுக்கை விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம் .

images

3. பராமரிப்பு  :

பல்வேறு ரசாயனங்கள் கலந்த ஷாம்பூ , முடி சாயங்கள் போன்றவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்தி இருந்தாலும் வழுக்கை விழுவதற்கு தற்காலங்களில் முக்கிய காரணமாகிறது .

imgres

இவை அனைத்தும் கெரட்டின் உற்பத்தியை மட்டுபடுத்தி உங்கள் மயிர்க்கால்களை செயல் அற்றதாக மாற்றுகின்றன.இதன் காரணமாக இளம் பருவத்திலேயே வழுக்கை ஏற்படுகிறது .

imagesimages

தீர்வுகள் :

1. தினமும் இரவில் ஆலிவ் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் சம அளவில் கலந்து 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். இதன் மூலம் உங்கள் மயிர்க்கால்கள் வலுவடையும் மற்றும் மேலும் வழுக்கை பரவாமல் தடுக்கும்.

imgres

2. தினமும் குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் இரவு ஒரு முறையும் வெங்காய சாரை கொண்டு 20 நிமிடம் மசாஜ் செய்யவும். இது புதிய முடி மீள் உருவாக்கத்திற்கு மிகவும் பயன் உள்ளதாகும். பல ஆராய்ச்சின் முடிவில் இவை நிரூபிக்கப்பட்டுள்ளன.

 

images

3. அதிகம் புரத சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்களை உட்க்கொல்லுங்கள். இது புதிய செல் வளர்ச்சிக்கும் , புதிய மயிர்க்கால்கள் உருவாவதற்கும் மிகவும் உறுதுணை புரியும். (  ( இறைச்சி , மீன் , பீன்ஸ் , முட்டை, பாலாடை , பருப்புகள் மற்றும் விதைகள் (பூசணி, ஸ்குவாஷ், மற்றும் தர்பூசணி விதைகள், வேர்கடலை, முந்திரி, பாதாம்) போன்ற உணவுகளில் அதிக அளவு ப்ரோட்டின் உள்ளது.))

imgres

4. இரும்பு சத்து நிறைந்த உணவு பொருட்கள்  ( முருங்கைக் கீரை மற்றும் முளைக்கீரை அகத்திகீரை, புளிச்சகீரை, மற்றும் அரைக்கீரை …)

images

5. கிரீன் டீ குடியுங்கள். இதில் DHT (dihydrotestosterons) கொண்டிருக்கிறது. இது வழுக்கை ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.

imgres

6. தினமும் தண்ணீர் நிறைய அருந்தவும்.

7. வைட்டமின்கள் E மற்றும் D முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

images

8. குளிப்பதற்கு ஷாம்பூ மற்றும் பிற ரசாயனம் கலந்த சோபுக்களை தவிர்த்து கடலை மாவு அல்லது அரப்பு போன்ற இயற்க்கை பொருட்களை உபயோகிக்கவும் .

9. மன அழுத்தம் இல்லாமல் பார்த்து கொள்ளவும்.

மேற்க்கூறிய அனைத்தையும் தொடர்ந்து கடைப்பிடிக்கும் பட்சத்தில் 6 வாரங்களில் வித்தியாசத்தை உணர்வீர்கள்.

மருத்துவரீதிலான செயற்கை முறை :

ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் டர்ரம் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையமும் இணைந்து செய்த ஆய்வின் முடிவில், மனிதர்களின் முடியை செயற்கையாக வளர்ப்பதற்கான புதிய உத்தி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது மனிதர்களின் முடியின் அடிப்பகுதியில் இருக்கும் நுண்ணிய திசுக்களை எடுத்து, அவற்றை பரிசோதனைக்கூடத்தில் ஊட்டச்சத்து மிக்க சூழலில் வளர்த்து, அப்படி வளர்க்கப்பட்ட அந்த திசுக்களை வழுக்கையான பகுதியில் இருக்கும் தோலுக்கு அடியில் வைத்தால், அந்த பகுதியில் இருந்து புதிதாக முடிவளர்க்க முடியும் என்று இந்த விஞ்ஞானிகள் செய்து காட்டியிருக்கிறார்கள்.
மொத்தம் ஏழுபேரிடம் செய்த பரிசோதனைகளில், ஐந்துபேருக்கு ஆறுவாரங்களில் புதிய முடி வளர்வதை இவர்கள் கண்டிருக்கிறார்கள். அதே சமயம், இந்த பரிசோதனைகள் ஆரம்பகட்டத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கும், டர்ரம் பல்கலைக்கழக பேராசிரியர் கோலின் ஜஹோடா, தமது இந்த ஆய்வின் முடிவுகள் வழுக்கைத் தலையர்களுக்கு பயன்படுவதற்கு கடக்கவேண்டிய தடைகள் இன்னும் சில இருக்கின்றன என்கிறார்.
ஆனாலும் இந்த ஆய்வின் முடிவு, வழுக்கையை முழுமையாக நிரந்தரமாக குணப்படுத்த முடியும் என்பதற்கான சாத்தியப்பாட்டை நிகழ்த்திக்காட்டியிருப்பதாக கூறுகிறார்.

எளிய பராமரிப்பு வழிகள்:-

*எண்ணெய் மசாஜ்: அனைத்து ஆண்களும் முடி உதிர்தலைத் தடுக்க முதலில்செய்ய வேண்டியது, வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு பாதாம், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்களைக் கொண்டு நன்கு தலைக்கு மசாஜ் செய்து, ஊற வைத்து குளிப்பது தான். இதனால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, முடி நன்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.

imgres

*தேங்காய் பால்: தேங்காய் பால், முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, முடியில் ஏற்படும் வறட்சியை தடுக்கும். எனவே தேங்காய்பாலை தலைக்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். குறிப்பாக இந்த முறையால் முடி நன்கு மென்மையாகும்.

images

*கற்றாழை: முடி வலிமையோடு வளர வேண்டுமெனில், கற்றாழை ஜெல்லைக் கொண்டு தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், முடி உதிர் தல் குறைந்து, முடிவேரில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கலாம்.

imgres

*வேப்பிலை: வேப்பிலை அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், தலையில் உள்ள அல்கலைன் சீராக இருப்பதோடு,பொடுகு மறைந்து முடி உதிர்தலும் நிறுத்தப்படும். மேலும் இந்த முறையை இன்னும் சிறப்பானதாக மாற்றுவதற்கு, வேப்பிலை பேஸ்டுடன், தேன் மற்றும் ஆலிவ் ஆயிலை கலந்து தேய்க்கலாம்.

images

*முட்டை: முடி பராமரிப்பில் முடிக்கு புரோட்டீன் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். முடி நன்கு வலுவோடும், அடர்த்தியாகவும் வளர வேண்டு மெனில், இந்த புரோட்டீன் சிகிச்சையை வாரத்திற்கு 3 -4 முறை மேற் கொள்ள வேண்டும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், முட்டை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்து, ஈரப்பத முள்ள முடியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும்.

images

*வெந்தயம்: 2-3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை நீரில் 8-10 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடி உதிர்வது குறைவது மட்டுமின்றி, முடியின் வளர்ச்சியும் அதிகரித்து, பொடுகுத் தொல்லையும் நீங்கும். *அவகேடா: அவகேடா மற்றும் வாழைப்பழத்தை நன்கு மசித்து, தலையில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலசினால், முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

 

imgres

*ஆரஞ்சு: தலையில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் பொடுகு இருந்தால், அப்போது அதனை போக்குவதற்கு, ஆரஞ்சு பழத்தின் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, தலை மற்றும் முடியில் தடவி ஊற வைத்து, குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

images

*மருதாணி இலை: நல்ல கருமையான மற்றும் அடர்த்தியான முடி வேண்டுமெனில், மருதாணி இலை யை அரைத்து, முடியில் தடவி, மூன்று மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

imgres

*எலுமிச்சை சாறு: முடி பராமரிப்பில் அதிகம் பயன்படுவது எலுமிச்சை என்பது தெரிந்த விஷயம் தான். அத்தகைய எலுமிச்சையின் பாதியை தேங்காய் எண்ணெயில் பிழிந்து, தலையில் தடவி, 3-4 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். வேண்டுமெனில் இந்த முறையை இரவில் படுக்கும் போது செய்து, தலையில் ஒரு பிளாஸ்டிக் கவரைக் கொண்டு சுற்றிக் கொண்டு தூங்கி, காலையில் குளிக்கலாம்

images

சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி உதிர்வது மற்றும் இளநரை போக்க:

1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

images

2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

imgres

3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

images

4)சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
imgres
5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

imgres

பல முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. உங்களுக்கு இலகுவானதைச் செய்து பலன் பெறுக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top