Home » 2016 » November (page 3)

Monthly Archives: November 2016

நயவஞ்சகர்களை நம்பலாமா?

நயவஞ்சகர்களை நம்பலாமா?

செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக் கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது. வேலிக்குள் முகத்தை நுழைத்துக் கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டது. ஓநாயும் “நண்பா, ... Read More »

ஒரு நிமிடக் கதை – சிரிப்பொலி!!!

ஒரு நிமிடக் கதை – சிரிப்பொலி!!!

நல்ல மழை. வானம் தூறிக்கொண்டே இருந்தது. மின்சாரம் வேறு இல்லை. ஒரே இருட்டாகவும் இருந்தது. கைத்தொலைபேசியில் மணியை பார்த்தான் சுப்பையா. அது எட்டை காட்டியது. ‘காலையிலிருந்து ஒரு போன் வரல. இதுக்கு வேற அப்பப்போ காசு போட வேண்டியிருக்கு. மணிபாக்கத்தான் இது லாயக்கு, இனிமேல் யாரு நம்ம கடைக்கு வரப்போகிறார்கள்’ என்று நினைத்தபடி கடையை அடைக்கும் முயற்சியில் இறங்கினான். சுப்பையா ஒரு நடுத்தரவாதி. ஊர் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துபவன். அவன் கடையிலிருந்து ஒரு ... Read More »

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்

*சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார். * ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள். * உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது. சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள். * தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு ... Read More »

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 7

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 7

நாவினால் சுட்டு நஷ்டப்படாதீர்கள்!  எதைக் காக்கா விட்டாலும் பரவாயில்லை நாக்கையாவது காக்கச் சொன்னார் திருவள்ளுவர். ஏனென்றால் எத்தனையோ சோகங்களுக்கு நாக்கு தான் மூல காரணமாக இருக்கின்றது. எத்தனையோ குடும்பங்களில் நாக்கினால் தான் நிம்மதி காணாமல் போகின்றது. நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி நான்கு வார்த்தைகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் பல நேரங்களில் மேலோங்குவது இயற்கை. சரியான சந்தர்ப்பம் கிடைக்கிற போது அப்படி மற்றவர்களைக் கேட்காமல் இருக்க பலராலும் முடிவதில்லை. அப்படிக் கேட்டு விடும் போது அந்த ... Read More »

இன்று: நவம்பர் 26

இன்று: நவம்பர் 26

1944: ஜேர்மனியின் வி-2 ரொக்கட் மூலம் பிரிட்டனில் வர்த்தக நிலையமொன்று தாக்கப்பட்டதில் 168 பேர் பலி. 1944: பெல்ஜியத்தின் மீது ஜேர்மனி வி-2 ரொக்கட் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தது. 1949: டாக்டர் பி.ஆர். அம்பேத்காரினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பை இந்திய நாடாளுமன்றம் அங்கீகரித்தது. 1950: கொரிய யுத்ததத்தில் தென்கொரியா மற்றும் ஐ.நா. படைகளுக்கு எதிராக சீனா பாரிய தாக்குதல்களை ஆரம்பித்தது. 1954: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தார். 1965:அஸ்டெரிஸ்-1 செய்மதியை சஹாரா பாலைவனத்தில் வைத்து ... Read More »

அந்த 100 நிமிடங்கள்! ஆளுமைத் திறன் !!

அந்த 100 நிமிடங்கள்! ஆளுமைத் திறன் !!

வாழ்க்கையில் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய குணம்பற்றிய ஒரு வரித் தலைப்பு. அதற்கு உதாரணமாக, ஒரு நிமிடத்துக்குள் படித்துவிடக்கூடிய குட்டிக் கதை. அவ்வளவுதான். இதுபோல 100 தலைப்புகள். வேறு எந்தத் தத்துவ உபதேசங்களும், ஆளுமை வளர்க்கும் அறிவுரைகளும் இல்லை. டாக்டர். எல்.பிரகாஷ் எழுதிய ‘100 MINUTES That’ll change THE WAY YOU LIVE’ புத்தகத்தில் இருந்து சில நிமிடங்கள் மட்டும் இங்கே… எதை மறக்கக் கூடாது என்பதில் கவனம் தேவை! ஆனந்த் தனது ஐந்தாவது திருமண நாள் ... Read More »

கண்ணதாசனின் தத்துவங்கள்!!!

கண்ணதாசனின் தத்துவங்கள்!!!

* துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான் ……. * எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம் * காலம் போனால் திரும்புவதில்லைகாசுகள் உயிரை காப்பதும் இல்லை ! * பெண்கள் பூ போன்றவர்கள் , மாமிசம் சாப்பிட்டு பழக்கப்பட்ட நாய்களுக்கு பூவை கையாள தெரியாது * கட்டுக்காவல் எங்கே பலமாக இருக்கிறதோ , அங்கே தான் தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கின்றன * ... Read More »

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 6

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 6

ஒரு பலம் உங்களை உயர்த்தி விடலாம்! ஒரு பலவீனம் ஒருவரை அழித்து விடலாம் என்பதைப் போலவே ஒரு பலம் ஒருவரை மிகவும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தியும் விடலாம். அப்படி உயர்த்தப்பட்ட மனிதரின் பலத்தை மட்டுமே உலகம் பார்த்து சிலாகிக்கிறதே ஒழிய அவருடைய குறைபாடுகளை உலகம் கண்டு கொள்வதில்லை. விஸ்வநாதன் ஆனந்திற்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமா என்றோ நன்றாகப் பாடத் தெரியுமா என்றோ உலகம் கவலைப்பட்டதில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமி எப்படி சமைப்பார் என்பதோ அவருக்கு வரலாறு எந்த அளவுக்குத் தெரியும் ... Read More »

கருப்பு மிளகின் மருத்துவ குணங்கள்

கருப்பு மிளகின் மருத்துவ குணங்கள்

தமிழர்களின் உணவுகளில் சேர்க்கப்படும் கருப்பு மிளகு பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது என்பது உங்களில் எத்தனைப் பேர்க்குத் தெரியும்? முதலாவதாக, கருப்பு மிளகு மனிதனின் செரிமானச் சக்தியை அதிகரிப்பதோடு, குடல் ஆரோக்கியமாக இருக்கவும் துணை புரிகின்றது. அடுத்ததாக நம் நாவின் சுவை மொட்டுகளையும் கருப்பு மிளகு தூண்டுகின்றது. இத்தூண்டுதல் நம்முடைய வயிற்றில் ஹைட்ரோகுலோரிக் எசிட் (hydrochloric acid) சுரப்பதற்கு ஒரு சமிக்ஞையாக அமைகின்றது. இந்த அமிலம் புரதச் சத்து மற்றும் இன்னும் வேறு சத்துக்களைச் செரிக்க அவசியமாகிறது. ... Read More »

இன்று: நவம்பர் 25

இன்று: நவம்பர் 25

1120 : இங்­கி­லாந்து மன்னன் முதலாம் ஹென்­றியின் மகன் வில்­லியம் அடெலின், பயணஞ்­செய்த கப்பல் ஆங்­கிலக் கால்­வாயில் மூழ்­கி­யதால் உயி­ரி­ழந்தார். 1542 : ஆங்­கி­லேயப் படைகள் சொல்வே மொஸ் என்ற இடத்தில் ஸ்கொட்­லாந்துப் படை­களைத் தோற்­க­டித்­தன. 1667 : ஆசிய, ஐரோப்­பிய எல்­லை­யி­லுள்ள கவ்­கா­சியாப் பகு­தியில் ஏற்­பட்ட பூகம்­பத்­தினால் நிகழ்ந்த சுமார் 80,000 பேர் உயி­ரி­ழந்­தனர். 1703 : பிரித்­தா­னி­யாவில் வீசிய பாரிய  சூறா­வ­ளி­யினால் 9இ000 பேர் உயி­ரி­ழந்­தனர். 1783 : கடைசி பிரித்­தா­னியப் படைகள் நியூயோர்க் ... Read More »

Scroll To Top