ஒருவன் வேலை தேடி ஒரு செல்வந்தரிடம் போனான். என்ன வேலையானாலும் செய்யத் தயார் என்றான். எவ்வளவு சம்பளமானாலும் சம்மதமே என்றான். அந்த செல்வந்தருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. இப்படியும் ஒருவன் வேலையாளாகக் கிடைப்பது என்பது அதிர்ஷ்டமே அல்லவா? அவன் தொடர்ந்து சொன்னான். “ஆனால் எனக்கு இரண்டே இரண்டு நிபந்தனைகள் …..” அவர் கேட்டார். “என்ன நிபந்தனைகள்?” அவன் சொன்னான். “முதலாவது நிபந்தனை- எனக்கு சாப்பிட்டவுடனேயே சிறிது நேரம் உறங்க வேண்டும்” அவர் சொன்னார். “அது ஒரு பிரச்னையல்ல. அடுத்த ... Read More »
Daily Archives: November 23, 2016
அறிவுபூர்வமான சிந்தனைகள்..
November 23, 2016
* எல்லோரும் சொர்க்கம் போக ஆசைப்படுகிறார்கள். ஆனால்யாருமே இறந்து போக ஆசைப்படுவதில்லை. * ஆற்றில் ஒரு கரை உடைந்தாலும் அதில் நீர் தங்குவதில்லை.குடும்பத்திலும் அப்படித்தான்.கணவன்,மனைவி இருவரில் ஒருவர் ஒழுங்காக இல்லை என்றாலும் குடும்பம் அதோ கதிதான். * சருகுகளை சேகரிப்பது குளிர் காய உதவும்.ஆனால் ஆயள் முழுவதும் சருகுகளை மட்டுமே சேர்த்துக் கொண்டிருக்க முடியாது. * அவசியப்பட்டதை வாங்குவான் கணவன். ஆசைப்பட்டதை வாங்குவாள் மனைவி. * மனைவி சிரித்துக் கொண்டே பரிமாறினால் கணவனுக்கு தொந்தி விழும். சினந்து ... Read More »
வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 4
November 23, 2016
சரியாகப் படியுங்கள்! ”கற்க கசடற” என்னும் வள்ளுவன் அறிவுரையின் படி எதையும் குறையில்லாமல், சரியாகப் படிப்பது மிக முக்கியம். ஆயிரம் பேரைக் கொல்வான் அரை வைத்தியன் என்பார்கள். எதையும் அரைகுறையாய் கற்றுக் கொள்வதில் அனர்த்தமே விளையும். குழந்தை எழுதப் பழக ஆரம்பிக்கும் போது பென்சிலைத் தவறாகப் பிடிப்பது இயல்பு. எழுத்துக்களைத் தவறாக ஒழுங்கற்ற முறையில் எழுதுவதும் இயல்பு. அந்த சமயங்களில் பென்சிலை சரியாகப் பிடிப்பதும், ஒழுங்காக எழுதுவதுமே அதற்குக் கஷ்டமான காரியம். சில முறை முயன்று எனக்கு ... Read More »
இன்று: நவம்பர் 23
November 23, 2016
1574: ஜுவான் பெர்ணான்டஸ் தீவுகள் சிலி நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டன. 1919: அமெரிக்காவின் தொழிலாளர் மாநாட்டு குழு, நாளொன்றுக்கு 8 மணிநேரமும் வாரத்திற்கு 48 மணிநேர வேலையையும் வலியுறுத்தியது. 1926: சத்ய சாயி பாபா பிறந்தார். 1950: அமெரிக்காவின் நியூயோர்க் றிச்மன்ட் மலைத்தொடரில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 79 பேர் பலி. 1963: அமெரிக்காவில் ஜோன் எவ்.கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து லிண்டன் ஜோன்ஸன் ஜனாதிபதியாக பதவியேற்றார். 1972: சீனாவுக்கான பயணத்தடையை 22 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்கா நீக்கியது. 1980: ... Read More »
தனியே ஒரு குரல்!!!
November 23, 2016
பெரும்பாலான மனிதர்கள் காலத்தோடு ஒத்துப் போகிறார்கள். எல்லோரையும் போல சிந்திப்பது, செயல்படுவது, எல்லோரும் எப்படி வாழ்கிறார்களோ அப்படியே வாழ்வது என்று இருந்து விடுகிறார்கள். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, செயல்பட்டு, வாழ்ந்து சமூகத்தை பயமுறுத்துவதில்லை. சமூகத்தை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவதில்லை. ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லை. சிலர் விதிவிலக்குகளாக இருந்து தனிக்குரல் எழுப்புகிறார்கள். அந்தத் தனிக்குரல் சமூகத்தின் காதுகளில் நாராசமாக ஒலிக்கிறது. அந்தத் தனிக்குரலை ஒடுக்க சமூகம் பாடுபட ஆரம்பித்து, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்று விடுகிறது. ஆனாலும் ... Read More »