மன்னன் திருதராஷ்டிரன் தனது சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். எதிரே இருந்த துரோணாச்சாரியாரிடம் பூடகமாக பேசத் தொடங்கினான். “துரோணாச்சார்யரே! எனக்கு ஒரு சந்தேகம்’. “கேளுங்கள் மன்னா!’ “சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல் வித்தை கற்பிப்பது தானே நல்ல ஆசானின் இலக்கணம்?’ “ஆம் மன்னா! அதில் சந்தேகமேயில்லை’. “தாங்கள் நல்லதோர் ஆசானாகத் திகழ வேண்டும் என்பதே எனது விருப்பம்’ “மன்னா!’ திடுக்கிட்டார் துரோணர். தன் மீதே மன்னர் சந்தேகப்படுவார் என்று எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. “துரோணரே! பாண்டவர்களையும் எனதருமை பிள்ளைகளையும் சரிசமமாக பாவித்து வித்தைகளைக் ... Read More »
Daily Archives: November 28, 2016
திறமையான குள்ளன்!!
November 28, 2016
ஏழை விறகுவெட்டி ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஏழு மகன்கள் இருந்தனர். அவன் எவ்வளவோ கடுமையாக உழைத்தும் அவர்கள் பல நாட்கள் பட்டினி கிடந்தார்கள். ஒரு நாள் இரவு அவனுடைய மகன்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். மனைவி அவனிடம், “நாம் எவ்வளவு காலம் துன்பப்படுவது? வயிறார உண்டு எத்தனை நாட்கள் ஆகிறது? நம் மகன்களைக் காட்டில் விட்டுவிட்டு வந்து விடுங்கள். இருப்பதைக் கொண்டு நாம் மகிழ்ச்சியாக வாழலாம்” என்றாள். “நீ சொன்னபடியே செய்கிறேன். நாளை அவர்களுக்கு ... Read More »
வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 9
November 28, 2016
சலிப்படைந்தால் சாதனை இல்லை! ஒவ்வொரு மகத்தான சாதனைக்குப் பின்னும் கடுமையான, முறையான உழைப்பு இருக்கிறது. சலித்துப் போகாத மனம் இருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் எந்த சிறந்த சாதனையும் நிகழ்ந்து விடுவதில்லை. சாதனைகளைப் பாராட்டுகின்ற மனிதர்கள் சாதித்தவர்களின் திறமைகளைத் தான் பெரும்பாலும் சாதனைகளின் காரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கென சலிக்காமல் உழைத்த உழைப்பை அதிகமாக யாரும் கவனத்தில் கொள்வதில்லை. ஏனென்றால் பரிசுகளும் பாராட்டுகளும் குவியும் போது தான் அவர்களைக் கவனிக்கிறோம். புகழ் சேரும் போது தான் சுற்றி ... Read More »
முல்லா, ஏன் அழுகிறாய்?
November 28, 2016
முல்லா ஒரு நாள் அழுதுகொண்டிருந்தார். அவரது நண்பர் கேட்டார்: “முல்லா, ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: “சென்ற மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.” நண்பர் கேட்டார்: “அட மகிழ்ச்சியான செய்திதானே, ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: ” பதினைந்து நாட்களுக்குமுன் எனது பெரியப்பா இருபது இலட்ச ரூபாய் சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.” நண்பர் கேட்டார்: “மகிழ்ச்சியான செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?” முல்லா சொன்னார்: “சென்ற வாரம் ... Read More »
இன்று: நவம்பர் 28
November 28, 2016
1987 : தென்னாபிரிக்காவின் விமானமொன்று இந்து சமுத்திரத்தில் வீழ்ந்ததில் 159 பேர் பலி. 1520 : தென் அமெரிக்கா ஊடாகப் பயணித்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன்,சுபிக் சமுத்திரத்தை அடைந்தார். இவரே அத்திலாந்திக் சமுத்திரத்தில் இருந்து பசுபிக் சமுத்திரத்தை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார். 1729 : அமெரிக்காவின் மிசிசிப்பியில் குழந்தைகள், பெண்கள் உட்பட 239 பிரெஞ்சு இன மக்களை நட்சே இந்தியர்கள் கொன்றனர். 1821 : ஸ்பெய்னிடம் இருந்து பனாமா பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது. ... Read More »