Home » 2016 » November » 27

Daily Archives: November 27, 2016

புதையல்!!!

புதையல்!!!

திருவெண்ணெய் நல்லூரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய பெயரே மறைந்து போய் பேராசைக்காரனாயிற்று. ஒரு நாள்— வெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்றான். வியாபாரம் முடிந்து காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். தண்ணீர் வேட்கை கொண்ட அவன் கண்களுக்கு கிணறு ஒன்று தெரிந்தது. வண்டியை விட்டு இறங்கிய அவன் அந்தக் கிணற்றருகே ... Read More »

அடைந்ததை அழித்தல்!!??

அடைந்ததை அழித்தல்!!??

ஒரு கடற்கரையிலே பெரிய நாவல்மரம் ஒன்றிருந்தது. அதில் எப்பொழுதும் பழங்கள் இருந்து கொண்டேயிருக்கும். அந்தமரத்தில் ரக்தமுகன் என்றொரு குரங்கு இருந்து வந்தது. ஒருநாள் கராலமுகன் என்ற பெரிய முதலை ஒன்று அந்த நாவல்மரத்தின் அருகில் வந்தது. ரக்தமுகன் அதைப்பார்த்து, ‘‘நீஎன்விருந்தாளி. அமுதத்துக்கொப்பான நாவற்பழங்களைத்தருகிறேன். சாப்பிடு!’’ என்று குரங்கு கூறி, நாவற்பழங்களை முதலைக்குக் கொடுத்தது. பழங்களை முதலைசாப்பிட்டது. வெகுநேரம் குரங்குடன் பேசி இன்பமடைந்த பின் தன் வீட்டுக்குத்திரும்பிச் சென்றது. இப்படியே நாள்தோறும் முதலையும் குரங்கும் நாவல் மரத்தின் நிழலையடைந்து ... Read More »

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 8

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்! – 8

சோதனைகளில் புலப்படும் சாதனை வழிகள்! அந்த இளைஞனுக்கு வித்தியாசமாய் கார்ட்டூன்கள் வரையும் திறமை இருந்தது. ஆனால் அவன் பல பிரபல பத்திரிக்கைகளில் கார்ட்டூனிஸ்டாக வேலைக்குச் செல்ல முயற்சி செய்தும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. அவர்கள் அவனுக்கு சரியாக வரையத் தெரியவில்லை என்ற காரணம் கூறி வேலை தர மறுத்து விட்டார்கள். அவன் ஆம்புலன்ஸ் டிரைவராக சில காலம் வேலை பார்த்தான். அவன் சகோதரன் சிபாரிசின் பேரில் இடை இடையே விளம்பரங்களுக்கு சில ஓவியங்கள் வரைந்து கொடுக்கும் வாய்ப்பு ... Read More »

இன்று: நவம்பர் 27

இன்று: நவம்பர் 27

  1989: கொலம்பிய விமானத்தில்குண்டுவெடிப்பு 1703 : இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள கலங்கரை விளக்கம் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமாக்கப்பட்டது. 1807: நெப்போலியனின் படைகளிடமிருந்து தப்புவதற்காக போர்த்துக்கல் அரச குடும்பத்தினர் தலைநகர் லிஸ்பனிலிருந்து தப்பிச் சென்றனர். 1895 : பாரிஸில் அல்பிரட் நோபல் நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார். 1935 : இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது விமானம் மதராசிலிருந்து (தற்போதைய சென்னை)  வந்திறங்கியது. 1940 ... Read More »

சிந்திக்க வைத்த சிந்தனைகள் …

சிந்திக்க வைத்த சிந்தனைகள் …

* துயரம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இன்பத்தை யாராலும் ரசிக்க முடியாது.ஒரு மனிதன் மற்றொரு மனிதனை வாழ்வில் முந்திச் சென்றாலோ, வெற்றியைப் படைத்தாலோ அதற்குக் காரணம் விதியோ, அதிர்ஷ்டமோ அல்ல. அவனது உழைப்புத்தான் காரணம். * பசி, வறுமை ஆகிய கொடிய நோய்களுக்கு உழைப்பு, வியர்வை ஆகியவைகளே மிகச் சிறந்த மருந்துகள். * எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறது என்றால் இலட்சியவாதிகளான நாம் சரியாக இருக்கிறோம் என்று அர்த்தம். * வேற்றுமை பாராட்டாமல் மனித இனத்திற்கு உழைக்கும் உணர்ச்சி ... Read More »

Scroll To Top