Home » 2016 » October (page 7)

Monthly Archives: October 2016

உலக உணவு நாள்!!!

உலக உணவு நாள்!!!

உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் ஒக்டோபர் 16ஆம் திகதியன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்.,16ம் தேதி, உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. “விவசாயத்துக்கு ஒத்துழைப்பு: “உலக உணவு உற்பத்திக்கு வழி’ என்பது, இந்தாண்டு மையக் கருத்து. ... Read More »

தலைக்கு மேலே… எங்கே நிம்மதி!!!

தலைக்கு மேலே… எங்கே நிம்மதி!!!

உத்தமபுரம் சமஸ்தானத்தை ஒரு அரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் சந்திரன். அவன் ஒரு பேராசை பிடித்தவன். உலகத்தில் உள்ள அவ்வளவு செல்வமும் தன்னிடம் தான் இருக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவான். ஒருபோதும் அவன் குடி மக்களின் நன்மையைப் பற்றி கவலைப் பட்டவனே இல்லை. அவர்களும் அவன்மீது பிரியம் இல்லாமலே இருந்தனர். மொத்தத்தில் அவன் ஒரு கொடுங் கோலனாகவே இருந்தான். கொடுங்கோல் மன்னனை யார் விரும்புவார்கள்? அவனுக்கும் மக்களின் வெறுப்பு புரிந்தே இருந்தது. அவன் என்றாவது ... Read More »

உலகின் சிறப்பு நாட்கள்!!!

உலகின் சிறப்பு நாட்கள்!!!

உலக சமாதான தினம் – ஜனவரி 1 உலக சுற்றுபுறசூழல் தினம் – ஜனவரி 5 உலக சிரிப்பு தினம் – ஜனவரி 10 உலக சுங்கத்துறை தினம் -ஜனவரி 26    உலக தொழுநோய் ஒழிப்பு நாள்-ஜனவரி 30    உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2  உலக புற்று நோய் ஒழிப்பு தினம் – பெப்ரவரி 4 உலக நோயாளர்கள் தினம் – பெப்ரவரி 12 அனைத்துலக தாய்மொழி நாள் – யுனெஸ்கோ-பெப்ரவரி 21 உலக சமாதான மற்றும் புரிந்துணர்வு தினம் – பெப்ரவரி 23    ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்-மார்ச் 8 உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள் -மார்ச் 13    உலக நுகர்வோர் நாள்-மார்ச் 15    உலக வன நாள்-மார்ச் 21    உலக செய்யுள் நாள் – யுனெஸ்கோ-மார்ச் 21 ... Read More »

வீரபாண்டிய கட்டபொம்மன்!!!

வீரபாண்டிய கட்டபொம்மன்!!!

தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கதைகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’ என்றும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்படும் அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன்பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண ... Read More »

அக்பர்!!!

அக்பர்!!!

இந்தியாவில் ஆட்சி செய்த மன்னர்களுள் அக்பரும் தலை சிறந்த மன்னனாகக் கொள்ளப்படுகிறார். மொகாலய பேரரசினை நிறுவுவதில் அக்பரின் பங்களிப்பானது அளப்பரியதாகும். தமது பெருமுயற்சியால் ஒரு பேரரசினை நிறுவி, அதனை ஐம்பது ஆண்டுகள் சிறப்பான முறையில் ஆட்சி செய்தார். இவரது நிருவாகம், அரசியல் நடவடிக்கைகள், சமயக் கொள்கை, வெளிநாட்டுக் கொள்கை, சமூக மற்றும் பொருளாதார ரீதியான பங்களிப்பு, கலைத்துறைசார் பங்களிப்பு என இவரது ஆட்சி பல முக்கியத்துவ அம்சங்களை உள்ளடக்கியது.   அக்பர் சிந்து மாவட்ட அமரர் கோட்டம் ... Read More »

காய்கறிகளும் அதன் பயன்களும்!!!

காய்கறிகளும் அதன் பயன்களும்!!!

இன்றைய நிலையில், 10 நபரில் 4பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள். உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் இது போன்ற நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்: 1) வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் ... Read More »

ஏ. பி. ஜே. அப்துல் கலாம்!!!

ஏ. பி. ஜே. அப்துல் கலாம்!!!

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள். பிறப்பு: அக்டோபர் 15, 1931 இடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)   பிறப்பு: 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் ... Read More »

ஷிர்டி சாய்பாபா வாழ்க்கை வரலாறு!!!

ஷிர்டி சாய்பாபா வாழ்க்கை வரலாறு!!!

பிறப்பு பற்றிய தகவல் சீரடி சாய் பாபா என்றழைக்கப்படும் “சாய் பாபா” அவர்கள் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டதிலுள்ள “சீரடி” என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள் ஏதும் கிடைக்காததால், இன்றுவரையும் அவருடைய பிறப்பு பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. ஆனால், அவர் இந்து மதம் சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும், பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு மகானாக சீரடி சாயி பாபா ... Read More »

தாழ்வைத் தரும் தலைக்கனம்!!!

தாழ்வைத் தரும் தலைக்கனம்!!!

ஒரு முறை நாரதருக்கும், தும்புரு முனிவருக்கும் வீணை வாசிப்பதில் ‘தானே உயர்ந்தவர்’ என்ற எண்ணம் இருந்தது. அது அகந்தையாக உருமாறியது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தங்களில் யார் பெரியவர் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, கயிலாயம் சென்று சிவபெருமானிடம் வீணையில் வல்லவர் யார்? என்று கேட்டு ஒரு முடிவுக்கு வர இருவரும் எண்ணினார்கள். தங்கள் வீணைகளை எடுத்துக் கொண்டு கயிலாயத்தை நோக்கி புறப்பட்டார்கள். வழியில் கதலி வனத்தில் ஒரு சிறு குன்றின் மீது அமர்ந்து ஆஞ்சநேயர் ராமநாமத்தை ... Read More »

நகைச்சுவை – 3

நகைச்சுவை – 3

டீச்சர் : ஏன்டா… இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா? மாணவன்: கரண்ட்டு இல்ல டீச்சர் … டீச்சர் : வெளக்கு, மெழுகு வர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல? மாணவன்: ஆமா டீச்சர் … முயற்சி பண்ணினேன்… ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை…. டீச்சர் : வொய்???? மாணவன்: அது பூஜை ரூமுல இருந்தது…. டீச்சர் : உள்ள போயி எடுத்திருக்கலாம்ல? மாணவன்: இல்ல டீச்சர் …. குளிக்கலல்ல…. எப்பிடிப் போறது? டீச்சர் : குளிக்கலையா….ஏன்? மாணவன்: மேல் ... Read More »

Scroll To Top