தியாகசீலர்களின் பெருமையை சுலபத்தில் அறிய முடியாது. மற்றவர்களால்அறிய முடியாதது மட்டுமல்ல! அவர்களின் சந்ததியாலேயே அறிந்து கொள்ள முடியாது. அவர்களின் தியாகத்திற்குவேறுவிதமாகப் பொருள் கொண்டு, விபரீதமாக எண்ணிப் பழிக்குப்பழிஎன்று கிளம்புவதும்உண்டு.அப்படிக் கிளம்பிய ஒருவரின் கதை தான் இது. ததீசி முனிவர் என்பவர், தேவர்கள் நல்வாழ்வு பெற தன் முதுகெலும்பையே ஆயுதமாகக் கொடுத்து உயிர் தியாகம் செய்தவர். அவர் அந்த தியாகத்தைப் புரிந்தபோது, அவரது மகன்பிப்பலாதன் சிறுவனாக இருந்தான். அவன்இளைஞனான பிறகு, அவன் தாயார் நடந்ததையெல்லாம் விவரித்தார். அதைக் கேட்டு ... Read More »
Daily Archives: October 10, 2016
சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு தினம்!!!
October 10, 2016
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில், கொடுமையான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. சில நாடுகளில், இத்தண்டனை வழங்கப்படுவதில்லை. உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் (World Day Against the Death Penalty) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு (World Coalition Against the Death Penalty) என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது. இந்த அமைப்பு மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அரச ... Read More »
கே.பி.சுந்தராம்பாள்!!!
October 10, 2016
கே. பி. சுந்தராம்பாள் என அறியப்படும் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் (அக்டோபர் 10, 1908 – செப்டம்பர் 19, 1980) தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார்.[1][2]. அறிஞர் அண்ணா இவரை கொடுமுடி கோகிலம் என்று புகழ்ந்தார். [3] இளமைப்பருவம் ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் பாலாம்பாள் என்ற அம்மையாருக்கு சுந்தராம்பாள் பிறந்தார். இவருக்கு கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். இளம்வயதிலேயே தந்தையை இழந்தார். தனது ... Read More »
பாபநாசம் சிவன்!!!
October 10, 2016
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் தெலுங்கு, வடமொழிப் பாடல்களே பாடப்பெற்றன. இனிய இசையில் அமைந்த செந்தமிழ்ப் பாடல்களை மக்கள் விரும்பிக் கேட்பதற்காக பல இயலிசைப் புலவர்கள் தூய தமிழ்ப் பாடல்களைச் சிறந்த இசை மெட்டுடன் படைக்கலாயினார். இசைநயம் மிக்கப் பாடல்களைத் தமிழில் இயற்றி சிறந்த தொண்டாற்றியவர்களில் பாபநாசம் சிவனும் ஒருவராவார். இவர் தனிப்பாடல்களையும், திரைப்படப் பாடல்களையும் ஏராளமாக இயற்றியுள்ளார். இவரின் பாடல்கள் எளிமையாகவும், இனிமையாகவும், எளிய தமிழ் மொழியில் அமைந்திருப்பதால் மக்கள் அனைவரும் ... Read More »