Home » 2016 » October (page 8)

Monthly Archives: October 2016

உலக தர நிர்ண நாள்!!!

உலக தர நிர்ண நாள்!!!

தரமற்ற பொருட்களை கொள்வனவு செய்வது சாத்தியமற்ற விடயம் அவ்வாறு தரமான பொருட்களை உற்பத்தி செய்தும் அதனை தரமான பொருள் என்பதை நிர்ணயிக்க ஒரு சான்று தேவை அவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்ற தரமான பொருட்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட அமைப்பே உலக ஐ.எஸ்.ஓ. என அழைப்படும் உலக தரக்கட்டுப்பாட்டு நிறுவனமாகும். உலக தரக்கட்டுப்பாட்டு அமைப்பானது கடந்த 1974 ஆம் ஆண்டு ஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் குறித்த அமைப்பில் வளர்ச்சியடைந்த நாடுகள் மாத்திரமே உறுப்பினராகவிருந்தன. இந்நிலையில் படிப்படியாக அனைத்து ... Read More »

நல்ல பகைவன்!!!

நல்ல பகைவன்!!!

விக்கிரமாதித்தன் கதை நல்ல பகைவன்!!!   தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நமக்கு உதவி செய்பவர்களுடன் நட்பு பாராட்டுவதும் அவர்களுக்கு நன்றிக்கடன் தீர்க்க நாம் பிரதியுபகாரம் செய்வதும் இயற்கை! இதை நமது சாஸ்திரங்களும் வலியுறுத்தி இருக்கின்றன. ஆனால் நான் உனக்கு இப்போது சொல்லப் போகும் கதையில் ... Read More »

நகைச்சுவை – 2

நகைச்சுவை – 2

டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ? ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம். ஐயோ..மனச..தளர விடாதீங்க…கண்கலங்காதீங்க…கவலைப்படாதீங்க மாமா… உங்க பொண்ணை நான் கண் கலங்காம பார்த்துக்கறேன்…! அட நீங்க வேற மாப்பிள்ளை…! நான் கவலைப்படறது, பாவம்.. உங்களுக்காகத்தான்..! ம்ம்ம்…நாங்க தப்பிச்சோம்…நீங்க…என்ன பாடு பட போறீங்களோ… என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க….. ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ? இன்னிக்குத் தான் ... Read More »

அருணகிரியார் வரலாறு!!!

அருணகிரியார் வரலாறு!!!

அருணகிரிநாதர் என்றாலேயே அவர் அருளிச் செய்த திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் முதலிய அற்புத பிரபந்தங்கள் கருத்தில் வரும். அவற்றின் வழியாகப் பிரவாகிக்கும் திருமுருகன் திருவருள் கருத்தை நிறைவிக்கும். இத்தகு அருளாளரின் வரலாறு மட்டும் மிகவும் குழப்பமானதாயும், தெளிவற்றதாயும் இருக்கிறது. இதை விட அவலம் யாதென்றால் தேவையற்றதும் வீணானதுமான இந்து தத்துவார்த்தங்களுக்கு முரணான அபவாதங்களும் அருணகிரியாரின் பெயரில் திணிக்கப் பட்டிருக்கிறமையையும் பார்க்கிறோம். அருணகிரிநாதரின் காலமாக எதனைத் தீர்மானிக்கலாம் என்பது குறித்தும் பல்வேறு அறிஞர்களிடையே கருத்துப் பேதமுண்டு. ஆனால் திருப்புகழில் ... Read More »

பொன்மொழிகள் – 2

பொன்மொழிகள் – 2

மனம் ஓட்டைப் பானையில் எவ்வளவுதான் தண்ணீரை ஊற்றினாலும் அது நிறைவதில்லை. அதுபோலவே தான் விரும்பிய பொருள் கைக்குக் கிடைத்துவிட்டாலும் கூட, ஒரு போதும் மனம் திருப்தி அடைவதில்லை. உலக இன்பங்களை அடைவதில் பெரிதும் ஆவல் கொண்டுள்ள மனம் எப்போதுமே, ஒன்றும் இல்லாத காலி மனம்தான். அதற்கு எந்த இடத்திலும் அமைதி கிடைக்காது. –ஸ்ரீராமர். குரு தனது குருவை மனுஷனாக கருதுபவனுக்கு பிரார்த்தனையாலும், பக்தியாலும் என்ன பலன் உண்டாகக் கூடும். நமது குருவை மனுஷன் என்று கருதக்கூடாது. ஈஸ்வரனை ... Read More »

முல்லாவின் தானம்!!!

முல்லாவின் தானம்!!!

முல்லா தனது வீட்டின் கூறை மேல் ஏதோ ரிப்பேர் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது ஒரு சாமியார் அவரை கீழே வருமாறு அழைத்தார் , முல்லா மிகவும் சிரமப்பட்டு கீழே வந்து அவரிடம் “ என்ன விசயம் எதற்க்காக என்னை கீழே வருமாறு அழைத்தீர்கள் “ எனக்கேட்டார். அந்த சாமியார் “ நான் உன்னிடம் ஏதாவது தானமாக பெற வந்துள்ளேன்! அதை சத்தமாக கேட்க வெட்கமாக இருந்தது! அதனால்தான் உன்னை கீழே அழைத்தேன் , மன்னிக்கவும் “ ... Read More »

ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் சரித்திரம்!!!

ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் சரித்திரம்!!!

ஸ்ரீகுமரகுருபரர் சரித்திரச் சுருக்கம்: உ.வே.சா மகாமகோபாத்தியாய டாக்டர். உ.வே. சாமிநாதையரவர்கள் எழுதியது ஒன்பது கைலாசங்களும் ஒன்பது திருப்பதிகளும் தன் கரையில் அமையப்பெற்ற தாமிரபர்ணி நதியின் வடகரையில் ஸ்ரீ வைகுண்டமென்று வழங்கும் திருப்பதியின் வடபாலில் ஸ்ரீ கைலாசமென ஒருபகுதி உண்டு. அங்கே பரம்பரையாகத் தமிழ்ப் புலமையும் முருகக்கடவுளது பக்தியும் வாய்ந்த சைவவேளாள குலத்தில் சண்முக சிகாமணிக் கவிராயரென்ற ஒருவர் தம் மனைவியரான சிவகாமசுந்தரியம்மையாரோடு வாழ்ந்து வந்தார். அவ்விருவருக்கும் ஓர் ஆண் குழந்தை உதித்தது. அதற்குக் குமரகுருபரன் என்னும் பெயர் ... Read More »

நாகரத்தினத்தை திருடியது நியாயமா?

நாகரத்தினத்தை திருடியது நியாயமா?

விக்கிரமாதித்தன் கதை நாகரத்தினத்தை திருடியது நியாயமா? தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் அவனை நோக்கி, “மன்னா! தர்ம சிந்தனையோடு பிறருக்கு நன்மை செய்வதற்காக நீ மிகவும் சிரமப்பட்டு அடர்ந்த காட்டிலும் மேட்டிலும், பேயும் உலவ அஞ்சும் இந்த நள்ளிரவில் மயானத்தில் அல்லலுறுகிறாய். தருமமே வெல்லும் என்று சாஸ்திரங்கள் கூறினாலும், பெரும் ... Read More »

கந்தபுராணம்!!!

கந்தபுராணம்!!!

ஓம் முருகா சரணம் கந்தபுராணம் சம்ஸ்க்ருதத்தில் பதிணெண் புராணங்கள் உள்ளன: சைவம், பவிஷ்யம், மார்க்கண்டேயம், லிங்கம், ஸ்காந்தம், வராஹம், வாமனம், மத்ஸயம், கூர்மம், பிரம்மாண்டம், காருடம், நாரதீயம், வைஷ்ணவம், பாகவதம், பிரம்மம், பத்மம், ஆக்னேயம், பிரம்மகைவர்த்தனம் என்பவற்றுள் ஸ்கந்தபுராணம் என்ற மஹாபுராணமும் ஒன்று. “முருகப்பெருமானின் திருவரலாறாகிய கந்தபுராணத்தைக் காதலுடன் இப்புவியில் படிப்போர், கேட்போர், நினைப்போர் யாவரும் இந்திரனைப் போலத் தலைமைத்துவமும் இன்பமும் மிக்க வாழ்வை வாழ்ந்து இறுதியில் பரமானந்த நிலையாகிய சிவபதப் பேறும் பெறுவர்” என்று நூற்பயனை ... Read More »

அழகில் வீழ்ந்த மீன்!!!

அழகில் வீழ்ந்த மீன்!!!

ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சோமு சிண்டு என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது ஏய் சிண்டு… என்னைப் பிடி பார்க்கலாம் என்றான், என்கிட்டேயே சவால் விடறியா இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது. அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து “ஏய் சோமு, அங்கே பார் அவன் ... Read More »

Scroll To Top