விநாயகர் மிக எளிமையானவர். அவரது வழிபாடும் எளிமையானது. ஆனால் ஆழ்ந்த பொருள் கொண்டது. விநாயகருக்கு கொழுக்கட்டை படைக்கிறோம். மேலே மாவு மூடியிருக்க, உள்ளே வெல்லமும் தேங்காயும் கலந்த பூரணம் இருக்கும். இதன் பொருள் என்ன? மாவுதான் மாயை- அதாவது ஆசை முதலான உலகப்பற்றுகள். அந்த மாயையை விலக்கினால் உள்ளே இருப்பது பூரணம் என்னும் ஆனந்தம். அருணகிரியார் கந்தரனுபூதியில், “ஆசாநிகளம் (மாயை) துகள் ஆயினபின் பேசா அனுபூதி பிறந்ததுவே’ என்கிறார். கணபதியின் வடிவம் கூறும் பொருள் யாது? சிறிய ... Read More »
Daily Archives: August 29, 2016
விநாயகர் பெருமை!!!
August 29, 2016
கணபதி, கஜானன், ஆனைமுகத்தான் என்றெல்லாம் நம்மால் துதிக்கப்படும் பிள்ளையார் இன்று விநாயக சதுர்த்தி நன்னாளில் நாடெங்கிலும் வணங்கப்படுகிறார். குறிப்பாக மகாராஷ்ட்ரத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அவரவர் வீட்டில் நன்றாகக் கொண்டாடப்பட்டு வந்த விநாயக சதுர்த்தி விழாவினை மரியாதைக்குரிய திலகர் பெருமான் ஆங்கிலேயருக்கு எதிராக பாரத மக்களை, குறிப்பாக ஹிந்துக்களை திரட்டுவதற்காக இத் திருவிழாவினை சமூகத் திருவிழாவாக 1900 களில் நடைமுறைப்படுத்தினார். பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பதாக மிகவும் எளிமையான இறை. வயல்காடுகளில் பணி துவங்குகையில், அங்கே இருக்கும் சாணத்தைக் கொண்டு கூட பிள்ளையார் ... Read More »
எல்லாம் கடவுள்மயம்!!!
August 29, 2016
* மதத்தின் பெயரால் நாம் ஒருவரை ஒருவர் வெறுக்கக்கூடாது. அவரவர் மன விருப்பப்படி, எந்த வடித்தில் வணங்கினாலும் நாம் வழிபடுவது ஒரே கடவுளைத் தான். * கடவுள் ஒருவரே. அவரையே ரிஷிகள் பல பெயர்களால் அழைக்கின்றனர் என்று ரிக்வேதம் கூறுகிறது. * “எல்லா உடம்புகளிலும் நானே உயிராக இருக்கிறேன்’ என கீதையில் கிருஷ்ணர் குறிப்பிடுகிறார். அதனால், எந்த உயிருக்கும் துன்பம் செய்யக்கூடாது. * “எல்லாம் பிரம்ம மயம்’ “சர்வம் விஷ்ணுமயம் ஜகத்’ என்னும் வசனங்கள் உலகம் கடவுளின் ... Read More »
விநாயகரின் அறுபடை வீடுகள்!!!
August 29, 2016
முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் வழிபாடு பலன்கள் வருமாறு:- * முதல்படை வீடு :-திருவண்ணாமலை திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் `அல்லல் போம் விநாயகர்’. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே `அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்’ என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும். * இரண்டாம் படை வீடு :-விருத்தாசலம் விருத்தாசலம் இங்குள்ள ஆலயத்தில் எழுந்தளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் ... Read More »
விநாயகர்!!!
August 29, 2016
பிள்ளையார் என்பது ஏன்? தாய், தந்தை, மாமன், மாமி என்று அனைத்து உறவுப்பெயருக்கும் ஆர் என்னும் விகுதியைச் சேர்த்து தாயார், தந்தையார், மாமனார், மாமியார் என்று சொல்வது வழக்கம். ஆனால், வீட்டில் உள்ள சிறுகுழந்தைகளை பிள்ளையார் என்று யாரும் சொல்வதில்லை. விதிவிலக்காக, விநாயகரை மட்டும் பிள்ளையார் என்று சிறப்பித்துக் கூறுகிறோம். சிவபார்வதியின் பிள்ளைகளில் மூத்தவர், சிறந்தவர் என்ற காரணத்தால் விநாயகருக்கு பிள்ளையார் என்ற பெயர் வழங்கப்படுகிறது. கணபதிக்கு பிரியமானவை! கணபதிக்கு பிரியமான 21: கணபதிக்குப் படைக்கப்படும் ... Read More »
விநாயகர் சதுர்த்தி விரதமும் அதன் மகிமையும்!!!
August 29, 2016
ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே. விரதம்: மனம், பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு, உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு வழிபடுதல் விரதமாகும் இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங்கருதி செய்யுஞ் சாதனைகளில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய ... Read More »
விநாயகர் அவதாரம்!!!
August 29, 2016
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, யாரையும் உள்ளே விடாதே என்று கூறிச்சென்றாள். அப்போது சிவன் வர, காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன். தேவி வெகுண்டாள். நிலையை உணர்ந்த சிவன் முதலில் தென்பட்ட உயிரினமான யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும். நீயே யாவருக்கும் ... Read More »