Home » சிறுகதைகள் » இன்டர்வியூக்கு வந்திருந்த மூன்று முட்டாள்கள்!!!
இன்டர்வியூக்கு வந்திருந்த மூன்று முட்டாள்கள்!!!

இன்டர்வியூக்கு வந்திருந்த மூன்று முட்டாள்கள்!!!

துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூக்கு வந்திருந்த மூன்று முட்டாள்கள்…

துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. மூன்று பேர் வந்திருந்தனர்.
முதல் நபர் உள்ளே அழைக்கப்பட்டார்.

அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு ஆள் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ”இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?” என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.

முதல் நபர் சற்றும் தாமதிக்காமல் சொன்னார் – ‘

‘அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்…”அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ”

இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒருகண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?” என்று எகிறிவிட்டு,

அடுத்த நபரை அழைத்தார்.அவரிடமும் அதே புகைப்படம்… அதே கேள்வி!”ஹா… இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!” என்றார் அந்த நபர்.

அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது நபர் வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ”அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!” என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது…….

இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப்புரட்டினார்.

என்ன ஆச்சரியம்!

அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும்பழக்கம் உள்ளவன்தான்!”என்னால நம்பவே முடியலை..

அற்புதம்.

அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?” என்று கேட்டார் அதிகாரி.

மூன்றாவது நபர் சொன்னார் – ”

இதில் என்ன இருக்கு? அவனாலசாதாரண கண்ணாடி அணிய முடியாது.

அவனுக்கு ஒரு காது…

ஒரு கண்ணுதானே இருக்கு!”

அதிகாரி பாவம் ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top