Home » படித்ததில் பிடித்தது » நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை!!!
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை!!!

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை!!!

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள்;

சுப்பிரமணிய பாரதியார்

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

பாவேந்தர் பாரதிதாசன்

நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

ஆகிய நால்வருமாவர். அவருள்;

பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்;

பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்;

நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர்.

ஆயின்,கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம் சாரா இனிமைக் கவிஞர், எளிமைக் கவிஞர், உண்மைக் கவிஞர், உணர்ச்சிக் கவிஞர் எனக் கூறுதல் சாலப் பொருந்தும்.

 

“அழகு என்பதே உண்மை, உண்மை என்பதே அழகு” என்றார் ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ். கவிமணியின் பாடல்களில் உண்மையும் அழகும் கைகோர்த்துச் செல்வதை உணர முடியும்.

கரும்பினும் இனிமை பெற்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம், அரிய செல்வம், தெவிட்டாத அமிர்தம் என புகழ்வார் இரசிகமணி டி.கே.சி.

 

“தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை  தினமும் கேட்பது என் செவிப்பெருமை.” எனப் புகழ்மொழி சூட்டுவார் நாமக்கல் கவிஞர்.

 

“இவரது உண்மையுள்ளம், உண்மைப் பாடல்களின் மூலமாய் உண்மை வித்துக்களைக் கற்பவர் மனத்தில் விதைத்து, உண்மைப் பயிரைச் செழித்தோங்கச் செய்கிறது. இவர் பாடல்களில் காணும் தெளிவும், இனிமையும், இவரது உள்ளத்திலேயுள்ள தெளிவு, இனிமை முதலிய சிறந்த இயல்புகளின் நிழற்படமேயாகும்,” என்பார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.

 

“உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்

உருவெடுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை

தெரிந்துரைப்பது கவிதை.”

என்னும் கவிமணியின் கவிதை பற்றிய விளக்கம் அவரின் கவிதைகளுக்கு நன்கு பொருந்துவதாகும்.

 

தேசிக விநாயகம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தேரூரில் 1876 சூலை 27ம் நாள் வேளாளர் குலத்தில் சிவதாணுப்பிள்ளை – ஆதிலட்சுமியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் வாழ்ந்து வந்த நாஞ்சில்நாடு மலையாள நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால், பள்ளியில் மலையாள மொழி கற்க வேண்டியவரானார். எனினும் தேரூரை அடுத்த வாணன்திட்டிலிருந்த திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிபுனையும் ஆற்றலும் கைவரப் பெற்றார்.

 

ஆரம்பப் பள்ளிக் கல்விக்குப்பின் கோட்டாறு அரசுப் பள்ளியில் பயின்றார். திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்து, 1931ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் தம் மனைவியின் ஊராகிய புத்தேரியில் தங்கிக் கவிதை இயற்றுவதிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.

 

பழந்தமிழ்ப்பண்பும், தமிழ் மணமும், புதுமைக் கருத்துக்களும் நிறைந்த பல பாடல்களைக் கவிமணி எழுதியுள்ளார். இப்பாடல்களின் தொகுப்பு “மலரும் மாலையும்” என்னும் நூலகாக வெளியிடப் பெற்றது.

ஆசியஜோதி

உமர்கய்யாம் பாடல்கள்

ஆகிய இருகவிதை நூல்களும் ஆங்கில நூல்களைத் தழுவி எழுதப் பெற்றவை. நாஞ்சில் நாட்டில் நிலவிய மருமக்கள் தாய முறையினை எள்ளி நகையாடும் முறையில் எழுதப் பெற்ற நூல் “நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழிமான்மியம்” என்பதாகும். “தேவியின் கீர்த்தனங்கள்” கவிமணி இயற்றிய இசைப்பாடல்களின் தொகுப்பாகும். “கவிமணியின் உரை மணிகள்” என்ற நூல் அவரால் எழுதப்பெற்ற கட்டுரைகளின் தொகுப்பாகும். 

கவிமணி ஆங்கிலத்தில் எழுதிய வரலாற்று ஆய்வுநூல் “காந்தளூர் சாலை” ஆகும். தேசிக விநாயகம் பிள்ளையின் கவிபாடும் புலமையைப் பாராட்டிச் சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் 1940ல் “கவிமணி” என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. மலரும் மாலையும் நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மூலம் கவிமணியின்

நாட்டுப்பற்று

மொழிப்பற்று

இறைவழிபாடு

சாதிபேதம் கடிதல்

குழந்தைகளிடம் கொண்ட பற்று

ஆகியவற்றை அறியலாம்.

 

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாகக் குதூகலித்த பாரதிக்கு சுதந்திர இந்தியாவில் வாழக் கொடுத்து வைக்கவில்லை. ஆயின் கவிமணி விடுதலை பெற்ற இந்தியாவில் ஏழாண்டுகள் வாழும் பேறு பெற்றார். “பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பது நமது கடமை என்றும், உரிமை வாழ்வின் பயனை நினையாது வாதினை விளைவித்துச் சண்டை செய்வது தேவையற்றது,” என்றும் வலியுறுத்தினார். நம் நாட்டு மக்களுக்கு ஊக்கமும் உழைப்பும் வேண்டும்.

 

“உண்ணும் உணவுக்கும், உடுக்கும் உடைக்கும் அந்நியரை நம்பி வாழ்தல் கூடாது.”

 

“பலதொழில்கள் செய்து பஞ்சப் பேயினைத் துரத்த வேண்டும்.”

 

“அண்ணல் காந்தியினை அடியொற்றி வாழ்வோம்,” என்பதைக் கீழ்காணும் கவிதை வலியுறுத்தும்.

 

“ஆக்கம் வேண்டுமெனில்- நன்மை

அடைய வேண்டுமெனில்

ஊக்கம் வேண்டுமப்பா – ஓயாது

உழைக்க வேண்டுமப்பா

 

உண்ணும் உணவுக்கும் – இடுப்பில்

உடுக்கும் ஆடைக்கும்

மண்ணில் அந்நியரை நம்பி

வாழ்தல் வாழ்வாமோ?

 

உண்ணும் உணவுக் கேங்காமல்

உடுக்கும் ஆடைக் கலையாமல்

பண்ணும் தொழில்கள் பலகாண்போம்

பஞ்சப் பேயைத் துரத்திடுவோம்

அண்ணல் காந்திவழி பற்றி

அகிலம் புகழ வாழ்ந்திடுவோம்.”

 

கவிமணி தமிழுக்குத் தொண்டாற்றிய புலவரைப் போற்றுகிறார். தமிழ்நூல்களின் சிறப்புகளைக் கூறுகிறார். தமிழ்மொழி வளரப் பழைமையோடு புதுமையையும் வரவேற்கின்றார். தமிழில் புதுப்புதுத் துறைகளைத் தோற்றுவித்து வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

“அறிவின் எல்லை கண்டோன், உலகை அளந்து கணக்கிட்டோன்,” என வள்ளுவரையும்,

“நெல்லிக்கனியைத் தின்றுலகில் நீடுவாழும் தமிழ்க் கிழவி,” என ஔவையாரையும்,

“இந்திர சாலமெல்லாம் கவியில் இயற்றிக் காட்டிடுவான்,” எனக் கம்பரையும்,

“பாட்டைக் கேட்டு கிறுகிறுத்துப் போனேனேயடா அந்த கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா,” எனப் பாரதியையும்

போற்றிக் கவியாரம் சூட்டுகிறார்.

 

மனத்தூய்மையின்றிச் செய்யும் இறைவழிப்பாட்டினால் பயனில்லை என்பது கவிமணியின் கருத்து. இதனை வலியுறுத்தும் பாடல்:

 

“கண்ணுக் கினியன கண்டு – மனதைக்

காட்டில் அலைய விட்டு

பண்ணிடும் பூசையாலே – தோழி

பயனொன்றில்லையடி

உள்ளத்தில் உள்ளானடி – அது நீ

உணர வேண்டும் அடி

உள்ளத்தில் காண்பாயெனில் – கோயில்

உள்ளேயும் காண்பாயடி.”

கவிமணி தம் கவிதைகளில் சாதிபேதங்களைச் சாடுகிறார். “சாதியிரண்டொழிய வேறில்லை,” என்றார் ஔவையார். சாதி இறைவனால் வகுக்கப்படவில்லை. மக்களின் கற்பனையே. பிறர்க்காக உழைப்பவர் உயர்ந்தவர். தன்னலம் பேணுவோர் தாழ்ந்தவர். இதனை,

 

“மன்னுயிர்க்காக உழைப்பவரே – இந்த

மாநிலத் தோங்கும் குலத்தினராம்

தன்னுயிர் போற்றித் திரிபவரே – என்றும்

தாழ்ந்த குலத்தில் பிறந்தோர் அம்மா.”

எனப் பாடுகிறார்.

கவிமணி ஒரு தலைசிறந்த குழந்தைக் கவிஞர். இவர் குழந்தைகளுக்காகத் தாய்மார் பாடும் தாலாட்டுப் பாடல்களையும், குழந்தைகள் தாமே பாடி மகிழத்தக்க எளிய அழகிய பாடல்களையும் பாடியுள்ளார். காக்கை, கோழி முதலிய பறவைகளைக் குழந்தை விளித்துப்பாடும் பாடல்கள் சுவைமிக்கன.

 

காக்காய்! காக்காய்! பறந்து வா

கண்ணுக்கு மை கொண்டு வா

கோழி! கோழி! கூவி வா

குழந்தைக்குப் பூக்கொண்டு வா

 

கோழி! கோழி! வா வா

கொக்கொக்கோ என்று வா

கோழி! ஓடி வாவா

கொண்டைப்பூவைக் காட்டு வா

 

சர். எட்வின் அர்னால்டு எழுதிய “The Light of Asia” என்னும் நூலைத் தழுவி எழுதப் பெற்ற அரிய நூல் “ஆசிய ஜோதி” ஆகும். இந்நூல் புத்தர் பெருமானின் வரலாற்றை விளக்குவது.

சுத்தோதனர் மனைவி மாயாதேவி இறைவன் தன் மூலமாகப் பிறக்க விருப்பதைக் கணவாகக் காண்கிறாள். “Dreamed a strange dream” என்பதை “எந்நாளும் காணாத கனவொன்று கண்டாள்” எனக் கவிமணி, மொழியாக்கம் எனத் தோன்றா வகையில் ஆக்கியுள்ள அருமை போற்றத்தக்கது. பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை எட்வர்ட் பிட்ஸ் ஜெரால்டு ஆங்கிலத்தில் ஆக்கியுள்ளார். கவிமணி ஆங்கில நூலைத் தழுவித் தம் நூலைப் படைத்துள்ளார். இப்பாடலின் தழுவலாக கவிமணி எழுதிய கீழ்க்கண்ட பாடல் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.

 

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

வீசும் தென்றல் காற்றுண்டு

கையில் கம்பன் கவியுண்டு

கலசம் நிறைய மதுவுண்டு

தெய்வகீதம் பலவுண்டு

தெரிந்து பாட நீயுண்டு

வையந் தருமிவ் வனமன்றி

வாழும் சொர்க்கம் வேறுண்டோ!

 

தேசிய எழுச்சியோடு நடைபோட்டவர்; விடுதலை வரலாற்றில் இடம் பெற்றவர். ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்தவர்.

 

நாமக்கல் கவிஞரின் பிறப்பும் வாழ்க்கையும்

தந்தை வெங்கட்ராமப் பிள்ளை, தாய் அம்மணி அம்மாள் ஆகிய இருவருக்கும் 19.10.1888 இல், நாமக்கல்லில் பிறந்தார்.

 

வெங்கட்ராமர், இள வயதில் மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்தார். இவர் ஏழு பெண் குழந்தைகளுக்குத் தந்தை. ஒருமுறை, வெங்கட்ராமர், தம் வேலை தொடர்பாக, காவல் துறை ஆய்வாளர் ஒருவரைப் பார்க்க வந்திருந்தார். ஆய்வாளரின் மூன்று வயது ஆண் குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது. அந்த வழியே வந்த குதிரை வண்டி ஒன்றின் கீழ்க் குழந்தை அகப்பட்டுக்கொண்டது. வண்டிக்காரன் வண்டியை நிறுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த வெங்கட்ராமர் ஒரே தாவாகத் தாவிச் சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டார். அவ்வண்டியில் வந்தவர் ஆய்வாளர் சுந்தரராசுலு தான். தன் குழந்தையைக் காப்பாற்றிய வெங்கட்ராமரைப் பாராட்டி அவருக்கு காவல்துறை பணிக்குப் பரிந்துரைத்தார். அந்த வேலையில் சேர்ந்த வெங்கட்ராமர் பின் தலைமைக் காவலராகப் பதவி உயர்வு பெற்றார். இந்தச் சூழலில்தான் வெங்கட்ராமருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்.

கல்வியும் புலமையும் 

நாமக்கல் கவிஞர் பிறப்பதற்கு முன்னரே அவருடைய தாயார் பலராலும் புகழப்பட்டார். பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும் என்று பலர் வாழ்த்தினர். ‘சிறந்த அறிவாளியாகவும் நிறைந்த ஆயுள் உடையவராகவும் விரிந்த புகழுடையவராகவும் உம் மகன் விளங்குவான்’ என்று அந்தணர் ஒருவர் பாராட்டியது அனைத்தும் கவிஞர் வாழ்வில் உண்மையாயிற்று.

 

‘எட்டாவது குழந்தை கட்டி அரசாளும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, கவிஞர் தமிழ் நாட்டில் கவிதை உலகில் தனிப்பெரும் மன்னராக, அரசவைக் கவிஞராக விளங்கினார். இதற்குக் காரணம் அவர் இளமைப் பருவத்தில் பெற்ற கல்வியாகும். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அதற்கு நாமக்கல் கவிஞர் சிறந்த சான்றாவார்.

கல்வி

ஆரம்பக் கல்வி : நம்மாழ்வார் பள்ளி, நாமக்கல்.

உயர்நிலைக் கல்வி : கோவை மெட்ரிகுலேஷன் பள்ளி.

கல்லூரிக் கல்வி : பிஷப் ஈபர் கல்லூரி, திருச்சி.

 

திருமணம்

கவிஞருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி முத்தம்மாள். அவர் வயிற்று வலியால் 1924இல் இறந்து விடுகிறார். அவர் வேண்டுகோளுக்கேற்ப, அவர்தம் தங்கை சௌந்தரம்மாளை மணக்கிறார் கவிஞர். அவர் மூலமாகப் பிறந்த குழந்தைகள் ஐவர். பெண்கள் இருவர்; ஆண்கள் மூவர்.

 

ஓவியப் புலமை

நாமக்கல் கவிஞர் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது நம்மாழ்வார் என்ற ஆசிரியர் ஒரு கணக்குக் கொடுத்திருந்தார். எல்லா மாணவர்களும் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் இராமலிங்கம் மட்டும் அன்றைய நாடக விளம்பரத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த கமலஇந்திரசபா நாடகப் படத்தைப் பார்த்து, பார்த்துத் தம் பலகையில் எழுதிக் கொண்டிருந்தார். ஆசிரியர் கணக்கைக் காட்டச் சொன்னார். இராமலிங்கம் ஓவியத்தைக் காட்ட பளீர் என அடி விழுந்தது. உயர்நிலைப் பள்ளியிலும் இது தொடர்ந்தது.

 

மற்றொரு நிகழ்ச்சியையும் இங்கே சுட்டிக்காட்டலாம். கல்லூரியில் ஆங்கிலக் கட்டுரை ஒன்று எழுத முதல்வர் பணித்தார். அதை எழுதி முடித்துவிட்டு, இராமலிங்கம், முதல்வர் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருப்பதை அப்படியே வரைந்தார். இதைப் பார்த்த முதல்வர் அவரைப் பாராட்டினார். கட்டுரை எழுதிய திறத்தையும், ஓவியம் வரைந்த திறத்தையும் பாராட்டி, பைபிளையும் கட்டுரை எழுதுவது எப்படி என்ற ஒரு நூலையும் பரிசாகத் தந்து, ஓவியக் கலைப் பயிற்சியை விடாமற் செய்து வருமாறு ஊக்கப்படுத்தினார்.

 

இராமலிங்கம் பிள்ளை, தம் நண்பரும் சிறந்த வழக்குரைஞருமான நாகராஜ ஐயங்காரின் தூண்டுதலால் திரு. இராமகிருட்டிணர், திரு. விவேகானந்தர், திலகர், அரவிந்தர், லஜபதிராய் முதலிய தலைவர்களைப் படமாக வரைந்தார். அந்த ஓவியங்களைக் கொண்டு கண்காட்சி அமைத்தார். ஓவியப் புலமை கைவரப் பெற்றவர் கவிஞர் என்பதை இதனால் அறிய முடிகின்றதல்லவா?

 

ஓவியத்தின் மூலம் வருமானம் ஈட்டல்

கவிஞர் இராமலிங்கத்தின் ஆசான் திரு.வி. லட்சுமணன் தம் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபோது அவருடைய படத்தை நாமக்கல் நகர மண்டபத்தில் திறந்து வைக்க, அவருடைய மாணவர்கள் விரும்பினர். அதற்கு இராமலிங்கம் பிள்ளை படம் வரைந்து கொடுத்தார். அப்படம் நகர மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டது. தொழில் துறையில் வருவாயும், வெற்றியும் இராமலிங்கத்துக்கு தேடிக் கொடுத்த படம் இதுவாகும்.

 

இதுவரையில் இராமலிங்கத்தின் பிறப்பு, சூழல், கல்வி, திருமணம், ஓவியப்புலமை ஆகியவற்றைப் பார்த்தோம்.

 

இனி, கவிஞரின் படைப்புகளைப் பற்றி அறியலாம்.

படைப்புகள்

நாமக்கல் இராமலிங்கம் அவர்கள் மிகச் சிறந்த கவிதைகள் பலவற்றைப் பாடியுள்ளார். அவை தேசிய உணர்வை வெளிப்படுத்தும் உன்னதமான பாடல்கள். உரைநடை நூல்கள் பலவற்றையும் படைத்துள்ளார். மேலும் புகழ்வாய்ந்த புதினங்களையும் எழுதியுள்ளார்.

 

கவிதை

1)தேசபக்திப் பாடல்கள், 1938.

2)பிரார்த்தனை, 1938.

3)தமிழன் இதயம், 1942.

4)காந்தி அஞ்சலி, 1951.

5)சங்கொலி, 1953.

6)கவிதாஞ்சலி, 1953.

7)மலர்ந்த பூக்கள், 1953.

8)தமிழ்மணம், 1953.

9)தமிழ்த்தேன், 1953.

10)நாமக்கல் கவிஞர் பாடல்கள், 1960.

11)அவனும் அவளும்

 

உரைநடைக் கட்டுரைகள்

1)தமிழ்மொழியும் தமிழரசும், 1956.

2)இசைத்தமிழ், 1965.

3)கவிஞன் குரல், 1953.

4)ஆரியராவது திராவிடராவது, 1947.

5)பார்ப்பனச் சூழ்ச்சியா, 1948.

6)திருக்குறள் – உரை

7)கம்பன் கவிதை இன்பக் குவியல்

 

புதினம்

1) மலைக்கள்ளன், 1942.

2)தாமரைக்கண்ணி, 1966.

3)கற்பகவல்லி. 1962.

4)மரகதவல்லி, 1962.

5)காதல் திருமணம், 1962.

6)மாமன் மகள்

 

”கத்தி யின்றி ரத்த மின்றி

யுத்த மொன்று வருகுது

சத்தி யத்தின் நித்தி யத்தை

நம்பும் யாரும் சேருவீர்”

மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தைத் தனது அற்புதத் தமிழால் இவ்வாறு விளக்கி எண்ணற்ற இளைஞர்களை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட வைத்தவர் நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை . இந்தத் தொடரின் தலைப்பான

“தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா”

என்பது அவரின் புகழ் பெற்ற “தமிழன்” என்ற பாடலில் வரும் பல்லவியே. பல அருமையான எளிமையான தமிழ்க் கவிகளைப் புனைந்து தமிழுக்குத் தொண்டாற்றியதோடு மட்டுமல்லாமல் மக்களை எழுச்சியுறச் செய்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட வைத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்தவர் நாமக்கல் கவிஞர்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகனூர் என்ற கிராமத்தில் 1888 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் திகதியன்று பிறந்தார் நம் கவிஞர். அவரின் தந்தையார் பெயர் வெங்கடராமன், தாயார் அம்மணியம்மாள், இந்தத் தம்பதியருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தவர் இராமலிங்கம் பிள்ளை.

இவருக்கு முன்னால் பிறந்த ஆறு பெண்களில் மூவரும், ஒரு ஆண் குழந்தையும் குழந்தையிலேயே இறந்துவிட பெற்றோர் அருந்தவமிருந்து பெற்ற ஆண்பிள்ளை இவராவார்.

அவரின் தாய் சிறுவயதில் கொடுத்த உபதேசம், “எது வேண்டுமானாலும் செய், பொய் மட்டும் சொல்லாதே, போக்கிரி என்று பெயரெடுக்காதே” என்பது மட்டும் தானாம். தாயின் ஆசையைக் கடைசிவரை சிரமேற்கொண்டு வாழ்ந்து காட்டிய உத்தமர் அவர்.

 

சிறு வயதிலிருந்தே அவருக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கையில், ஒரு நாள் கல்லூரியின் முதல்வர் எலியட்ஸ் மாணவர்களை ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதுமாறு பணித்து விட்டு, நாற்காலியில் உட்கார்ந்து ஒரு புத்தகத்தைப் படிக்கலானார். இராமலிங்கம் பிள்ளை, கொடுக்கப்பட்ட கட்டுரையை எழுதி முடித்து விட்டு, மீதமிருந்த நேரத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த ஆசிரியர் புத்தகம் படிப்பது போன்ற நிலையைத் தத்ரூபமாக வரைந்து காட்டி மிகுந்த பாராட்டுப் பெற்றாராம்.

அதன் பிறகு முதல்வர் எலியட்ஸ் இவரது ஓவியம் வரையும் ஆற்றலை வளர்க்கப் பலவிதங்களிலும் உதவினார். இவர் வரைந்த ஓவியங்கள் அந்தக் காலத்தில் நல்ல விலைக்குப் போயின. அவர் வரைந்த ஓவியங்களில் ஒன்றான ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியமொன்றை, டெல்லியில் நடந்த அவரின் முடிசூட்டு விழாவிற்குச் சென்று பரிசளித்தார். ஓவியத்தைப் பார்த்த மன்னரின் குடும்பம் அதனை வெகுவாகப் பாராட்டி, தங்கப் பதக்கம் ஒன்றைப் பரிசாக அளித்தது.

 

முதலில் பாலகங்காதர திலகர் போன்றோரின் தீவிரவாதக் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டிருந்தாலும், நாமக்கல் கவிஞர் நாளடைவில் ஒரு காந்தியவாதியாக மாறினார். மகாத்மாவின் மிதவாதக் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு வளர்த்துக் கொண்ட அவர் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் நாமக்கல் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கவிஞர், காந்தியடிகளின் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு ஓராண்டு சிறை தண்டனையும் அனுபவித்தார். திருச்சியில் பணியாற்றுகையில், மகாகவி பாரதியாரைச் சந்திக்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றார். அவரிடம் தானியற்றிய பாடல் ஒன்றைப் பாடிக் காட்டி பாராட்டும், “புலவன்” என்ற பெயரையும் பெற்றாராம் நாமக்கல் கவிஞர்.

 

சீரிய விடுதலைப் போராட்ட வீரர் என்பதுடன் சந்தம் சற்றும் தப்பாமல், எளிமையான மொழியில் அமிழ்தினும் இனிமையான தமிழ்க் கவிதைகளைத் தந்தவர் என்பதே அவரைப் பற்றிய குறிப்பை ”தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” பகுதியில் எழுதுவதற்கு முழுமுதற் காரணம். கடவுள் என்னும் கருத்துக் குறித்து மிக அதிகமான அளவு அற்புதக் கவிதைகள் புனைந்துள்ளார் கவிஞர்.

 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 78 ஆண்டுகள் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து 26.09.1954ல் இம் மண்ணுலக வாழ்வினை நீத்தார். வாழ்நாள் முழுவதும் தமிழ்மணி ஒலித்துக் கொண்டிருந்த கவிமணியின் நா ஓய்ந்தது. எனினும் அவர் பாடல்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே உள்ளன.

தேசிய எழுச்சியோடு நடைபோட்டவர்; விடுதலை வரலாற்றில் இடம் பெற்றவர். ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்தவர்.

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்
5.1.1 நாமக்கல் கவிஞரின் பிறப்பும் வாழ்க்கையும்

தந்தை வெங்கட்ராமப் பிள்ளை, தாய் அம்மணி அம்மாள் ஆகிய இருவருக்கும் 19.10.1888 இல், நாமக்கல்லில் பிறந்தார்.

வெங்கட்ராமர், இள வயதில் மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்தார். இவர் ஏழு பெண் குழந்தைகளுக்குத் தந்தை. ஒருமுறை, வெங்கட்ராமர், தம் வேலை தொடர்பாக, காவல் துறை ஆய்வாளர் ஒருவரைப் பார்க்க வந்திருந்தார். ஆய்வாளரின் மூன்று வயது ஆண் குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது. அந்த வழியே வந்த குதிரை வண்டி ஒன்றின் கீழ்க் குழந்தை அகப்பட்டுக்கொண்டது. வண்டிக்காரன் வண்டியை நிறுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த வெங்கட்ராமர் ஒரே தாவாகத் தாவிச் சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டார். அவ்வண்டியில் வந்தவர் ஆய்வாளர் சுந்தரராசுலு தான். தன் குழந்தையைக் காப்பாற்றிய வெங்கட்ராமரைப் பாராட்டி அவருக்கு காவல்துறை பணிக்குப் பரிந்துரைத்தார். அந்த வேலையில் சேர்ந்த வெங்கட்ராமர் பின் தலைமைக் காவலராகப் பதவி உயர்வு பெற்றார். இந்தச் சூழலில்தான் வெங்கட்ராமருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்.

5.1.2 கல்வியும் புலமையும்

நாமக்கல் கவிஞர் பிறப்பதற்கு முன்னரே அவருடைய தாயார் பலராலும் புகழப்பட்டார். பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும் என்று பலர் வாழ்த்தினர். ‘சிறந்த அறிவாளியாகவும் நிறைந்த ஆயுள் உடையவராகவும் விரிந்த புகழுடையவராகவும் உம் மகன் விளங்குவான்’ என்று அந்தணர் ஒருவர் பாராட்டியது அனைத்தும் கவிஞர் வாழ்வில் உண்மையாயிற்று.

‘எட்டாவது குழந்தை கட்டி அரசாளும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப, கவிஞர் தமிழ் நாட்டில் கவிதை உலகில் தனிப்பெரும் மன்னராக, அரசவைக் கவிஞராக விளங்கினார். இதற்குக் காரணம் அவர் இளமைப் பருவத்தில் பெற்ற கல்வியாகும். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்கள். அதற்கு நாமக்கல் கவிஞர் சிறந்த சான்றாவார்.

  • கல்வி

ஆரம்பக் கல்வி : நம்மாழ்வார் பள்ளி, நாமக்கல்.
உயர்நிலைக் கல்வி : கோவை மெட்ரிகுலேஷன் பள்ளி.
கல்லூரிக் கல்வி : பிஷப் ஈபர் கல்லூரி, திருச்சி.

  • திருமணம்

கவிஞருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி முத்தம்மாள். அவர் வயிற்று வலியால் 1924இல் இறந்து விடுகிறார். அவர் வேண்டுகோளுக்கேற்ப, அவர்தம் தங்கை சௌந்தரம்மாளை மணக்கிறார் கவிஞர். அவர் மூலமாகப் பிறந்த குழந்தைகள் ஐவர். பெண்கள் இருவர்; ஆண்கள் மூவர்.

  • ஓவியப் புலமை

நாமக்கல் கவிஞர் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது நம்மாழ்வார் என்ற ஆசிரியர் ஒரு கணக்குக் கொடுத்திருந்தார். எல்லா மாணவர்களும் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் இராமலிங்கம் மட்டும் அன்றைய நாடக விளம்பரத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த கமலஇந்திரசபா நாடகப் படத்தைப் பார்த்து, பார்த்துத் தம் பலகையில் எழுதிக் கொண்டிருந்தார். ஆசிரியர் கணக்கைக் காட்டச் சொன்னார். இராமலிங்கம் ஓவியத்தைக் காட்ட பளீர் என அடி விழுந்தது. உயர்நிலைப் பள்ளியிலும் இது தொடர்ந்தது.

மற்றொரு நிகழ்ச்சியையும் இங்கே சுட்டிக்காட்டலாம். கல்லூரியில் ஆங்கிலக் கட்டுரை ஒன்று எழுத முதல்வர் பணித்தார். அதை எழுதி முடித்துவிட்டு, இராமலிங்கம், முதல்வர் அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருப்பதை அப்படியே வரைந்தார். இதைப் பார்த்த முதல்வர் அவரைப் பாராட்டினார். கட்டுரை எழுதிய திறத்தையும், ஓவியம் வரைந்த திறத்தையும் பாராட்டி, பைபிளையும் கட்டுரை எழுதுவது எப்படி என்ற ஒரு நூலையும் பரிசாகத் தந்து, ஓவியக் கலைப் பயிற்சியை விடாமற் செய்து வருமாறு ஊக்கப்படுத்தினார்.

இராமலிங்கம் பிள்ளை, தம் நண்பரும் சிறந்த வழக்குரைஞருமான நாகராஜ ஐயங்காரின் தூண்டுதலால் திரு. இராமகிருட்டிணர், திரு. விவேகானந்தர், திலகர், அரவிந்தர், லஜபதிராய் முதலிய தலைவர்களைப் படமாக வரைந்தார். அந்த ஓவியங்களைக் கொண்டு கண்காட்சி அமைத்தார். ஓவியப் புலமை கைவரப் பெற்றவர் கவிஞர் என்பதை இதனால் அறிய முடிகின்றதல்லவா?

  • ஓவியத்தின் மூலம் வருமானம் ஈட்டல்

கவிஞர் இராமலிங்கத்தின் ஆசான் திரு.வி. லட்சுமணன் தம் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபோது அவருடைய படத்தை நாமக்கல் நகர மண்டபத்தில் திறந்து வைக்க, அவருடைய மாணவர்கள் விரும்பினர். அதற்கு இராமலிங்கம் பிள்ளை படம் வரைந்து கொடுத்தார். அப்படம் நகர மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டது. தொழில் துறையில் வருவாயும், வெற்றியும் இராமலிங்கத்துக்கு தேடிக் கொடுத்த படம் இதுவாகும்.

இதுவரையில் இராமலிங்கத்தின் பிறப்பு, சூழல், கல்வி, திருமணம், ஓவியப்புலமை ஆகியவற்றைப் பார்த்தோம்.

இனி, கவிஞரின் படைப்புகளைப் பற்றி அறியலாம்.

5.1.3 படைப்புகள்

நாமக்கல் இராமலிங்கம் அவர்கள் மிகச் சிறந்த கவிதைகள் பலவற்றைப் பாடியுள்ளார். அவை தேசிய உணர்வை வெளிப்படுத்தும் உன்னதமான பாடல்கள். உரைநடை நூல்கள் பலவற்றையும் படைத்துள்ளார். மேலும் புகழ்வாய்ந்த புதினங்களையும் எழுதியுள்ளார்.

  • கவிதை

1) தேசபக்திப் பாடல்கள், 1938.
2) பிரார்த்தனை, 1938.
3) தமிழன் இதயம், 1942.
4) காந்தி அஞ்சலி, 1951.
5) சங்கொலி, 1953.
6) கவிதாஞ்சலி, 1953.
7) மலர்ந்த பூக்கள், 1953.
8) தமிழ்மணம், 1953.
9) தமிழ்த்தேன், 1953.
10) நாமக்கல் கவிஞர் பாடல்கள், 1960.
11) அவனும் அவளும்

  • உரைநடைக் கட்டுரைகள்

1) தமிழ்மொழியும் தமிழரசும், 1956.
2) இசைத்தமிழ், 1965.
3) கவிஞன் குரல், 1953.
4) ஆரியராவது திராவிடராவது, 1947.
5) பார்ப்பனச் சூழ்ச்சியா, 1948.
6) திருக்குறள் – உரை
7) கம்பன் கவிதை இன்பக் குவியல்

  • புதினம்

1) மலைக்கள்ளன், 1942.
2) தாமரைக்கண்ணி, 1966.
3) கற்பகவல்லி. 1962.
4) மரகதவல்லி, 1962.
5) காதல் திருமணம், 1962.
6) மாமன் மகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top