Home » படித்ததில் பிடித்தது » தவறாக பொருள் கொள்ளப்பட்ட பழமொழிகள்!!!
தவறாக பொருள் கொள்ளப்பட்ட பழமொழிகள்!!!

தவறாக பொருள் கொள்ளப்பட்ட பழமொழிகள்!!!

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள் ….
1. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு …
தப்புங்க தப்பு,
ஆயிரம் பேரிடம் போய்
சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு … இதாங்க
சரி …

2. படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் ….
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ………..
படிச்சவன் பாட்டை கொடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ….

3. ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன் …
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை)
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன் …….

4. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ….
சூடு அல்ல சுவடு …
சந்தையில்
மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு .. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது …
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும் ….

5. அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான் ….
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான் ….

வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் …
காலப்போக்கில் ….

நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற
உபயோகிக்கிறோம் …
மாறுவோம் …

மாற்றுவோம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top