- கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
- கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
- கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
- கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
- கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
- கடல் திடலாகும், திடல் கடலாகும்.
- கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
- கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
- கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
- கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
- கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
- கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
- கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
- கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
- கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.
- கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
- கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
- கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
- கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்.
- கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல.
- கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
- கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
- கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
- கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
- கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
- கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.
- கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
- கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
- கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை!
- கண் கண்டது கை செய்யும்.
- கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
- கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
- கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
- கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
- கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
- கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
- கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
- கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
- கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்.
- கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.
- கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
- கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே
- கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
- கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
- கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
- கம்பால் சாய்க்காதவனைக் கயிற்றால் சாய்த்த கதையாக.
- கரணம் தப்பினால் மரணம்.
- கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
- கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
- கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
- கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
- கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
- கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
- கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி!
- கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
- கல்லாடம் [ ஒரு நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
- கல்லாதவரே கண்ணில்லாதவர்.
- கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
- கல்வி அழகே அழகு.
- கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
- கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர்.
- கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
- கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல.
- களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
- கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
- கள்ள மனம் துள்ளும்.
- கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
- கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
- கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
- கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
- கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
- கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
- கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
- கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்?
- கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
- கனிந்த பழம் தானே விழும்.
- கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
- கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
- காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
- காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
- காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
- காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
- காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
- காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
- காணி ஆசை கோடி கேடு.
- காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
- காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
- காப்பு சொல்லும் கை மெலிவை.
- காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
- காய்த்த மரம் கல் அடிபடும்.
- காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
- காரண குருவே காரிய குரு!
- காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
- காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
- கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
- காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
- காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
- காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!
- காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
- காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
- காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
- காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!
- காற்றில்லாமல் தூசி பறக்குமா?
- காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
- காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.
- கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!
- கிட்டாதாயின் வெட்டென மற
- கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
- கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
- கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி
- கீர்த்தியால் பசி தீருமா?
- கீறி ஆற்றினால் புண் ஆறும்.
- குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
- குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
- குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
- குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
- குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
- குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
- குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
- குணத்தை மாற்றக் குருவில்லை.
- குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
- குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
- குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
- குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
- குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
- குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
- குப்பை உயரும் கோபுரம் தாழும்.
- குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
- கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
- குரங்கின் கைப் பூமாலை.
- குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
- குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம்
- குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
- குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
- குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
- குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
- குரைக்கிற நாய் கடிக்காது;
- கடிக்கிற நாய் குரைக்காது.
- குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
- குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
- குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
- குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
- குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
- குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
- குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
- கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
- கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
- கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
- கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
- கூழும் சிந்தல, கோப்பையும் உடையல
- கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
- கெடுக்கினும் கல்வி கேடுபடாது
- கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
- கெடுவான் கேடு நினைப்பான்
- கெட்டாலும் செட்டி செட்டியே,
- கிழிந்தாலும் பட்டு பட்டே.
- கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
- கெட்டும் பட்டணம் சேர்
- கெண்டையைப் போட்டு வராலை இழு.
- கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
- கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.
- கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
- கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!
- கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாவா?
- கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
- கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
- கேள்விப் பேச்சு மூளா நெருப்பு
- கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
- கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
- கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன்
- கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
- கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
- கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
- கையிலே காசு வாயிலே தோசை
- கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
- கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
- கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்
- கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம்
- கொடிக்கு காய் கனமா?
- கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
- கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
- கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
- கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
- கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
- கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
- கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
- கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
- கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
- கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
- கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
- கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
- கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
- கோடி வித்தையும் கூழுக்குத்தான்
- கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
- கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
- கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
- கோபம் சண்டாளம்.
- கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்!
- கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
- கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
- கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
- கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
- கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
- கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.