Home » பாரதியார் » பாரதியாரின் சிந்தனைகள்!!!
பாரதியாரின் சிந்தனைகள்!!!

பாரதியாரின் சிந்தனைகள்!!!

பாரதியாரின் நற்சிந்தனைகள்:-

* ஒருவன் தன் மனமறிந்து உண்மை வழியில் வாழ முயல வேண்டும். இல்லாவிட்டால், அவமானமும், பாவமும் உண்டாவதை யாரும் தவிர்க்க முடியாது.

* வாய்ப்பேச்சு ஒருவிதமாகவும், செயல் வேறொரு விதமாகவும் உடையவர்களின் நட்பை கனவில் கூட ஏற்பது கூடாது.

* உலகமே செய்கை மயமாக நிற்கிறது. விரும்புதல், அறிதல், நடத்துதல் ஆகிய மூவகையான சக்தியே இந்த உலகத்தை ஆள்கிறது. இதையே இச்சா, கிரியா, ஞானசக்தி என சாஸ்திரம் சொல்கிறது.

* “காலம் பணவிலை உடையது’ என்ற ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. நேரத்தை ஒருபோதும் வீணாக கழிப்பது கூடாது.

* இன்று செய்ய வேண்டிய வேலையை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று தாமதப்படுத்தினால், அந்த செயல் நடக்காமல் போவதற்கும் கூட வாய்ப்பு இருக்கிறது.

* எந்தச் செயலும் மனதில் தோன்றிய உடனே ஆயத்தப்பணிகளில் இறங்கி விட வேண்டும். தள்ளிப் போடுவதால் மனதில் உற்சாகம் குறையத் தொடங்கும்.

– பாரதியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top