Home » 2016 » June (page 4)

Monthly Archives: June 2016

பதில் சொல்லுங்க கடவுளே!!!

பதில் சொல்லுங்க கடவுளே!!!

ஓர் அழகான குளம். அக்குளத்தில் தாமரையும், ஆம்பலும் பூத்து இருந்தன. அதன் கரையோரத்தில் கொக்கு மீனுக்காகக் காத்து நின்றது. குளத்திற்குப் பக்கத்தில் பெரிய வேப்பமரம் வளர்ந்திருந்தது. அதன் வழியே நடந்து செல்பவர்கள் இளைப்பாற குளத்தில் நீரைக் குடித்துவிட்டு, அருகில் வளர்ந்துள்ள வேப்பமரத்தடியில் உறங்கிவிட்டுச் செல்வர். பருந்து ஆகாயத்தில் வட்டமிட்டுப் பறந்தது. வேப்பமரத்தைச் சுற்றிப் பறந்து வந்து கிளையில் உட்கார்ந்தது. குளக்கரையில் மீனுக் காகக் காத்திருந்த கொக்கு, மீன் கிடைக்காததால், பறந்து சென்று வேப்ப மரத்தின் உச்சியில் உட்கார்ந்து ... Read More »

நான் நிரந்தரமானவன்!!!

நான் நிரந்தரமானவன்!!!

‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை… எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை…’ தான் இறக்கும் சில மாதங்களுக்கு முன் தனக்கு தானே இரங்கட்பா எழுதிய கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இவை. காலத்தால் அழியாத ‘கிளாசிக்’ பாடல்களின் ‘கிங் மேக்கர்’. ‘கவியரசர்’ என்றதும் குழந்தை கூட கூறிவிடும் பெயர் தான் கண்ணதாசன். 1924 ஜூன் 24ல் சிறுகூடல்பட்டியில் பிறந்து பட்டி தொட்டியெல்லாம் தன் பாடல் வரிகளை பாய்ச்சிய அந்த காவிய நாயகனுக்கு இறைவன் அளித்த வாழ்நாள் 54 ஆண்டுகள் மட்டுமே. ‘மாட்டு ... Read More »

அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள்!!!

அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள்!!!

அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் : அரிக்கன் விளக்கு காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு. அம்மி குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல். அண்டா அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம். அடுக்குப்பானை ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை ... Read More »

ஆய கலைகள் அறுபத்து நான்கு!!!

ஆய கலைகள் அறுபத்து நான்கு!!!

ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை?  1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);  2. எழுத்தாற்றல் (லிபிதம்); 3. கணிதம்; 4. மறைநூல் (வேதம்); 5. தொன்மம் (புராணம்); 6. இலக்கணம் (வியாகரணம்); 7. நயனூல் (நீதி சாத்திரம்); 8. கணியம் (சோதிட சாத்திரம்); 9. அறநூல் (தரும சாத்திரம்); 10. ஓகநூல் (யோக சாத்திரம்); 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்); 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்); 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்); 14. மருத்துவ ... Read More »

பரத நாட்டியம்!!!

பரத நாட்டியம்!!!

பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதச்சித்தரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப – பாவம், ர – ராகம், த – தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் “ப” “பாவம்” (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், “ர”, “ராகம்” (இசை) என்ற சொல்லிலிருந்தும், ... Read More »

பரம்பரை!!!

பரம்பரை!!!

நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும் பொழுது, பரம்பரை பரம்பரையாய் என்று சொல்வதுண்டு… பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக என்று சொல்லலாம் என்றாலும், “தலைமுறை தலைமுறையாக” என்பதே உண்மை பொருள் ஆகும். அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!.. பரன் + பரை = பரம்பரை நமக்கு அடுத்த தலைமுறைகள்: நாம் மகன் + மகள் பெயரன் + பெயர்த்தி கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த்தி எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி நமக்கு ... Read More »

செப்பு பாத்திரங்கள்!!!

செப்பு பாத்திரங்கள்!!!

நம் முன்னோர்கள் செப்பு பாத்திரங்களை ஏன் பயன்படுத்தினார்கள்? செப்பு, வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய ஆற்றலுடையது . ஆயுர்வேதம் செப்பு பாத்திரங்களில் தண்ணீர் சேமிப்பதை பரிந்துரைக்கிறது. இன்று கூட, இராமேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவில் நிர்வாகம், சிவபெருமானுக்கு வழங்கப்படும் கங்கை நதியிலிருந்து இருந்து கொண்டு தண்ணீரை சேமிக்க பெரிய அளவிலான செப்பு பாத்திரங்களை பயன்படுத்துகிறது இவ்வாறு சேமிக்கப்படும் நீர், சுமார் ஓர் ஆண்டு வரை சுத்தமாகவே இருக்கும். மேலும் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, செப்பு பாத்திரத்தில் சேமிக்கப்படும் நீர், ... Read More »

ஈபிள் கோபுரம்!!!

ஈபிள் கோபுரம்!!!

ஈபிள் கோபுரத்தின் சிறப்பம்சங்கள் – தெரிந்துகொள்வோம் :- பிரஞ்சு நாட்டில் உள்ள ஈபிள் கோபுரம் (Eiffel Tower) 1889 மார்ச் 31ஆம் தேதி திறக்கப்பட்டது. இது அகில உலகக் கண்காட்சி மற்றும் பிரெஞ்சுப்புரட்சி நூற்றாண்டு நிறைவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது. 1887 இல் கட்டத் தொடங்கிய காலத்தில் இதனை 20 வருடம் கழித்து இடிக்கத் திட்டமிட்டனர். ஆனால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் தொடர்பான மேலும் சில ... Read More »

முருங்கைக்காயின் மருத்துவ குணங்கள்!!!

முருங்கைக்காயின் மருத்துவ குணங்கள்!!!

முருங்கைக்காயின் மருத்துவ குணங்கள்:- அனைவரும் விரும்பிச் சாப்பிடும் முருங்கைக்காயில் எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. ஆனால் நாம் அறிந்திருப்பதோ சில பயன்களை மட்டுமே. பயன்களை அறிந்து காய்கறிகளை சாப்பிடுவோமே பகுதியில் இன்று நாம் பார்க்க விருப்பது முருங்கைகாய். என்ன சத்துகள் இருக்கு: தினமும் முருங்கைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள். பொதுவாக முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் புரதம் 2.5 கிராம், கார்போஹைட்ரேட் 3.7 கிராம்,தண்ணீர் 86.9%, ... Read More »

தத்துவங்கள்!!!

தத்துவங்கள்!!!

தத்துவங்கள்… * ஒவ்வொருவரும் தனது வியாபாரத்தில் வெற்றி பெற வேண்டுமானால், லாபம் பெறுவது, வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவது இரண்டையும் சமமாக கருத வேண்டும். * எந்த ஒரு தொழிலுக்கும் அன்பு நிறைந்த உபசாரமும், இனிமை கலந்த உரையாடலும் வெற்றியை தேடி தரும். * பொறுப்பில் இருக்கும் ஒவ்வொரும் வெற்றியும், தோல்வியும் தம்முடைய பணியில் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். * எந்த ஒரு செயலிலும் மன துணிச்சலுடன் முடிவு எடுப்பவர்கள் தன் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். * ஒரு ... Read More »

Scroll To Top