தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில்(திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன. 1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும். தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதி அடையும். 2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும். 3. தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் ... Read More »
Monthly Archives: March 2016
நல்ல மனம் வாழ்க!
March 31, 2016
* பிறருடைய பசியைப் போக்குவதோடு நமது கடமை முடிந்து விடுவதில்லை. அவர்களின் துன்பத்தையும் களைய முயற்சிக்க வேண்டும். * அரிதான மானிட தேகம் எல்லா உயிர்களுக்கும் கிடைப்பதில்லை. இதைப் பாதுகாத்து திடமாக வைத்துக் கொள்வது நம் கடமை * கற்பனை அனைத்தையும் கடந்தவன் இறைவன். அவனை நம் கற்பனை எல்லைக்குள் கொண்டு வர இயலாது. * அம்பை ஏவி விட்டவனுக்குப் பதிலாக, அம்பையோ, அம்பு செய்து கொடுத்தவனையோ நொந்து கொள்வதால் ஒருபயனும் இல்லை. * உத்தமர் தம் ... Read More »
முட்டைக் கோஸ் – சத்துப்பட்டியல் :-
March 30, 2016
உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்…* பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது. * பச்சை முட்டைக்கோஸ் இணையற்ற சத்துக்கள் கொண்டது. குறைந்த கலோரி ஆற்றல் வழங்கக் கூடியது. கொழுப்பும் ... Read More »
அரிப்பு நோயை தடுக்க நாட்டு வைத்தியம்:-
March 30, 2016
கொசுக்களை விரட்டுவதற்கு சருமத்தில் க்ரீம்களை தடவுவதால், ஒருவேளை இன்னும் அதிகமாக கொசுக்கடிக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படலாம். குறிப்பாக வெப்பம் அதிகமாக இருக்கும் சமயத்தில் தூங்குவதற்கு முயற்சிக்கும் போது, சரும அரிப்பு காரணமாக நாம் சொரிய ஆரம்பிக்கிறோம். உடனடியாக அரிப்பிலிருந்து சுகம் கிடைப்பதற்கு, பாதிக்கப்பட்ட பகுதியை சொரிவதால், அந்த இடத்தில் இன்னும் வீக்கம் அதிகமாகிறது. இதனால் மேலும் சருமத்தில் அரிப்பு அதிகமாகி இரத்தம் வரும் வரை சொரியும் சமயத்தில், அழுக்கான விரல் நகங்களால் சருமத்தில் கீறல் ஏற்பட்டு, நோய்த்தொற்று ... Read More »
மின்சாரம் பற்றிய அகத்தியர் பாடல்!!!!
March 30, 2016
சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு. “சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம் சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி கஷ்த்பம்சுப்ஹி தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ் பர்தச்சடிதஸ்த்ஹா சன்யோகஜ்ய்தே தேஜோ மித்ரவருனசங்கியதம்” புரியலை நா விட்டுடுங்க…, நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய ... Read More »
உழைத்து வாழ வேண்டும்!
March 30, 2016
ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தார். அவர் பிறந்த நாளை ஒட்டி அந்த தேசத்திலிருந்த அறிஞர்களெல்லாம் அவரைப் புகழ்ந்து பாடல்களைப் பாடிக் குவித்தனர். அரசன் அவர்களைப் பாராட்டி விட்டுக் கூறினார்:- அறிஞர் பெருமக்களே..! உங்கள் அறிவுத் திறமையைக் கண்டு வியந்துபோகிறேன். ஆனாலும் இந்த அறிவுத் திறமை என்னைப் புகழ்வதில் மட்டும் இருந்து வீணாகி விடக் கூடாது. எதிர்கால சந்ததியினருக்கு உங்கள் அறிவு மிகவும் பயன்பட வேண்டும். ஆகவே அதற்கு உங்கள் அறிவைப் பயன்படுத்த என்ன செய்யலாம்? ஒரு ... Read More »
வேலைக்காரி மாரியம்மா
March 30, 2016
அந்த வீட்டு வேலைக்காரி மாரியம்மாவுக்கு ராத்திரி தூக்கமே பிடிக்கலே. மறுநாள் ஊரிலிருந்து சின்னம்மா குடும்பத்தோட வாராங்க. ஏகப்பட்ட வேலை கெடக்குது. “விடியரவரெ தூங்கிட்டிருந்திராதே. சின்னம்மா வர்றதுக்குள்ளே எல்லாவேலையும் முடிச்சுக்கணும் இல்லேன்னா உட்கார்ந்து பேசக்கூட நேரமிருக்காது. சாயிந்தரமே போனாலும் போயிருவாங்க “ன்னு படுக்கப் போகும் போதே சொல்லியிருக்காக. அப்புறமும் லேட்டா எந்திரிச்சா அவங்க மூஞ்சியக் காட்ற மாதிரி ஆயிடும். போனதடவை வந்தப்போ அடுத்த தடைவை வரும்போது பழைய சேலைகள் கொண்டுவருவதாகச் சொல்லியிருந்தாள். “பெரியம்மா சேலைகள் நமக்குத்தான் ஆகும். சின்னம்மா ... Read More »
நீதிக்கதை:பல வருடப்பழக்கத்தால்….
March 29, 2016
ஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான்.அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான். அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின. அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான்.எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தைமட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் ... Read More »
யானையின் அடக்கம்.
March 29, 2016
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது. அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்தது. அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா, நீ பயந்து ... Read More »
ஆண்டவன் உலகத்தின் முதலாளி!
March 29, 2016
வயலுக்குச் செல்லும் வழியில், குளக்கரை பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு செல்வான் வேலு. விவசாயத்திற்கு ஏற்றது போல மழையோ, வெயிலோ எப்போதும் இருப்பதில்லை என்பது உலகம் முழுமைக்கும் பொதுவான விதி தான். இருந்தாலும் அவன், “”பிள்ளையாரப்பா! ஒரேயடியா வெயில் அடிக்குது! வேண்டாத நேரத்தில் காத்தடிக்குது! நேரங்கெட்ட நேரத்தில் மழை பெய்யுது! விவசாயம் செய்யவே முடியமாட்டேங்குது!” என்று வருத்தப்பட்டு வணங்குவான். அவன் தினமும் இப்படி பிரார்த்திப்பதைக் கேட்ட பிள்ளையார் ஒருநாள் அவன் முன் வந்தே விட்டார். வேலு அவரிடம், “”சுவாமி! ... Read More »