ஒரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான்.அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான். அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின. அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான்.எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தைமட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் ... Read More »
Daily Archives: March 29, 2016
யானையின் அடக்கம்.
March 29, 2016
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது. அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்தது. அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா, நீ பயந்து ... Read More »
ஆண்டவன் உலகத்தின் முதலாளி!
March 29, 2016
வயலுக்குச் செல்லும் வழியில், குளக்கரை பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டு செல்வான் வேலு. விவசாயத்திற்கு ஏற்றது போல மழையோ, வெயிலோ எப்போதும் இருப்பதில்லை என்பது உலகம் முழுமைக்கும் பொதுவான விதி தான். இருந்தாலும் அவன், “”பிள்ளையாரப்பா! ஒரேயடியா வெயில் அடிக்குது! வேண்டாத நேரத்தில் காத்தடிக்குது! நேரங்கெட்ட நேரத்தில் மழை பெய்யுது! விவசாயம் செய்யவே முடியமாட்டேங்குது!” என்று வருத்தப்பட்டு வணங்குவான். அவன் தினமும் இப்படி பிரார்த்திப்பதைக் கேட்ட பிள்ளையார் ஒருநாள் அவன் முன் வந்தே விட்டார். வேலு அவரிடம், “”சுவாமி! ... Read More »
தன்னம்பிக்கையின் எதிரி யார்?
March 29, 2016
வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பொறாமை என்னும் சாத்தானை மனதிற்குள் நுழையவே அனுமதிக்கக்கூடாது. ‘ஆமை புகுந்த வீடும், அமீன புகுந்த வீடும் உருபாடது என்பது பழமொழி. இந்தப் பழமொழியில் ஆமை(tortoise) என்றால் ‘ஆமை’ என்ற பிராணியைக் குறிப்பதல்ல. மனிதனை வீழ்த்தும் குணங்களில் முதன்மையானது இந்த பொறாமை குணம்தான். ‘பொறாமை’ என்ற குணம் நம் உடல் முழுவதும பரவி, நமது சிந்தனைகளை சிதைத்துவிடுகிறது. பொறாமை குணத்தின் காரணமாகத்தான் கௌரவர்கள் 100 பேரும், தங்களதுசாம்ராஜ்யத்தையே இழந்தார்கள். இந்தக் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். இயலாமையின் வெளிப்பாடுதான் பொறாமையின் அடிப்படை. பொறாமை உள்ளவர்களுக்கு வேறு எதிரியே தேவையில்லை. அது ஒன்றே போதுமானது. ஒவ்வொருவரும் ... Read More »
ஒரே வரியில் கீரைகளின் மருத்துவ குணங்கள் :-
March 29, 2016
1. அகத்தி கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.2. காசினிக் கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். சூடு தணிக்கும். 3. சிறு பசலைக் கீரை சரும நோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குறைக்கும். 4. பசலைக் கீரை தசைகளை பல மடையச் செய்யும். 5. கொடி பசலைக் கீரை வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும். 6. மஞ்சள் கரிசலை கல்லீரலை பல மாக்கும். காமாலையை விலக்கும். 7. குப்பை கீரை பசியைத் தூண்டும். ... Read More »
ஆரோக்கியம் தரும் மூலிகை குடிநீர் :-
March 29, 2016
ஆவாரம்பூ குடிநீர்:- நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம். இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை ... Read More »
சித்த மருத்துவ குறிப்புகள்:-
March 29, 2016
அஜீரணம் அகல: 1. ஓம வாட்டரும், தேனும் கலந்து குடிக்கலாம். 2. ஓமத்தை வாணலியில் பொரித்து, தண்ணீரில் வேகவிட்டு அந்த தண்ணீரையும் வடிகட்டிக் குடிக்கலாம். 3. சோடா, எலுமிச்சம்பழம் உப்பு போட்டு அருந்தினாலும் வயிற்றுவலி குறைந்து ஜீரணம் ஏற்படும் உடல் வலி தீர: துளசியிலை, மிளகுப்பொடி, சுக்குப்பொடி இவைகளை தண்ணீரில் போட்டு கஷாயமாக்கி பாலும், சர்க்கரையும் சேர்த்துப் பருகவும். சளியை விரட்ட: சாம்பிராணி, மஞ்சள், சீனி கொண்டு புகைப்பிடிக்கவும். இருமலுக்கு: மிளகு, அதிமதுரம், சித்தரத்தை, திப்பிலி (ஒரு ... Read More »
நெய்யின் மருத்துவ குணங்கள்:-
March 29, 2016
ஜீரண சக்தியைத் தூண்ட: நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக் கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக் கொள்ளலாம். நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. புற்றுநோய், வைரல் நோய்களை தடுக்கிறது. நெய்யில் CLA – Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது. அதுபோல் ஒமேகா ... Read More »
திடீர் மயக்கங்கள் வருவது ஏன்?
March 29, 2016
பாத்ரூம் போனபோது மயங்கிவிட்டேன். படுக்கையிலிருந்து எழுந்தபோது மயங்கிவிட்டேன். யாரோ கூப்பிட்டபோது திரும்பிப் பார்க்கையில் விழுந்துவிட்டேன். சாமிக்கு வைப்பதற்காக பூ கொய்வதற்கு சென்றபோது என்ன நடந்ததெனத் தெரியாது விழுந்துவிட்டேன். இப்படிப் பலவாறாகச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள் திடீர் மயக்கங்கள் யாருக்கு வருகின்றன? பொதுவாக வயதானவர்களிடையே இவ்வாறு மயக்கம் வந்து விழும் சம்பவங்களை அதிகம் காண்கிறோம். சில தருணங்களில் பள்ளி மாணவர்களும் கூட அவ்வாறு விழுகிறார்கள். மூளைக்குச் செல்லும் இரத்தம் திடீரென குறையும்போதுதான் மயக்கம் ஏற்படுகிறது. இரத்தம் செல்வது குறைந்தால் மூளையின் கலங்களுக்கு ... Read More »
அத்திப்பழம் மருத்துவ குணங்கள்:-
March 29, 2016
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது 1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும், 2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி ... Read More »