Home » 2016 » March » 18

Daily Archives: March 18, 2016

செத்தவன் பிழைத்த மர்மம்!!!

செத்தவன் பிழைத்த மர்மம்!!!

தெனாலிராமனை அழைத்து வந்த காவலரைப் பார்த்து, “”ராஜகுரு எங்கே?” என்று கேட்டார் மன்னர். “”அவர் அடித்த அடியில் நகர முடியாமல் கிடக்கிறார்!” என்றனர் காலவர்கள். “”அடப்பாவிகளா! அவரை ஏன் அடித்தீர்கள்? நான் அடிக்கச் சொன்னது இவனையல்லவா?” “”தோளிலிருப்பவனை நையப்புடையுங்கள் என்றீர்கள்! தோளில் இருந்தவர் அவர்தான்!” என்றனர் பயந்துகொண்டே. “”தெனாலிராமா! எப்படி இந்த மாற்றம்?” என்று ஆத்திரத்தோடு கேட்டார் அரசர். “”மன்னா! தாங்கள் சேவகர்களிடம் ஏதோ சொல்வது தெரிந்தது. ராஜகுரு என்னைச் சுமந்து வருவது தங்களுக்குப் பிடிக்கவில்லையோ என ... Read More »

ராஜ யோகம் பகுதி – 7

ராஜ யோகம் பகுதி – 7

1. சமாதி பாதம் சமாதி: அதன் ஆன்மீகப் பயன்கள் 1. அத யோகானுசாஸனம் இனி யோகம் விளக்கப்படும் 2. யோகச்சித்த வ்ருத்தி நிரோத சித்தம் பல்வேறு உருவங்களை எடுக்காமல், அதாவது பல்வேறு விருத்திகளாக மாறாமல் தடுப்பதே யோகம். இங்கு விரிவான விளக்கம் தேவைப்படுகிறது. சித்தம் என்றால் என்ன, விருத்திகள் என்றால் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். எனக்குக் கண்கள் உள்ளன. ஆனால் காண்பவை அவை அல்ல. அதற்குரிய மையத்தை மூளையிலிருந்து அகற்றி விடுங்கள் கண்கள் திறந்திருக்கும், ... Read More »

ராஜ யோகம் பகுதி – 6

ராஜ யோகம் பகுதி – 6

7. தியானமும் சமாதியும் மன ஒருமைப்பாடு என்ற லட்சியத்திற்கு ராஜயோகம் நம்மை அழைத்துச் செல்கிறது. அதிலுள்ள நுட்பமான விஷயங்களைத் தவிர பல்வேறு படிகளை ஓரளவிற்குப் பார்த்தோம். மானிடர் என்ற நிலையில் நமது பகுத்தறிவு எல்லாம் உணர்வைச் சார்ந்தே இருக்கிறது. இந்த மேஜையும் நீங்களும் இங்கிருப்பதை நான் உணர்வதால்தான் நீங்களும் மேஜையும் இங்கே இருப்பதை நான் அறிய முடிகிறது. அதே வேளையில் என்னில் மிகப் பெரும் பகுதியை நான் உணர்வதில்லை. உடலின் உள்ளே உள்ள பல உறுப்புகள், மூளையின் ... Read More »

பழமும் இல்லை! தோலும் இல்லை!

பழமும் இல்லை! தோலும் இல்லை!

அக்பர் அரசியாருடன் உணவருந்திக் கொண்டிருந்தார். அக்பருக்கு மிகவும் பிடித்தமான வாழைப்பழங்கள் அக்பரின் இலையில் கூடுதலாக வைக்கப்பட்டிருந்தது. உணவை சாப்பிட்டபின் இலையில் இருந்த அனைத்து வாழைப் பழங்களையும் சாப்பிட்டு முடித்தார். பழங்களை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை அரசியாரின் இலையில் ஒரு ஓரத்தில் வைத்து விட்டார். அக்பரிடம் முக்கியமான செய்தி ஒன்றினை கூறுவதற்காக பீர்பால் அங்கு வந்தார். ‘பீர்பால், இப்பொழுதுதான் உங்களை நினைத்துக் கொண்டேன்! நீங்களே வந்து விட்டீர்கள் இங்கே பார்த்தீர்களா? இலையில் வைத்திருந்த அனைத்து வாழைப் பழங்களையும் அரசியார் ... Read More »

ராஜ யோகம் பகுதி – 5

ராஜ யோகம் பகுதி – 5

 5. சித்துப் பிராணனைக் கட்டுப்படுத்துதல் இப்போது பிராணாயாமத்திலுள்ள பயிற்சிகளைப் பார்ப்போம். யோகிகளைப் பொறுத்தவரை நுரையிரல்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதுதான் முதற்படி. உடலிலுள்ள நுண்ணிய இயக்கங்களை உணர்வதே நாம் செய்ய வேண்டுவது. நமஆ மனம் புறமாகிவிட்டது. அகத்தில் நிகழ்கின்ற நுண்ணிய இயக்கங்களை உணரும் தன்மையை இழந்துவிட்டது. அவற்றை உணரத் தொடங்குவோமானால் அடக்கி ஆளவும் தொடங்குவோம். நரம்புகள் உடல் முழுவதும் பரவிச் சென்று ஒவ்வொரு தசைக்கும் ஊக்கமும் சக்தியும் ஊட்டுகின்றன. ஆனால் அவற்றை நாம் உணர்வதில்லை. அவற்றை உணர்வதற்கு நாம் பழகலாம் ... Read More »

ராஜ யோகம் பகுதி – 4

ராஜ யோகம் பகுதி – 4

மனித உடலில் இந்தப் பிராணனின் நன்கு புலனாகும். வெளிப்பாடு நுரையீரல்களின் இயக்கமாகும். அது நின்று விட்டால் உடலில் உள்ள மற்ற சக்தி வெளிப்பாடுகள் எல்லாம் உடனே நின்றுவிடுகின்றன. இந்த இயக்கம் நின்றாலும் உயிர் வாழ்வதற்கான பயிற்சி பெற்ற சிலர் இருக்கின்றனர். பூமியில் தங்களைப் புதைத்துக் கொண்டு, சுவாசிக்காமலே பல நாட்கள் வாழ்பவர்கள் உள்ளனர். சுட்சுமத்தை அடைய தூலத்தின் உதவி வேண்டும். இவ்வாறு மெள்ளமெள்ளச் சென்று மிக நுண்ணியதை அடைய வேண்டும். உண்மையில் நுரையிரல்களின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதுதான் பிராணாயாமம். ... Read More »

Scroll To Top