Home » 2016 » March » 16

Daily Archives: March 16, 2016

பல்சுவை!!!

பல்சுவை!!!

கவலைப்பட வேண்டாம் பெரிய மரத்தின் மீதுதான் புயற்காற்று மோதுகிறது: கிளறிவிடுவதனால் நெருப்பு மேலும் நன்றாக எரிகிறது; தலையில் அடிபட்ட பாம்பு படமெடுக்கிறது என்று இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். நெஞ்சுபுண்பட்டு வேகும்போதும் துன்பப் புயல் நம்மைச் சுற்றி நாலா புறங்களிலும் வீசும்போதும் இனி வாழ்க்கையில் ஒளியையே காண முடியாதா என்று தோன்றும்போதும். நம்பிக்கையும் துணிவும் கிட்டத்தட்ட அறவே நம்மை விட்டு அகன்று விட்ட போதும் அப்படிப்பட்ட ஒரு பெரிய ஆன்மிகப் புயல் சூழ்ந்த நிலையின் நடுவில்தான் பிரம்மத்தினுடைய ... Read More »

நமது தாய்நாடு!!!

நமது தாய்நாடு!!!

இந்தியா அழிந்துவிடுமா? அது அப்படி அழிந்து விடுமானால் உலகிலிருந்து எல்லா ஞானமும் அழிந்து போய்விடும். நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும்.சமுதாயத்தின் மீது நமக்குள்ள இதயபூர்வமான இனிய அனுதாப உணர்ச்சிகள் எல்லாம் அழிந்து போய்விடும், எல்லா உயர்ந்த இலட்சியங்களும் மறைந்து போய்விடும். அவை இருந்த இடத்திலே காமமும் ஆடம்பரமும் ஆண் தொய்மாகவும் , பெண் தெய்வமாகவும் குடிகொண்டு ஆட்சி செய்யும். பணமே அங்குப் பூசாரியாக உட்கார்ந்து கொள்ளும். வஞ்சகம் பலாத் காரம், போட்டி ஆகியவற்றையே அது தன்னுடைய ... Read More »

சிரிக்க வைத்தால் பரிசு!!!

சிரிக்க வைத்தால் பரிசு!!!

ஒருநாள், அக்பருக்கு விசித்திரமான எண்ணம் தோன்றியது. பீர்பாலை அழைத்து, என்னைச் சிரிக்கும்படி செய்துவிட்டால், நீர் கேட்கும் பரிசை அளிப்பேன் என்று கூறினார். என்னனென்னவோ சொல்லி, முயன்று பார்த்தார் பீர்பால். அக்பர் சிறிதும் அசையாமல், சிரிக்காமல் அப்படியே உட்கார்ந்திருந்தார். கடைசியாக, ஒரு தந்திரத்தைக் கையாளத் தொடங்கினார் பீர்பால். அக்பருடைய காதில், ‘இப்பொழுது நீங்கள் சிரிக்காவிட்டால், நான் என்ன செய்வேன் தெரியுமா? உம். என் விரல்களால் உங்கள் விலா எலும்புகளை அழுத்தி, கூச்சத்தை உண்டாக்குவேன்’ என்று குசு குசு வென்று ... Read More »

தந்தைக்கு குழந்தை பிறந்தது!!!

தந்தைக்கு குழந்தை பிறந்தது!!!

அக்பர், பீர்பாலிடம் ‘நான் மருந்து சாப்பிட்டு வருகிறேன்; காளை மாட்டுப்பாலில் கலந்து சாப்பிடுமாறு மருத்துவர் கூறுகிறார் ஆகையால், எனக்குக் காளை மாட்டுப் பால் வேண்டும், என்று கூறினார். அப்படியே ஏற்பாடு செய்வதாகவும் அதற்கு ஒரு வாரம் அவகாசம் தேவைப்படும் எனவும் கூறினார் பீர்பால். ‘எத்தனை நாளானாலும் சரி, எனக்குக் கிடைத்தால் போதும்’ என்றார் அக்பர். வீட்டுக்கு வந்தார் பீர்பால்; தம் மகளை அழைத்து ஏதோ சொல்லிவிட்டு, யார் என்ன கேட்டாலும் பதில் சொல்ல வேண்டாம் எனவும் அரசர் ... Read More »

இறைவன் அளித்த பரிசு!!!

இறைவன் அளித்த பரிசு!!!

அக்பர் சபையில் அனைவரும் கூடியிருந்தனர். தினமும் பீர்பால் எதையாவது சொல்லுகிறார்; அதை அரசரும் உடனே ஆமோதித்துப் பாராட்டுகிறாரே எனப் பொறாமைக்காரர் ஒருவர், ‘இன்று, எப்படியாவது பீர்பாலை மட்டம் தட்டிப் பாராட்டுப் பெற வேண்டும்’ எனத் தீர்மானித்தவராகக் காணப்பட்டார். சபையில் பீர்பாலைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார் பொறாமைக்காரர். அதைக் கவனித்த அக்பர், அவரைப் பார்தது, சிரிப்பின் காரணம் என்னவெனக் கேட்டார். ”அரசர் மிகுந்த சிவப்புநிறம்; மற்ற அமைச்சர் பிரதானிகள் அனைவரும் சிவப்பு நிறமாகவே இருந்தனர். பொறாமைக்காரரும் சிவப்பு நிறத்தவரே, ... Read More »

Scroll To Top