திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு இன்னொரு பெயர் இருக்கு உங்களில் யாருக்காவது தெரியுமா … ???
… பஞ்ச ரோடு ….. என்று சொல்லுவார்கள் …!!!
பஞ்ச ரோடு –என பெயர் வர காரணம் என்ன தெரியுமா .?
1895 ஆம் ஆண்டு நம் நாட்டில் ஏற்ப்பட்ட கடுமையான பஞ்சத்தின்பொது அப்போதைய வெள்ளைக்காரன்
தோராய கணக்குப்படி சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல்
பசியால் மட்டுமே இறந்துவிட்டனர் …
அந்த நேரத்தில் வெள்ளைக்காரன் பஞ்சத்தை போக்க எவ்வளவோ முயற்சிகளை எடுத்துக்கொண்டானாம் …
வெளிநாடுகளில் இருந்து கப்பல் கப்பலாய் உணவு தானியங்களை கொண்டுவந்து இறக்கியும் பஞ்சம் தீரவில்லை
எங்கு பார்த்தாலும் பசி பட்டினி … மரண ஓலங்கள் ..
அந்த நேரத்தில்தான் வெள்ளைக்காரன், உணவு தானியங்களை விரைவாக பல ஊர்களுக்கு எடுத்துச்செல்ல, பஞ்சத்தால் வாடும் மக்களை வைத்தே அந்த சாலையை அமைத்தானாம்
ரோடு போட போறவங்களுக்கு கூலியாக ஒரு குவளை
அரிசி கஞ்சி குடுப்பானாம் …
அதனாலதான் அந்த (திருச்சி – சென்னை) ரோட்டுக்கு
…. பஞ்ச ரோடு …. அப்புடின்னு பேரு வந்துச்சாம் ….
அப்போதைய மக்கள் தொகை பதினேழு கோடி மட்டுமே …
இப்போ நூத்தி இருபது கோடிக்குமேல், அதே பஞ்சம் இப்போ வந்தா என்ன ஆகும் … ???