1) குளிர் காலத்தில் சருமத்தின் மென்மை, நெகிழ்வுத் தன்மையைப் பராமரிக்க, சோப்புக்குப் பதிலாக, கடலை மாவைப் பயன்படுத்தலாம்.
2) குளிர் காலத்தில் கூந்தல் அதிகமாக வறண்டு விடுவதுடன், ஓரங்களில் வெடித்துப் போய் அதிக முடி இழப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, இளஞ்சூடான ஆலிவ் எண்ணெயை தலையில் தடவி, மசாஜ் செய்து ஊறிய பிறகு குளிக்கலாம்.
3) சிலருக்குக் குளிர் தாங்காமல், தசைப்பிடிப்பு ஏற்பட்டு வலி உண்டாக வாய்ப்புகள் உண்டு. வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து, அதைத் துணியால் நனைத்து, பிடிப்பு ஏற்பட்ட பகுதியில் ஒத்தடம் கொடுத்து வந்தால், நிவாரணம் கிடைக்கும்.
4) குளிர்காலத்தில் பலருக்கு, பாதங்களில் உண்டாகும் பனி வெடிப்பால் ஏற்படும் வலி நீங்க, எளிய மருந்து, 50 கிராம் நல்லெண்ணெயை நன்றாகப் புகை வரும்படி சூடு செய்து, அதில் 2 அங்குல நீளமுள்ள மெழுகுவர்த்தியைத் தூள் செய்து போடவும். சூடு ஆறியதும், அதை எடுத்து வெடிப்பின் மீது தடவினால், விரைவில் வலி நீங்கி விடும்.
5) குளிர்காலத்தில் பாத வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்க, ஒரு பக்கெட் சுடுநீரில் சிறிது உப்பு போட்டுக் கால் பாதங்களைப் பத்து நிமிடங்கள் வைத்து, பிறகு பாதங்களை நன்கு துடைத்துவிட்டு மாய்சுரைசிங் கிரீம் அல்லது ஹேண்ட் அண்ட் பாடி லோஷனைத் தடவிவரலாம்.
6) குளிர்காலம் வரும்போது, மூட்டு வலியும் வரும். வேப்ப எண்ணெயைச் சூடாக்கி வெற்றிலையை வதக்கித் தடவி மூட்டில் பத்து போல் போட்டுக் கொண்டால், சிறிது நேரத்தில் வலி குறைய ஆரம்பித்து விடும். இதன் தொடர்ச்சியை நாளையும் பார்க்கலாம்…