Home » உடல் நலக் குறிப்புகள் » தோல்நோயையும் குணப்படுத்தும் மருதாணி
தோல்நோயையும் குணப்படுத்தும் மருதாணி

தோல்நோயையும் குணப்படுத்தும் மருதாணி

மருதாணி  எல்லாவகை நிலங்களிலும் வளரக் கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர்  அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது. இலைகள் 2 -முதல் 4 செ.மீ.  நீளமுடையது.

இது சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு மரம்.  பூக்கள் கொத்தாக வளரும், வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதாக் கலர்களில்  வழத்திற்குத் தகுந்தால் போல் இருக்கும். வாசனை உடையது. நான்கு இதழ்களைக்  கொண்டிருக்கும். இது ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக் குலுங்கும்.

உருண்டையான காய்கள் உண்டாகும், இதில் வரண்ட பின் சுமார் 45 விதைகள்  இருக்கும். இது மருத்துவ குணமுடையது. இதை அட்ட கர்ம மூலிகை என்றும்  கூறுவர். இது இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தில் வணிக ரீதியாக  வளர்க்கிறார்கள். விதையிலிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். இதை வாசனைப்  பொருளாகப் பயன் படுத்துகிறார்கள்.

பாகிஸ்தானில் அதிகம்  உபயோகிக்கிறார்கள். இதன் பூர்வீகம் வட ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆசியா  மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளிலும் பரவியுள்ளது. இதன் இலைகளை 5 நாட்கள்  நிழலில் உலர்த்திப் பயன்படுத்துவார்கள்.

இதை விதை மூலமும், கட்டிங் மூலமூம்  இனப் பெருக்கம் செய்வார்கள்.    வேறு பெயர்கள் மறுதோன்றி, அழவணம், ஐவணம் மற்றும் மெகந்தி ஆகியவை. ஆங்கிலப் பெயர் LAWSONIA INERMIS தாவரக்குடும்பம் : LYTHRACEAE மருத்துவக் குணங்கள்   மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க  வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.

புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை,  கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். மருதாணி வைத்துக்  கொள்ளும் வழக்கம், சங்க காலத்திலேயே இருந்தது.

மேகநோய் :  பால்வினை நோயான மேக நோய்க்கு இது சிறந்த மருந்து. இதன் இலை 10 கிராம் அளவு,  6 மிளகு, ஒரு பூண்டுதிரி, 5 கிராம் மஞ்சள் ஆகிய வற்றை அரைத்து, நாளும்  வெறும் வயிற்றில் குடித்துப் பால் அருந்தவும். புளி, புகை, காரம் கூடாது,  இதனால் மேக நோய், அதனால் ஏற்படும் கிரந்திப் புண், அரிப்பு ஆகியன  குணமாகும். 10 முதல் – 20 நாள் வரை சாப்பிட வேண்டும்.

தோல் நோய்  : மேக நோயால் ஏற்பட்ட தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த  இலையை, அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டு, காலை வெறும் வயிற்றில்  நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10  முதல்- 15 வரை நாள் சாப்பிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top