Home » உடல் நலக் குறிப்புகள் » கட்டிகளை கரைப்பதுடன்… புண்களை ஆற்றும் வல்லாரை!
கட்டிகளை கரைப்பதுடன்… புண்களை ஆற்றும் வல்லாரை!

கட்டிகளை கரைப்பதுடன்… புண்களை ஆற்றும் வல்லாரை!

வல்லாரை+ தூதுவிளை இரண்டையும் சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5  மி.லி. சாப்பிடவும். நோய்க் கேற்றவாறு காலம் நீடித்து சாப்பிட சயரோகம்,  இருமல் சளி குணமாகும்.

இதன் இலைச்சாறு நாளும் 5 மி.லி. காலை மாலை  சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால்  குணமாகும். ஆமணக்கெண்ணையில் இலையை வதக்கி, மேலே பற்றிடவேண்டும். கட்டிகளும்  கரையும். அரைத்துப் பூச புண்களும் ஆறும்.

வல்லாரை, உத்தாமணி, மிளகு  சமன் கூட்டி அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை செயுது காலை, மாலை 1  மாத்திரை வெந்நீரில் கொடுக்க, அனைத்து வகையான காய்ச்சலும் தீரும்.
கீழாநெல்லி, வல்லாரை சமன் அரைத்து சுண்டக்காயளவு காலை மட்டும், தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும்.

வல்லாரை சாற்றில் 7 முறை ஊறவைத்து, உலர்த்திய அரிசித் திப்பிலி, மூளை  சுறுசுறுப்பாக இயங்கவும், தொண்டைக் கரகரப்பு நீங்கவும் நல்ல சாரீரம்  கொடுக்கவும் பயன்படும்.
பெண்களுக்கு உதிரத்தடை ஏற்படும். மாதவிலக்கு  தள்ளிப்போகும். இதனால் இடுப்பு, அடிவயிறு கடுமையாக வலிக்கும். இதற்கு  வல்லாரை + உத்தாமணி இலையை சம அளவில் அரைத்து, 20-, 30 கிராம் அளவு காலை,  மாலை நான்கு நாள் சாப்பிட குணமாகும்.

வல்லாரயை நிழலில் உலர்த்தி  சூரணம் செய்து கொள்ளவும். பரங்கிச் சக்கையையும் இதே போல் சூரணம் செய்து,  இரண்டையும் சம அளவில் சேர்த்து, 5-,10 கிராம் காலை, மாலை பசும் வெண்ணெயில்  சாப்பிட வேண்டும். நோய்க்கேற்ப 6- முதல் 12 மாதம் சாப்பிட வேண்டும். மோர்  பாலில் தான் உணவு சாப்பிட வேண்டும். புளி, காரம், இனிப்புக் கூடாது.  புலால், புகை, மது கூடாது. குட்டம் குணமாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top