Home » உடல் நலக் குறிப்புகள் » வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

––––––––––––––––––––––––––––

1.வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்களை, வாழை இலை மீதுதான் படுக்க வைக்க வேண்டும். அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால், சாப்பாடு கெடாமலும், மணமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி, வாழை இலையில் கிடத்தி, காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால், சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும், இலையில் இருந்து பெறப்படும் குளுமையும், குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி, தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால், விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

8. வாழைமரத்தில், குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு, (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு, சின்ன வாழை இலையால், கிளறிய பகுதியை மூடி வைத்து, அதில் ஊறும் நீரை பருகினால், பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான். அது சைவ உணவாக இருந்தாலும், அசைவ உணவாக இருந்தாலும், இலையில் தான் நிச்சயம் இருக்கும். இலையில் சாப்பிடும் போது, ஏற்படும் நன்மைகளை அறியும் போது, ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top