Home » உடல் நலக் குறிப்புகள் » வால்நட் எனப்படும் அக்ரூட்!!!
வால்நட் எனப்படும் அக்ரூட்!!!

வால்நட் எனப்படும் அக்ரூட்!!!

வளம் சேர்க்கும் வால்நட்

உடல் பருமன் மற்றும் கொழுப்புச் சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வால்நட் எனப்படும் அக்ரூட்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என உணவியல் வல்லுனர்களும், ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

உடலில் தேவையற்ற கொழுப்புச் சத்தின் அளவு அதிகரிக்கும் போது மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் உண்டு. மனிதனுக்கு ஏற்படும் சில வகைப் புற்று நோய் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கும் ஆற்றலும் அக்ரூட்டுக்கு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நினைவுத்திறனை அதிகரிக்கும் ஒமேகா 340 ஆசிட்டுகள் அக்ரூட்டில் அதிகம் இருப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் வரை பாரபட்சமில்லாமல் சாப்பிடலாம். ஆண்டி ஆக்சிடன்ட்கள் இதில் அதிகம் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதாக உணவியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

வால்நட்

ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக கொண்டிருப்பவர்கள் அக்ரூட் பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பின் அளவைக் குறைத்து ஸ்லிம்மான, ஆரோக்கியமான தேகத்தைப் பெறலாம்.

இதில் ஏராளமான வைட்டமின் E இருப்பதால் நாளொன்றுக்கு ஒரு கைப்பிடி அளவு பருப்பை உண்டு வந்தால் மேனி பளபளப்பாகும். முதுமையைத் தள்ளிப் போடலாம். பென்சில்வெனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக நடத்திய ஆய்வில் உடலில் கொழுப்புச் சத்து அதிகம் கொண்ட ஆண், பெண்கள் வயது வித்தியாசமின்றி கலந்து கொண்டனர்.

முதல் கட்ட பரிசோதனைகளைத் தொடர்ந்து ஒரு வார காலம் குறிப்பிட்ட அளவிலான  அக்ரூட் பருப்புகளை உண்ணக் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்து காணப்பட்டது. இதன் மூலம் அக்ரூட் கொழுப்பைக் குறைக்கும் வல்லமை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்(Eating Walnuts) முக்கிய இடம் வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது மாரடைப்பு உட்பட பல்வேறு இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் உண்டு.

உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணம்.

இந்நிலையில் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு நடத்தினர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தெரிவு செய்யப்பட்டனர்.

முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு காரணம் முந்திரி, பாதாம் உட்பட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளது.

குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பது தான் இதற்கு காரணம். இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

விலை உயர்ந்த கட்டைகளை தரக்கூடியது அக்ரூட் மரம். மருத்துவ குணம் கொண்ட இந்த மரம் சிக்கிம், நேபாளம், ஆகிய பகுதிகளிலும் இமாலயப் பகுதிகளில் இயற்கையாக காணப்படுகிறது. அதிகம் காணப்படுகிறது. இந்த மரத்தின் இலை, பட்டை மற்றும் கனி போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. இந்த மரத்தில் கிடைக்க வால்நட் விதைகள் அதிக சத்து நிறைந்தவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தில் இருந்து பல வைட்டமின்கள், அமினோஅமிலங்கள், பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. வைட்டமின் டி, வைட்டமின் பி6, அஸ்கோரிப் அமிலம், சிஸ்டெயின், டிரிப்டோபேன், தயாமின், ரைபோஃபிளேவின்,நிக்கோடினிக் அமிலம், போலிக் அமிலம், பயோடின், ஜீக்ளோன்.

வாதநோய்களுக்கு மருந்து

இலை மற்றும் பட்டை வயிற்றுப்பூச்சிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. இவை தோல்நோய்கள், பால்வினைநோய், எக்ஸிமா, காசநோய், ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. கனிகள் வலுவேற்றியாகவும், வாதநோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகின்றன. காய்களின் மேல் உறை கிருமிகளை போக்க வல்லது. விதைகளை ருசியானவை. பால் உணர்வு தூண்டுவியாக கருதப்படுகிறது.

கொழுப்பு நீக்கும் வால்நட்

வால்நட்டில் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய ஓமேகா 3 அதிகம் காணப்படுகின்றன. இது வேலைப்பழுவினால் ஏற்படும் மன உளைச்சலை போக்க உதவுகிறது. இதனால் இதயநோய் பாதிப்பு குறைகிறது.

உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை வால்நட் தடுக்கிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் தடுக்கப்பட்டு மன அழுத்தம் ஏற்படுவது குறைகிறது. தினமும் 28 கிராம் முதல் 85 கிராம் அளவு வரை வால்நட் பருப்பு சாப்பிட்டு வந்தால் ஆறு மாதங்களில் கெட்ட கொலஸ்ட்ரலில் பத்து சதவிகிதம் வரை குறைகிறது. இத்துடன் இதயம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் குணமடைகின்றன.

இதய ஆரோக்கியம்

ஹார்வார்டு பல்கலைக்கழகம் கொலஸ்ட்ரலைக் குறைக்க வால்நட் பருப்பு சாப்பிடுங்கள் என்று சமீபத்தில் உறுதியாகத் தெரிவித்துள்ளது. இதற்காக வால்நட் தொடர்ந்து சாப்பிட்டவர்களின் இதய ஆரோக்கியம், கெட்ட கொலஸ்ட்ரல் அளவு முதலியவற்றை ஆராய்ந்தது. குறிப்பாக, 13 குழுக்களை ஆராய்ந்து முடிவை வெளியிட்டது. இதில் வால்நட் சாப்பிட்டவர்களின் இதயம் ஆரோக்கியமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

வால்நட் அதிகம் சாப்பிட்டால் கலோரி அதிகமாச்சே! இதனால் உடல் எடை அதிகரிக்குமோ என்ற சந்தேகம் எழுவது இயல்பு. வால்நட்டில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகளும், இரத்தத்தில் உறையாத கொழுப்பும் உள்ள பருப்பு வகை இது. நீங்கள் அதிகக் கலோரி உள்ள மற்ற உணவுகளைப் புறக்கணித்து விட்டு பயமின்றி வால்நட் சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் வளமையாக உள்ள ஒரு பொருளாக விளங்குகிறது வால்நட். காலம் காலமாக அதனை நட்ஸ் வகையாக மக்கள் உட்கொண்டு வருகின்றனர்.

ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னிலிருந்து, வால்நட் எண்ணெயால் உங்கள் சருமம், தலைமுடி மற்றும் உடல்நலத்திற்கு கிடைக்கும் நன்மைகளை கண்டு, பயன்படுத்தி வருகிறோம். சில காலங்களுக்கு முன்பிருந்தே, அதன் பயன்பாட்டில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளது.

பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ள அது அனைத்து மக்களுக்கும் பல பயன்களை அளித்து வருகிறது. குறிப்பாக அழகை பராமரிக்க வால்நட் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக சரும பிரச்சனைகள் மற்றும் கூந்தல் பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் உதவியாக உள்ளது.

ஆகவே இப்போது வால்நட் எண்ணெயால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்க்கப் போகிறோம். அதன் நன்மைகளை பற்றி அறிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

தினமும் இரவில் வால்நட் எண்ணெயை சருமத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் ஏற்படும் வறட்சியானது நீங்கி, சருமம் பொலிவோடு அழகாக இருக்கும்.

வால்நட் எண்ணெய் தோலின் சுருக்கத்தை நீக்குகிறது. இது எண்ணெய் பசையுடன் காணப்படுகிறது.இதை தொடர்ந்து தடவி வந்தால், இது உங்களுக்கு நல்ல வழியில் உதவி, குறித்த காலத்துக்குள் தோல் சுருக்கத்தை மறைய செய்கிறது.

நாம் அனைவருமே பூஞ்சைகளின் தாக்கத்தை அனுபவித்திருப்போம். அது நம்மை நிலை குலையச் செய்யும். இது போன்ற தொற்றுகளுக்கு வால்நட் எண்ணெய் சிறந்த தீர்வாக இருக்கும். பூஞ்சைகளின் தொற்றுக்கு வால்நட் எண்ணெய் மிகவும் நல்லது.

சொரியாசிஸ் என்ற இந்த அலர்ஜி நோயால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டு திகிலடைந்திருப்போம். ஆனால் இதை வால்நட் எண்ணெய் மிக அழகாக குணப்படுத்தும். அதற்கு இதை சாதாரணமாக குளிக்கும் போது குளிக்கும் நீரில் சேர்த்து பயன்படுத்தலாம்.

தற்போது அனைவரும் சந்திக்கும் அழகு பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அத்தகைய கருவளையத்தை போக்க, டீ பேக்குகளை வைப்போம். இருப்பினும் எந்த பலனும் கிடைக்காதவர்கள், வால்நட் எண்ணெயைக் கொண்டு கண்களை மசாஜ் செய்து வர உடனே கருவளையம் நீங்கும்.

இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட். இது முதுமையை எதிர்த்து போரிடுகிறது. மேலும் இது சருமத்திற்கும் மிகவும் நல்லது.

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி, தலை வாரும் போது, அதிக எண்ணிக்கையிலான முடி கொட்டுதலை விரும்ப மாட்டார்கள். முடி கொட்டுதல் ஒரு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால் வால் நட் எண்ணெய், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலத்தின் உதவியால், முடி கொட்டுதலை நிறுத்துகிறது. இந்த கொழுப்பு அமிலம், செல்களின் பாதிப்பைத் தடுக்கிறது.

வால்நட் எண்ணெய் பொடுகை அழிப்பதிலும், சிறந்து விளங்குகிறது. இது தலை சருமத்தை சுத்தப்படுத்தி, அதில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. இதை வழக்கமாக தினமும் உபயோகித்தால் நல்ல தீர்வை பெற முடியும். இது தலை சருமத்திலுள்ள தோலடுக்குகளை சுத்தப்படுத்தி, பொடுகை வர விடாமல் தடுக்கிறது.

வால்நட் எண்ணெயில் பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் அது தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்தும். அணுக்களின் புத்துயிர்ப்புக்கு பொட்டாசியம் பெரிதும் உதவுவதால், அது முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள்!

நட்ஸ் உடலுக்கு மட்டும் தான் ஆரோக்கியத்தை தரும் என்று நினைக்க வேண்டாம். நட்ஸ் சாப்பிட்டால், உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். அதேசமயம், அதனை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை வைத்து சருமத்தை பராமரித்தால், சருமம் நன்கு பொலிவோடு அழகாக பட்டுப் போன்று இருக்கும். இதுவரை நட்ஸில் பாதாம் எண்ணெடியை வைத்து மட்டும் தான் சருமத்தை பராமரிப்பது பற்றி தெரியும். ஆனால் அந்த நட்ஸில் ஒன்றான வால்நட்டை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன.

இத்தகைய எண்ணெயில் வைட்டமின், புரோட்டீன் போன்றவை அதிகம் இருப்பதால், அது சருமத்தில் ஒரு பெரிய அதிசயத்தை உண்டாக்கும். மேலும் இதில் நார்ச்சத்து, ஒமேகா-3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இந்த எண்ணெயிலிருந்து ஒரு நல்ல பலனை நிச்சயம் பெறலாம். அத்தகைய பலன் என்னவென்று பார்ப்போமா!!

சுருக்கங்கள்

வால்நட் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளமையான தோற்றத்தைத் தரும்.

தொற்றுநோய்கள்

சருமத்தில் ஏதேனும் பூஞ்சைகள் தாக்கி, அதனால் தொற்றுநோய்கள் ஏற்பட்டிருந்தால், அவற்றை போக்குவதற்கு வால்நட் எண்ணெய் சிறந்ததாக உள்ளது. அதற்கு வால்நட் எண்ணெயை ஏதேனும் மூலிகை எண்ணெயையுடன் சேர்த்து கலந்து, சருமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

தோல் அழற்சி ..!

சருமத்தில் தடிப்புகளுடன், சிவப்பு நிறத்தில் அழற்சி போன்று இருந்தால், அவற்றை சரிசெய்ய வால்நட் எண்ணெயைப் பயன்படுத்தலாம். அதிலும் இந்த எண்ணெயை குளிக்கும் நீரில் சிறிது சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் ஏற்படும் அழற்சியை சரிசெய்துவிடலாம்.

உடல் நோய்கள் 

வால்நட் எண்ணெயில் ஒரு நல்ல பொருளான ஒமேகா-3 உள்ளது. இந்த ஒமேகா-3 சத்தானது, நிறைய உடல் நல நன்மைகளை உள்ளடக்கியது. அதிலும் குறிப்பாக இதய நோய், சில வகையான புற்றுநோய்கள் மற்றும் அழற்சி குறைபாடுகளான சொறி, படை, சிரங்கு போன்றவற்றை குணமாக்க வல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top