Home » பொது » கசக்ஸ்தான் – குடியரசு நாள்!!!
கசக்ஸ்தான் – குடியரசு நாள்!!!

கசக்ஸ்தான் – குடியரசு நாள்!!!

கசக்ஸ்தான்

தலைநகரம்  அசுதானா

பெரிய நகரம் அல்மாடி

ஆட்சி மொழி  கசாக் (தேசிய மொழி) ரசிய மொழி

நாணயம்   தெங்கே

கஜகஸ்தான் வரலாறு நம் காலத்து பல நாடோடி பழங்குடியினர் இப்போது கஜகஸ்தான் என்ன வசித்து முன்பே என்று நமக்கு சொல்கிறது. பழங்காலத்தில் வரலாற்றாசிரியர்கள் சாகா அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். பல நூற்றாண்டுகளாக சாகா நிலம் இரத்தக்களரி, பேரழிவு போர்கள் காட்சி இருந்தது. மற்றும் பல வெற்றியாளர்கள் என்று நிலங்களைச் சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.

1218 இல், ஜென்சிஸ் கான் தலைமையிலான மங்கோலியப்-டாடர் நுழைய கஜகஸ்தான் படையெடுத்தனர். அவர்கள் தீயணைப்பு மற்றும் வாள் கொண்டு கசாக் நாடெங்கும். அந்த ஆக்கிரமிப்பு பிரச்சாரங்கள் கஜகஸ்தான் விளைவாக, முழு மத்திய ஆசிய பிராந்தியத்தில் போன்ற, கோல்டன் கூட்டத்தை என உலக வரலாற்றில் அறியப்பட்ட மங்கோலியப் பெரும் பேரரசை இணைக்கப்பட்டது.

எனினும், கோல்டன் கூட்டத்தை ஒரு நிலையற்ற மாநில மாறிவிட்டார்.நிலப்பிரபுக்கள் மற்றும் வெற்றி மக்களின் விடுதலைக்கான இங்கும் அங்குமாய்ப் பிரிந்து போ இடையே உட்பகை போர்கள் தீர்மானிக்கப்படாமலே, அது இறுதியில் தனித்தனி பழங்குடியின கூட்டுக்கள் சிதைந்தது

 

உத்தியோகபூர்வமாக கசக்ஸ்தான் குடியரசு, என்பது மத்திய ஆசியாவிலுள்ள ஒரு கண்டம் கடந்த தொடர்ச்சியான நாடாகும். இதன் ஒரு சிறுபகுதி கிழக்கு ஐரோப்பாவில் யூரல் ஆற்றுக்கு மேற்கே அமைந்துள்ளது. கசக்ஸ்தான் உலகின் மிகப்பெரிய நிலம்சூழ் நாடாகவும் உலகின் ஒன்பதாவது பெரிய நாடாகவும் உள்ளது. 27,27,300 square kilometers (10 சதுர மைல்) பரப்பளவு கொண்ட இதன் பகுதி மேற்கு ஐரோப்பாவிலும் பெரியதாகும்.
இதன் எல்லைகளாக (வடக்கிலிருந்து வலஞ்சுழியாக) ரசியா, சீனா, கிர்கிஸ்தான், உசுபெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் கஸ்பியன் கடலின் பெரும்பகுதியும் காணப்படுகின்றன. கசக்ஸ்தானின் நிலவமைப்பு வெட்டவெளிகள், புல்வெளிகள், தைக்கா காடுகள், மலைப் பள்ளத்தாக்குகள், மலைகள், கழிமுகங்கள், பனிச்சிகரங்கள் மற்றும் பாலைவனங்களைக் கொண்டுள்ளது.இதன் மக்கள்தொகை (2013 கணிப்பீடு) 17 மில்லியனாகும். மக்கள்தொகை அடிப்படையில் கசக்ஸ்தான் 62ம் இடத்திலுள்ளது. எனினும் இதன் மக்கள்தொகை அடர்த்தி சதுரக்கிலோமீற்றருக்கு 6 பேருக்கும் குறைவாகும். (சதுர மைலுக்கு 15 பேர்). 1997ல் இதன் தலைநகர் அல்மாடியிலிருந்து அஸ்தானாவுக்கு மாற்றப்பட்டது.
கசக்ஸ்தானின் பகுதிகளில் வரலாற்றுக்காலம் முதல் நாடோடிக் குழுக்கள் குடியேறியுள்ளனர். 13ம் நூற்றாண்டில் செங்கிஸ் கான் நாட்டைக் கைப்பற்றிய பின் இது மாற்றமுற்றது. எனினும் அவனது குடும்பத்தினரின் அதிகாரப் போட்டி காரணமாக கசக்ஸ்தானின் ஆட்சி நாடோடிக் குழுக்களிடம் கைமாறியது. 16ம் நூற்றாண்டில் கசாக்குகள் ஒரு தனித்துவமான குழுவாக எழுச்சி பெற்றதுடன் மூன்று கோத்திரங்களாகவும் பிளவுற்றனர்.
Kazakhstan history - Kazakhstan independence monument
18ம் நூற்றாண்டளவில் ரசியர்கள் கசாக்கு ஸ்டெப்பீ புல்வெளிகள் நோக்கி முன்னேறியதுடன் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கசக்ஸ்தானின் சகல பகுதிகளும் ரசியப் பேரரசின் ஒரு பகுதியாகியது. 1917ன் ரசியப் புரட்சியின் பின்பும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டுப் போரைத் தொடர்ந்தும், கசக்ஸ்தானின் பகுதிகள் மீளமைக்கப்பட்டு 1936ல், கசாக்கு சோவியத் சமவுடமைக் குடியரசு எனும் பெயரில் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியானது.
1991ல் சோவியத் ஒன்றியத்தின் சிதறலையடுத்து இறுதியாக விடுதலையை அறிவித்த நாடு கசக்ஸ்தானாகும். தற்போதைய சனாதிபதியான நர்சுல்தான் நசர்பாயேவ் அவர்களே 1990இலிருந்து நாட்டின் தலைவராக உள்ளார். நாட்டின் அரசியலில் நசர்பாயேவ் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளார். விடுதலையடைந்ததிலிருந்து கசக்ஸ்தான் ஒரு சமநிலை வாய்ந்த வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்து வருவதுடன் தனது பொருளாதாரத்தை விருத்தி செய்வதிலும், குறிப்பாக தனது ஐதரோகாபன் கைத்தொழிலை விருத்தி செய்வதிலும் ஈடுபட்டுள்ளது.
கசாக்ஸ்தான் கலாசார மற்றும் இனப்பல்வகைமையுடைய நாடாகும். ஜோசப் ஸ்டாலினின் ஆட்சியின் போது பல்வேறு இனக்குழுக்களின் நாடுகடத்தலும் இதற்குக் காரணமாகும். கசக்ஸ்தானின் சனத்தொகை 16.6 மில்லியனாக இருப்பதோடு 131 இனக் குழுக்களும் காணப்படுகின்றது.
இவற்றுள் கசாக்குகள், ரசியர், உக்ரேனியர், ஜெர்மானியர், உஸ்பெக்கியர், தாத்தார்கள் மற்றும் உய்குர்கள் என்போர் குறிப்பிடத்தக்கோர். சனத்தொகையில் 63%மானோர் கசாக்குகளாவர். கசாக்ஸ்தான் சமயச் சுதந்திரத்தை அனுமதித்துள்ளது. கசாக்ஸ்தான் ஓரளவு மதச் சகிப்புத்தன்மையுள்ள நாடாகும். ஆயினும் பிற்காலத்தில், மதச் சுதந்திர மீறல்களுக்காக சர்வதேச கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
Kazakh Autonomous SSR - the part of USSR picture
ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரந்துக்கான ஆணைக்குழு 2013ல் வெளியிட்ட அறிக்கையில், “இரண்டு வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட இறுக்கமான சட்டங்களின் பிரயோகம் காரணமாக கசாக்ஸ்தானினின் சர்வதேச மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதோடு பல கசாக்கு மக்களின் சமயச் சுதந்திரம் மீறப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளது. நாட்டின் தேசிய மொழியாக கசாக்கு மொழி இருப்பதோடு, ரசிய மொழி உத்தியோகபூர்வ நிலையிலுள்ளது. சகல மட்டங்களிலுமுள்ள ஆவணங்களிலும் இரு மொழிகளும் இடம்பெற்றுள்ளன.
Kazakhstan history - Kazakh people in Russian Empire
பெயர்க் காரணம்
“கசாக்கு” எனும் சொல் சீனா, ரசியா, துருக்கி, உசுபெகிசுத்தான் மற்றும் அருகிலுள்ள நாடுகளில் வாழும் கசாக்குகளின் வழித்தோன்றல்களை அழைக்கப் பயன்படுத்துப்படுவதோடு, “கசாக்குசுத்தானி” எனும் சொல் கசாக்குசுத்தானில் வாழும் அனைவரையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.”கசாக்கு” எனும் இனப் பெயர் “சுதந்திரம்; விடுதலை உணர்வு” எனப் பொருள்படும் பண்டைய துருக்கிய மொழிச் சொல்லிலிருந்து உருவானது. இக் கருத்து கசாக்குகளின் நாடோடி வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது. பாரசீகப் பின்னொட்டான “இசுத்தான்” என்பது “இடம்” அல்லது “நிலம்” எனும் பொருளைத் தரும். ஆகவே  கசாக்குசுத்தான் என்பது “கசாக்குகளின் நிலம்” எனும் பொருளைத் தரும்.
19ம் நூற்றாண்டில், ரசியப் பேரரசு மத்திய ஆசியா நோக்கி விரிவடைந்தது. “பெரு விளையாட்டு” காலப்பகுதி பொதுவாக 1813லிருந்து 1907ன் ஆங்கில-ரசிய உடன்பாடு வரையான காலப்பகுதியாகக் கருதப்படுகிறது. தற்போதைய கசாக்குசுத்தானியக் குடியரசின் பகுதிகளை அப்போதைய சார் மன்னர்கள் சிறப்பாக ஆட்சி புரிந்தனர்.
பிரித்தானியப் பேரரசுடனான “பெரும் விளையாட்டு” ஆதிக்கப் போட்டியில், மத்திய ஆசியாவில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில், இங்கு ரசியப் பேரரசு ஒரு நிர்வாகப் பொறிமுறையை அறிமுகப்படுத்தியதோடு காவலரண்களையும் நிர்மாணித்தது. முதலாவது ரசியக் காவலரணான ஓர்சுக்கு 1735ல் கட்டப்பட்டது. மேலும் அனைத்துப் பாடசாலைகள் மற்றும் அரசாங்க அமைப்புக்களிலும் ரசிய மொழி கட்டாயமாக்கப்பட்டது.
ரசியப் பேரரசின் வீழ்ச்சிக்குப்பின் ஏற்பட்ட கொந்தளிப்பான ஒரு குறுகிய காலப்பகுதியில் கசாக்குசுத்தான் சுயாட்சி பெற்றிருந்தது. இதன் பின், கசாக்குசுத்தான் சோவியத் ஆட்சிக்குள் உள்வாங்கப்பட்டது. 1920ல், இன்றைய கசாக்குசுத்தான் பகுதி, சோவித் ஒன்றியத்துக்குட்பட்ட ஒரு சுயாட்சிக் குடியரசாகியது.
1930களில், அடக்குமுறை மற்றும் கசாக்கு அடையாளம் மற்றும் பண்பாட்டை அழித்தல் போன்றவற்றை நோக்காகக் கொண்டு, பல புகழ்பெற்ற கசாக்கு எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், கவிஞர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வரலாற்றியலாளர்கள் போன்றோர் ஸ்டாலினின் ஆணையின் கீழ் கொல்லப்பட்டனர்.
Kazakhstan history - warriors of the Middle-Ages
சோவியத் ஆட்சி நிறுவப்பட்ட பின், கசாக்குசுத்தானை சோவியத் முறைமையுடன் ஒன்றிணைக்கும் வகையில் சமவுடைமை அரசொன்றும் செயற்படத் தொடங்கியது. 1936ல் கசாக்குசுத்தான் ஒரு சோவியத் குடியரசாக உருவானது. 1930கள் மற்றும் 1940களில் சோவியத் ஒன்றியத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து நாடுகடத்தப்பட்டோரின் உள்வருகையைச் சந்தித்தது.
கசாக்குசுத்தானின் இன மரபுரிமைகள் அல்லது நம்பிக்கைகள் காரணமாக நாடுகடத்தப்பட்டோரில் பெரும்பாலானோர் கசாக்குசுத்தான் அல்லது சைபீரியாவுக்கே நாடுகடத்தப்பட்டனர். உதாரணமாக, சூன் 1941ல் செருமானிய ஆக்கிரமிப்பினைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 400,000 வொல்கா செருமானியர் உக்ரேனிலிருந்து கசாக்குசுத்தானுக்கு மாற்றப்பட்டனர்.
டிசம்பர் 16, 1991ல் இது சுதந்திரமடைந்தது. இதுவே இறுதியாகச் சுதந்திரம் பெற்ற சோவியத் குடியரசாகும். பொதுவுடமைக் காலத் தலைவரான நர்சுல்தான் நசர்பாயேவ் நாட்டின் முதல் சனாதிபதியானதோடு, அடுத்த இரண்டு தசாப்த காலத்துக்கு அவரே பதவி வகித்தார். நாட்டின் அரசியல் மீது நசர்பாயேவ் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார்.
சுயாட்சி வேண்டிய சோவியத் குடியரசுகளின் கருத்துக்களை உள்வாங்கியமையால், ஒக்டோபர் 1990ல் கசாக்குசுத்தான், சோவியத் சமவுடமைக் குடியரசுகளின் ஒன்றியத்தினுள்ளேயே தன்னை ஒரு இறைமையுள்ள குடியரசாகப் பிரகடனப்படுத்திக் கொண்டது. ஆகத்து 1991ல் மாசுகோவில் நடத்தப்பட்ட தோல்வியடைந்த கிளர்ச்சி நடவடிக்கை மற்றும் அதனைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு என்பவற்றைத் தொடர்ந்து, டிசெம்பர் 16, 1991ல் கசாக்குசுத்தான் தனது சுதந்திரத்தை அறிவித்தது. சோவியத் குடியரசுகளிலேயே இறுதியாக சுதந்திரத்தை அறிவித்தது கசாகுசுத்தானாகும்.
சுதந்திரத்துக்குப் பின்னான ஆண்டுகளில் சோவியத் சார்புப் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலை என்பவற்றில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1989ல் கசாக்குசுத்தான் பொதுவுடமைக் கட்சியின் தலைவராகவும், பின்னர் 1991ல் கசாக்குசுத்தானின் சனாதிபதியாகவும் தெரிவுசெய்யப்பட்ட நர்சுல்தான் நசர்பாயேவின் ஆட்சியின் கீழ் கசாக்குசுத்தான் சந்தைப் பொருளாதாரத்தை விருத்தி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
1998ல் கசாக்குசுத்தானின் தலைநகர், நாட்டின் மிகப்பெரிய நகரான அல்மாடியிலிருந்து, அசுதானாவுக்கு மாற்றப்பட்டது.
தனியாள் கூட்டமைப்புச் செயற்திட்டம் எனப்பட்ட ஒப்பந்தம் சனவரி 31, 2006ல், NATO, உக்ரேன், ஜோர்ஜியா, அசர்பைசான் மற்றும் ஆர்மீனியா ஆகியவற்றுக்கிடையில் கையெழுத்திடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top