ஒருமுறை அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் ஒரு பெரிய கம்ப்யூட்டர்கண்காட்சி நடைபெற்றது. அதில் அனைத்து விதமான கம்ப்யூட்டர்கள், அதன்சாதனங்கள், மென்பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒர் இடத்தில், மூன்று குரங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்த ஒரு கம்ப்யூட்டர் நிபுணர், குரங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காரணம்புரியாமல், “இந்தக் குரங்கு எத்தனை ரூபாய்?” என்று முதல் குரங்கைக் காட்டிக் கேட்டார். அதற்கு விற்பனையாளர், “25000 டாலர்கள்” என்றார். “என்னது?! ஒரு குரங்கு25000 டாலர்களா? அப்படி இது என்ன செய்யும்?” என்றார் பார்க்க வந்தவர். “இது எந்தவிதமான கம்ப்யூட்டரையும் இயக்கும். இதற்குப் பல கம்ப்யூட்டர் மொழிகள் தெரியும். எந்த கம்பெனியின் ரகசியங்களை வேண்டுமானாலும் இது கண்டுபிடித்துவிடும். இது ‘கம்ப்யூட்டர் நிபுணர்’ குரங்கு. ... Read More »
Monthly Archives: September 2016
படித்தது / பிடித்தது ….
September 24, 2016
நண்பனுடன் அவனது வீட்டிற்குச்சென்றிருந்தேன்.. வாசலில் அவனது பாட்டி கயிற்றுக்கட்டிலில் கிடந்தார்.. நண்பன் உள்ளே போய்விட்டான்.. நான் : என்ன பாட்டி நல்லா இருக்கிங்களா..? பாட்டி : நல்லாருக்கேன் ராசா.. நீ ராசா..? நான் : நல்லாருக்கேன் பாட்டி.. இடையே எனது Android தொலைபேசி அழைத்தது.. பேசி முடித்தேன்.. பாட்டி : என்னாய்யா அது டிவி பொட்டி கணக்கா..? நான் : இதுவா பாட்டி.. இது புதுசா வந்துருக்குற ஃபோனு.. சட்டென்று ஞாபகம் வந்தவனாய் அதிலிருந்த Talking Tom-ஐ எடுத்துக்காட்டினேன்.. பாட்டி இதுகிட்ட பேசினா அத அப்புடியே ... Read More »
விடா முயற்சி..!
September 24, 2016
“எப்போதும் தோற்காதவர்கள் யாரெனில், எப்போதும் முயற்சி செய்யாதவர்களே” – இந்தக் கருத்தைப் பற்றி பார்ப்போம். ஒவ்வொரு வெற்றியாளனும் தோற்க துணிந்தால்தான் வெற்றி பெறுகிறான். பின்வரும் சம்பவங்களைக் கவனியுங்கள்.இரண்டாம் உலகிப்போரின்போது டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷனில் பொறியாளர் வேலைக்கு நடந்த இன்டர்வியூவில் சொயிசிரோ தேறவில்லை. ஆனாலும் அவர்நம்பிக்கை இழக்கவில்லை. ஹோண்டா நிறுவனத்தை ஆரம்பித்தார்.கவர்ச்சியாக இல்லை என்று டிவென்டியெத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தால் அவர் நிராகரிக்கப்படார். பல ஆண்டுகள் கழித்து மர்லின் மன்றோ எல்லோரும் நேசிக்கும் ஹாலிவுட் நடிகையாக விளங்கப்போகிறார் என்று ஃபாக்ஸுக்குத் தெரியவில்லை. அவருடைய இசை ஆசிரியர் ‘இசையமைப்பாளராக நீ ஜெயிக்க முடியாது’ என்று கூறினார். பித்தோவனின் இசை ... Read More »
வாழ்க்கை ஒரு வாய்ப்பு
September 24, 2016
அ. வாழ்க்கை ஒரு வாய்ப்பு – தவறவிட்டுவிடாதீர்கள். ஆ. வாழ்க்கை ஒரு சாகசம் – செயல்படுங்கள். இ. வாழ்க்கை ஒரு சோகம் – வெளியே வாருங்கள் ஈ. வாழ்க்கை ஒரு போராட்டம் – உன்னதமாக்குங்கள். உ. வாழ்க்கை ஒரு கவிதை – பாடுங்கள் ஊ. வாழ்க்கை ஒரு சத்தியம் – சந்தியுங்கள். எ. வாழ்க்கை ஒரு விளையாட்டு – விளையாடுங்கள். ஏ. வாழ்க்கை ஒரு கடமை – செய்யுங்கள் ஐ. வாழ்க்கை ஒரு சவால் – மோதுங்கள் ஒ. வாழ்க்கை ஒரு கனவு – நனவாக்குங்கள். ஓ. வாழ்க்கை ஒரு அழகு – உணருங்கள். ஒள. வாழ்க்கை ஒரு ஆனந்தம் – அனுபவியுங்கள். Read More »
சொந்தக்காலில் நில்லு
September 24, 2016
* மன அமைதியைப் பாதுகாக்க விரும்பினால், உங்கள் சொந்தவேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பிறர் விஷயங்களில் தலையிடாதீர்கள். * யாரையும் எதற்காகவும் குறை கூறாதீர்கள். அதுவும் பிறரைத் திட்டுவதற்குச் சமமானது தான். * உயர்ந்தவன் என்ற அகந்தையோ, தாழ்ந்தவன் என்ற தாழ்வு மனப்பான்மையோ கொள்ள வேண்டாம். * எதை சரிப்படுத்த முடியாதோ, அதை பொறுத்துக் கொள்ளுங்கள். அதனால் மனபலம் அதிகரிக்கும். * உங்கள் தேவைக்கு அடுத்தவரை அண்டி இராதீர்கள். இயன்றவரை சொந்தக்காலில் நிற்கப் பழகுங்கள். * பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். தப்பி ஓட நினைப்பது கோழைத்தனம். முடிந்த மட்டும் ... Read More »
இன்று: செப்டம்பர் 24!!!
September 24, 2016
நிகழ்வுகள் 622 – முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்தார் (ஹிஜ்ரா). 1664 – நெதர்லாந்து நியூ ஆம்ஸ்டர்டாமை இங்கிலாந்துக்குக் கொடுத்தது. 1674 – பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது. 1789 – அமெரிக்க உச்சநீதி மன்றம் நிறுவப்பட்டது. 1799 – கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம்ஒப்படைக்கப்பட்டனர். 1840 – இலங்கை வங்கி அமைக்கப்பட்டது. 1841 – புருணை சுல்தான் சரவாக் மாநிலத்தை பிரித்தானியாவுக்குக் கொடுத்தான். 1869 – கறுப்பு வெள்ளி: ஜேய் கூல்ட், ஜேம்ஸ் பிஸ்க் என்ற இரு செல்வந்தர்களின் சூழ்ச்சியை முறியடிக்க [ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] பெருமளவு தங்கத்தை விற்பனைக்கு விட்டதில், தங்க விலை சரிந்தது. 1898 – யாழ்ப்பாணம், இணுவிலில் பெண்களுக்கான மக்லியொட் மருத்துவமனையை அமெரிக்க மிசன் அமைத்தது. 1906 – வயோமிங்கில் உள்ள பேய்க் கோபுரம் அமெரிக்காவின் முதலாவது தேசிய நினைவுச் ... Read More »
அந்தக் கதவுகள் மூடியே இருக்கட்டும்!
September 23, 2016
ஒரு முதியவரும், அவரது மருமகளும் தினமும் எதாவது வாக்குவாதம் செய்துகொண்டிருப்பர். இதனால், அவரது மகனுக்கு நிம்மதி இல்லாமல் போய் விட்டது.ஒருநாள் சண்டையில், மகன் தந்தையைத் திட்டி விட்டான். பெரியவர் வருத்தத்துடன் புறப்பட்டார். வழியில் மகான் ஒருவரைக் கண்டார். “”சுவாமி! முதுமையில் பிள்ளைகள் நமக்கு உதவப் போவதில்லை என்பது தெரிகிறது.இருந்தாலும், இளமையில் பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லை என்று ஏங்குவதும்,அவர்கள் மீது பாசம் வைத்து வளர்ப்பதும் தேவைதானா?” என்று கேட்டார். மகான் சிரித்தபடி, “”சரியப்பா! நீ உன் பெற்றோர் இருந்த காலத்தில் அவர்களைக் கவனித்தாயா?” “”சுவாமி… ... Read More »
இன்று: செப்டம்பர் 23!!!
September 23, 2016
நிகழ்வுகள் 1529 – ஒட்டோமான் பேரரசன் முதலாம் சுலைமான் வியென்னா மீது படையெடுத்தான். 1641 – ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான பொருட்களுடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற கப்பல் மூழ்கியது. 1799 – இலங்கையில் அரச ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அமுலுக்கு வந்தது. 1821 – திரிப்பொலீத்சாவை கிரேக்கர்கள் தாக்கி 30,000 துருக்கியரைக் கொன்றனர். 1846 – நெப்டியூன் கோள் பிரெஞ்சு வானியலாளர் உர்பெயின் ஜோசப் மற்றும் பிரித்தானிய வானியலாளர் ஜோன் அடம்ஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1848 – அமெரிக்காவில் ஜாண் கார்ட்டிஸ் விற்பனைக்காக முதன்முதலில் சேவிங் கிரீம் தயாரித்து வெளியிட்டார். 1868 – புவெர்ட்டோ ரிக்கோவில் ஸ்பானிய ஆட்சியாளருக்கெதிராக கிளர்ச்சி ஆரம்பமானது. 1884 – ஹேர்மன் ஹொலரித் கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார். 1889 – நின்டெண்டோ கம்பனி ஆரம்பிக்கப்பட்டது. ... Read More »
வாழும் வரை போராடு!
September 22, 2016
ஒரு வாலிபனுக்கு ஏராளமான பணம் இருந்தது. ஆனாலும், அவன் ஏதோபிரச்னைகளில் சிக்கி தவித்துக் கொண்டே இருந்தான். வாழ்க்கையே வெறுத்துப்போனது. ஒருமுறை, அவனது தந்தையின் நண்பர் அவனது வீட்டுக்கு வந்தார்.வாடிப்போன அவன் முகத்தைக் கண்டு “என்ன பிரச்னை?’ என்றார். “”ஐயா! நான் நிறைய சம்பாதிக்கிறேன். பொருளையெல்லாம் மனைவி,பிள்ளைகளுக்காக செலவழிக்கிறேன். ஆனால், அவர்கள் இன்னும்… இன்னும்… என்கிறார்களே தவிர, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்தபாடில்லை. என் நண்பர்களும் அப்படியே! நான் செலவழித்தால் உடன் வருகிறார்கள். இல்லாவிட்டால் ஓடி விடுகிறார்கள். எனக்கு வேலை செய்து செய்து அலுத்து விட்டது. நிம்மதியைத் தேடி அலைகிறேன்,” என்றான். பெரியவர் ... Read More »
அறிஞர் அண்ணாத்துரை
September 22, 2016
அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் ஓர் தமிழ் தேசியவாதி , தமிழ் அறிஞர்,ஆங்கிலத்திலும் வல்லவர் !!! ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா! அறிஞர் அண்ணா அமெரிக்க ... Read More »