ஒரு வாலிபனுக்கு ஏராளமான பணம் இருந்தது. ஆனாலும், அவன் ஏதோபிரச்னைகளில் சிக்கி தவித்துக் கொண்டே இருந்தான். வாழ்க்கையே வெறுத்துப்போனது. ஒருமுறை, அவனது தந்தையின் நண்பர் அவனது வீட்டுக்கு வந்தார்.வாடிப்போன அவன் முகத்தைக் கண்டு “என்ன பிரச்னை?’ என்றார். “”ஐயா! நான் நிறைய சம்பாதிக்கிறேன். பொருளையெல்லாம் மனைவி,பிள்ளைகளுக்காக செலவழிக்கிறேன். ஆனால், அவர்கள் இன்னும்… இன்னும்… என்கிறார்களே தவிர, இருப்பதைக் கொண்டு திருப்தி அடைந்தபாடில்லை. என் நண்பர்களும் அப்படியே! நான் செலவழித்தால் உடன் வருகிறார்கள். இல்லாவிட்டால் ஓடி விடுகிறார்கள். எனக்கு வேலை செய்து செய்து அலுத்து விட்டது. நிம்மதியைத் தேடி அலைகிறேன்,” என்றான். பெரியவர் ... Read More »
Monthly Archives: September 2016
கோபம்
September 28, 2016
யாராவது நம்மைப் பார்த்து ‘சோம்பேறி’, ‘நீ எதற்கும் லாயக்கி இல்லாதவன்’, ‘உன்னால் ஒரு புரியோஞனமும் கிடையாது’ என்பது போன்ற வார்த்தைகளைக் கூறினால் நம்முள் பயங்கரமாக கோபம் வருகிறது. நாம் மிகவும் பாதிக்கப்படுகிறோம். நம்மைப் பற்றி நாம் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தால் மற்றவர் நம்மைப் பற்றி சொன்ன வார்த்தையைய் ஒரு போதும் யோசிக்கவும் மாட்டோம், நம்மைப்பற்றி கூறியது என்று எடுத்துக் கொள்ளவும் மாட்டோம். இவ்வாறாக இன்னொருவரை திட்டும் போது திட்டப்பட்டவர் பாதிக்கப்படுகிறார் என்றால்… திட்டப்பட்டவர் அவர் கூறிய ஏதாவது ஒரு குணம் உடையவராகத்தான் ... Read More »
மனதையும் வெல்ல வேண்டும்!….ஒரு ஜென் கதை….
September 28, 2016
ஒரு சிறந்த வில்வித்தை அறிந்த குருவிடம் பயிற்சி பெற்ற ஒருவன் தான் சிறப்பாகக் கற்றுக் கொண்டதாகக் கர்வம் கொண்டான்.குரு அவனை அழைத்துக் கொண்டு மலைப் பகுதிக்கு சென்றார், இரண்டு மலை உச்சிக்கு இடையே ஒரு பலகை மட்டும் வைக்கப் பட்டிருந்தது. கீழே அதலபாதாளம். குரு அநதப் பலகையில் விறுவிறுவென நடந்து நடுவில் நின்று கொண்டு தன் வில்லை எடுத்து வானத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு பறவையைக் குறி வைத்து அடித்து வீழ்த்தினார். பின் சீடனை அவ்வாறே செய்யச்சொன்னார்.முதலில் ஆர்வமுடன் சென்ற அவன் நடுப்பகுதிக்கு சென்றவுடன் பயத்துக்கு உள்ளானான். ... Read More »
யானை எடை
September 27, 2016
அன்றைக்கு ஒரு புது சாஃப்ட்வேர் புராஜெக்ட் ஆரம்பமாகிறது. எல்லோரும் பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். 10 மணிக்கு கஸ்டமர் தரப்பிலிருந்து ஏழு பேர் வந்தார்கள். கூட்டம் ஆரம்பமானது. வந்தவர்களில் சீனியராகத் தோன்றிய ஒருவர் படபடவென்று பேசத் தொடங்கினார். ‘இப்போ எங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்குன்னு ஏற்கனவே விளக்கமா சொல்லிட்டோம். அதையெல்லாம் உங்க சாஃப்ட்வேரால் தீர்க்க முடியுமா?’ அந்த சாஃப்ட்வேர் கம்பெனியின் முக்கிய பிரமுகர் புன்னகையோடு பதில் சென்னார். ‘முடியலாம்’. ‘என்னது? முடியலாமா? உங்களால் முடியும்னு நம்பித்தானே லட்சக்கணக்கில் காசைக் கொட்டியிருக்கோம். ... Read More »
சிறப்பு
September 26, 2016
1. பெற்றோரையும், பெரியோரையும் மதித்து நடப்பது சிறப்பு. 2. ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் இருப்பது சிறப்பு. 3. அடுத்தவர்களின் மகிழ்ச்சியில் இன்பம் காண்பது சிறப்பு. 4. யார் மனதையும் புண்படுத்தி பேசாமல் இருப்பது சிறப்பு. 5. எது நடந்தாலும் மனம் கலங்காமல் தன்னம்பிக்கையுடன் இருப்பது சிறப்பு. 6. உன்னைப்போல் பிறரையும் நேசித்து வாழ்வது சிறப்பு. 7. ஆடம்பர செலவு செய்யாமல் சிக்கனமாக சேமித்து வைப்பது சிறப்பு. 8. அடுத்தவர்களைப் பார்த்து பொறாமைப்படாமல் உன்னிடம் உள்ளதை வைத்து மனதிருப்தியுடன் வாழ்வது சிறப்பு. 9. அதிகமாக ஆசைப்படாமலும், கோபப்படாமலும், கவலைப்படாமலும் வாழ்வது சிறப்பு. 10. பிறர் நம்மீது வைத்திருக்கும் ... Read More »
வாழ்க்கையை மேம்படுத்த வெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள் !!!
September 25, 2016
01. அதிகம் செய்வது சிறந்தது என்ற கருத்தை மாற்றிக் கொண்டு, குறைவாக செய்வதில் நிறைய பலன் உண்டு என்று நினைத்து நடவுங்கள், வாழ்வில் மகிழ்ச்சி ஆரம்பித்துவிடும். 02. தினமும் மூன்று என்று திட்டமிட்டு காரியங்களை செய்து வந்தால் அதிசயிக்கக் கூடிய வெற்றியை எட்டித் தொட்டிருக்கக் காண்பீர்கள். முடித்தாக வேண்டிய பணிகளில் முதல் மூன்றை தேர்வு செய்து முடியுங்கள் என்பது இதன் கருத்து. 03. தேவையில்லாத விடயங்களை அங்குலம் அங்குலமாக யோசித்து, யோசித்து அலட்டிக் கொள்வதால் காலமும் நேரமும் ... Read More »
காதலில் தோற்பது எப்படி?
September 25, 2016
காதலில் தோற்பது என்பது சாதாரண விசயமில்லை. கழட்டி விடுவது என்பதும் சாதாரண விசயமில்லை. அதுக்காக எம்புட்டு பாடுபடனும், எவ்வளவு தியாகம் பண்ணனும். இதைவிட முக்கியம் இதை உங்கள் ஆளும் உங்களைக் கழட்டிவிட உபயோகப்படுத்தலாம், கவனம்! முதல்ல போனில் இந்த ம்ம்ம் போடுவதை விடுங்கள். பத்து நிமிடம் எதுவும் பேசலேன்னா “ரொம்ப போர் அடிக்குதா?” கேள்வி வரும், உடனே ஆமான்னு பதில் சொல்லனும். காலைல Good Morning, ராத்திரி Good Night எஸ்எம்எஸ் அனுப்புவதை நிறுத்துங்கள். நீங்க என்ன டிவி நியூஸ்லையா வேலை பார்க்குறீங்க??? (சில பக்கிகள் Automatic send later செட் பண்ணி அனுப்புறாங்கப்பா, அவ்வ்வ்வ்..) “எதுக்கு இவ்வளோ ... Read More »
இன்று: செப்டம்பர் 25!!!
September 25, 2016
கிரிகோரியன் ஆண்டின் 268ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 269ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 97 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1513 – ஸ்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர். 1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப்பத்திரிகை (Publick Occurrences Both Foreign and Domestick) முதலும் கடைசித் தடவையாகவும் வெளிவந்தது. இது அரசினால் தடை செய்யப்பட்டது. 1789 – அமெரிக்கக் காங்கிரஸ் அரசியலமைப்பிற்கு மனித ... Read More »
மூன்று விஷயங்கள்…..
September 24, 2016
1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை…… நேரம் இறப்பு வாடிக்கையளர்கள் 2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளை விரோதியாக்கும்……. நகை மனைவி சொத்து 3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது….. புத்தி கல்வி நற்பண்புகள் 4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்…… உண்மை கடமை இறப்பு 5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை…. வில்லிலிருந்து அம்பு வாயிலிருந்து சொல் உடலிலிருந்து உயிர் 6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்……. தாய் தந்தை இளமை 7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது…… சொத்து ... Read More »
சிலிக்கான் வேலியில் கண்காட்சி
September 24, 2016
ஒருமுறை அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் ஒரு பெரிய கம்ப்யூட்டர் கண்காட்சி நடைபெற்றது. அதில் அனைத்து விதமான கம்ப்யூட்டர்கள், அதன் சாதனங்கள், மென்பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒர் இடத்தில், மூன்று குரங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்த ஒரு கம்ப்யூட்டர் நிபுணர், குரங்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காரணம் புரியாமல், “இந்தக் குரங்கு எத்தனை ரூபாய்?” என்று முதல் குரங்கைக் காட்டிக் கேட்டார். அதற்கு விற்பனையாளர், “25000 டாலர்கள்” என்றார். “என்னது?! ஒரு குரங்கு 25000 டாலர்களா? அப்படி இது ... Read More »