Home » பொது (page 2)

Category Archives: பொது

உலகளந்தான்!!!

உலகளந்தான்!!!

ஆச்சார்ய வினோபா பாவே (பிறப்பு: 1895 செப். 11, – 1982 நவ. 15 ) தம்மைக் காட்டிலும் காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக்கொண்டவர் என்று மகாத்மா காந்தி இவரைப் பற்றிக் கூறியுள்ளார். தனது வாழ்நாளில் 13 வருடங்களில் 34,000 கி.மீ.களுக்கு மேல் கால்நடையாக, கிராமம் கிராமமாக இந்திய நிலப்பரப்பு முழுவதும் நடந்தே கடந்தவர். புரட்சிகரமான பூதான இயக்கத்தைத் தொடங்கி வழிநடத்தியவர். சர்வோதய இயக்கத்தின் ஆணி வேர்களில் ஒருவர். இவர் தான் ஆச்சார்யா வினோபா பாவே. பூதான இயக்கத்தின் ... Read More »

சுயராஜ்ய கனவு கண்டவர்!!!

சுயராஜ்ய கனவு கண்டவர்!!!

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் (பிறப்பு: 1870, நவ. 5- மறைவு: 1925, ஜூன் 16) ‘தேசபந்து’ என்று (தேசத்தின் உறவினர்) எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட  சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ்,  1870-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி வங்காளத்தில் டாக்கா மாவட்டம், விக்ராம்பூரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை பூபன் மோகன்தாஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். அவர் மிகுந்த நாட்டுப்பற்றும் உடையவர். சித்தரஞ்சன் தாஸ் நாட்டுப்பற்று உடையவராக விளங்கியதற்கு அவரது தந்தையே ... Read More »

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 11

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 11

பரமபதம் ராமானுஜர் நமக்குக் காட்டிய வைனவநெறியானது உன்னதமானது. நமது சனாதான தர்மங்களின் அடிப்படையில் எழுப்பட்ட நெறியாகும். ஸ்ரீவைணவத்தில்ல் ஏழை -பணக்காரன், உயர்ந்த குடியில் பிறந்தவன்- தாழ்ந்தகுடியில் பிறந்தவன் என்ற பேதம் கிடையாது என்பதை உரக்கக் கூறியது. ஒருவிதத்தில் கிரிமிகண்டன் என்னும் மன்னன் நல்லது செய்தான் என்றுதான் கூறவேண்டும். அந்த மன்னனின் கொடியகரங்களிலிருந்து தப்பிக்கவே ராமானுஜர் சாளுக்கிய மட்டும் ஹொய்சாள மன்னர்களின் சமஸ்தானங்களுக்குச்சென்றார். இதன்மூலம் அங்குள்ள வைணவத் தலங்களில் நமது திராவிட வேதமான நாலாயிர திவ்ய பிரபந்தத்தை முழங்கச் ... Read More »

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 10

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 10

திருமலையும் ராமானுஜரும் ராமானுஜ வைபவம்என்றாலே அதில் விசிஷ்டாத்வைதத்தின் ஸ்தாபிதம் இருக்கும். பாகவதப் பெருமக்களிடம் அவருக்கு உள்ள பக்தி இருக்கும். ஸ்ரீவைணவத்திற்காக அவருடைய புண்ணியத்தல யாத்திரை இருக்கும். அவர் இயற்றிய பாஷ்யங்களும் வியாக்கியானங்களும் இருக்கும். பிறப்பு, குலம் எதுவும் பாராத வைணவ பக்தி இருக்கும். இந்த தேசத்தில் அவர் காலடி படாத வைணவத் தலங்களே இல்லை என்று கூறலாம். வைணவக் கோவில்களில் வடமொழி வேதத்துடன் திராவிட வேதமான நாலாயிர திவ்யப் பிரபந்தத் தமிழ்ப் பாசுரங்களும் மங்கள சாசனம் செய்யப்பட ... Read More »

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 9

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 9

9. வேற்று சாதியினரும் ராமானுஜரும் ராமானுஜர் செய்த சில செயற்கரிய செயல்களே அவரை உன்னத மகானாக மாற்றியது எனலாம். வைதீகர்கள் இடையில் சாதிப்பித்து தலைக்கேறியிருந்த காலத்தில் அவர் பேரருளாளன் முன்பு அனைவரும் சமம் என்ற செய்தியை உரக்கக்கூவினார். தனது இளம் பருவத்திலேயே திருக்கச்சி நம்பி. பெரியநம்பி போன்றோர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் எம்பெருமானின் புகழ் பாடும் காரணத்தால் அவர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு அவர்களை வணங்குதல், சேர்ந்து உண்ணுதல், இல்லத்தில் அனுமதித்தல் போன்ற செயலகளை ஊர் ... Read More »

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 8

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 8

8. மதமேறிய மன்னன்  நமது தேசத்தின் இருகண்களாகக் கருதப்படுபவை சைவமும், வைணவமும் ஆகும்.  இரண்டுமே அடிப்படை தத்துவத்தில் வேறுபட்டிருப்பதாலும், இரு சமயத்தினரிடமும் சகிப்புத்தன்மையும் பரஸ்பரம் விட்டுகொடுக்கும் தன்மையும் உள்ளன. ஆனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அத்தைகைய சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து காணப்பட்டது. என் சமயம்தான் உயர்ந்தது என்ற கொடியை இரு சமயத்தினரும் ஓங்கிப் பிடித்தனர். சைவம் தனது நெறியில் ஓங்கி இருக்கும் வேளையில் வைணவம் அடக்கிவாசிப்பதும், மாறாக வைணவம் ஓங்கியிருக்கும் வேளையில் சைவம் அடங்கியிருப்பதும் சகஜம். ஆட்சியாளர்கள் ... Read More »

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 7

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 7

7. வெற்றி எட்டு திக்கும் எட்ட … தண்ணீர் ததும்பி வழியும்குளத்தை பறவைகளும் விலங்குகளும் தேடி தேடி வருவதை போல ராமானுஜரின் ஞானப்பெருவேள்ளத்தில் மூழ்கிக் களிக்க அவரிடம் சீடர்களாக வந்து சேர்ந்தவர்கள் ஏராளம். அத்தனை சீடர்களையும் ,தனது அடியார்களையும் அழைத்துக் கொண்டு ஸ்ரீமன் நாராயணன் புகழ் பாடி அவனது வெற்றிக்கொடியை நாட்ட ராமானுஜர் தீர்மானித்து திக்விஜயம் புறப்பட்டார். காஞ்சிபுரத்தில் தொடங்கிய திக்விஜயம் திருக்குடந்தை, மதுரை, அழகர்கோவில், திருக்குறுங்குடி வழியாக நம்மாழ்வாரின் அவதாரத் தலமாகிய ஆழ்வார்த்திருநகரி சென்டைகிறது. ராமானுஜரும் ... Read More »

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 6

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 6

6. ஆளவந்தாரும் திருவரங்கமும் ஆளவந்தாரின் பாட்டனார் நாதமுனி என்னும் வைணவப் பெருந்தகை. யமுனைத்துறைவன் என்ற பூர்வ பெயருடன் விளங்கிய ஆளவந்தார் ஒருமுறை கோலாகலர் என்ற வடக்கத்தி புலவரின் திக்விஜயத்திலிருந்து மதுரை மாநகரைக் காப்பாற்றியதால் அரசன் அளித்த பாதி ராஜ்யத்தை அரசாண்டு வந்தார். நாதமுனிகள் தமது இறுதி காலத்தில் தன் பெயரன் எல்லாம்வல்ல இறைவனை நாடாமல் உலக இன்பங்களில் மூழ்கிஇருப்பது கண்டு மனம் வருந்தி மணக்கால்நம்பி என்ற சீடரை அனுப்பினார். மனக்கால்நம்பியும் ஆளவந்தாரிடம் அவருடைய தன்மைக்கேற்ப ஒரு பெருநிதி ... Read More »

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 5

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 5

5. மனைவி அமைவதெல்லாம் தஞ்சமாம்பாள் வைதீக குடும்பத்திலிருந்து வந்தவர். அவருடைய தந்தை சிறந்த வேதநெறியில் ஒழுகிய அந்தணர். அந்தக் காலத்தில் ஜாதியில் ஏற்ற தாழ்வு பெரிய அளவில் பார்க்கப் பட்டது. அந்தணர் அல்லாத வேற்றுஜாதி மனிதர்களுக்கு உணவு வழங்கினால் மீண்டும் அடுப்பு சமையல் பாத்திரங்களை கழுவிய பின்பே வீட்டு மனிதர்களுக்கு புதிதாக சமைக்க வேண்டும் என்ற நெறி கடைபிடிக்கப்பட்டது. தனது தந்தை இல்லத்தில் வளர்ந்த தஞ்சமாம்பாள் புகுந்த வீட்டிலும் அதே நெறியைப் பின்பற்றுகிறார். ஆனால் ஸ்ரீராமானுஜர் அவதார ... Read More »

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 4

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 4

4.அரசிளங்குமரி ஒருமுறை காஞ்சி மன்னனின் மகளுக்குத் தீராத மனோவியாதி ஏற்பட்டது. மற்ற மானுடப்பென்களைப் போலன்றி மனப்பிறழ்வில் அதீதமாக நடந்துகொள்ளத்தொடங்கினாள்.பார்க்கும் வைத்தியர்கள் அனைவரும் அரசிளங்குமரிக்கு பிரம்மராக்ஷஸ் பற்றிக் கொண்டிருக்கிறது எனவே பிரம்மராக்ஷசை விரட்டும் மாந்த்ரீகனைத்தான் அழைத்து வரவேண்டும் என்று கூறிவிட்டனர். யாதவபிரகாசருக்கு மாந்த்ரீக வைத்தியம் தெரியும் என்பதால் அரசன் அவரை அழைத்துவர ஆள் அனுப்பினான். யாதவபிரகாசர் அரண்மனையின் அந்தப்புரத்தில் அரசிளங்குமரியின் இல்லம் நோக்கி சென்றார். தனக்குத் தெரிந்த மந்திரங்களை பிரயோகித்தார். அவரை எள்ளி நகையாடிய பிரம்மராஷஸ் இடிச்சிரிப்புடன் கூறியது. ... Read More »

Scroll To Top