Home » பொது (page 3)

Category Archives: பொது

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 3

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 3

3.ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம் பெரும் மகான்களின் வாழ்க்கையை உற்று நோக்கும்போது அவர்கள் பெரும்பாலும் தமது கோட்பாடுகளை நிறுவ வாதத்திறமையை வளர்த்துக் கொள்வதோடு புத்திசாதுரியத்தால் தங்களது இன்னுயிரையும் காத்துக் கொள்ளும் நிர்பந்தத்திற்கு ஆள்ளாகின்றனர். அப்படி ஒரு நிர்பந்தம் இராமானுஜர் வாழ்வில் ஏற்பட்டது. அதுவும் தான் பாடம் கற்றுக் கொண்ட குருவிடமிருந்தே வந்தது. இராமானுஜரின் துவைதம் பற்றிய விளக்கங்கள் பிரபலம் அடைந்து வருவதைக் கண்டு யாதவப்பிரகாசர் மனக்கிலேசம் அடைகிறார். அதுவே நாட்பட நாட்பட வன்மமாக உருவெடுக்கிறது. மிகவும் மோசமான முடிவுக்கு ... Read More »

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 2

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 2

2.குருவை மிஞ்சிய சிஷ்யன் யாதவப்பிரகாசர் தனது சீடர்களுக்கு காலைநேரப் பாடங்களை போதித்த பின்  எண்ணெய்க் குளியல் எடுக்க எண்ணினார். அந்தக்கால குருகுலவாசத்தில் சீடர்களே குருவுக்குத் தேவையான சின்னச் சின்னத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.  குரு ஆணையிடுவார். சீடர்கள் மறுக்காமல் சிரம் மேற்கொண்டு செய்வர். எண்ணெய்க் குளியலுக்கு ஆச்சாரியாரின் பாதாதி கேசம் ராமானுஜர் எண்ணெய் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு மாணவரும் உடனிருந்தார். மாணவன்: தேவரீர்.  இன்று காலையில் தாங்கள் நடத்திய பாடத்தில் பொருள் விளங்கிக்கொள்ள சற்றுக் கடினமாக ... Read More »

சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 1

சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 1

ஸ்ரீ ராமானுஜர் (தோற்றம்: பொ.யு.பி. 1017, சித்திரை- திருவாதிரை) (முக்தி: பொ.யு.பி. 1137, மாசி மாதம் , சுக்கில தசமி திதி) 1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன் பரம்பொருளின் காலத்தை எவ்வாறு நம் சிற்றறிவினால் கணக்கிட முடியாதோ அவ்வாறே இந்து சமயத்தின் காலத்தையும் நம்மால் கணிக்க முடியாது. வேதம் அநாதியானது. கல்பங்களுக்கும், மன்வந்திரங்களுக்கும், யுகங்களுக்கும் அப்பாற்பட்டது. இந்தச் சாதாரண பட்டறிவினால் வேதங்களையும், வேதாங்கங்களையும், உபநிடதங்களையும் அறிந்து கொள்வது என்பது கிணற்றில் வசிக்கும் தவளை அந்த கிணற்றை சாகரம் ... Read More »

வெள்ளையனை மிரட்டிய வீர சகோதரர்கள்

வெள்ளையனை மிரட்டிய வீர சகோதரர்கள்

சாபேகர் சகோதரர்கள் தாமோதர் சாபேகர்                           லகிருஷ்ண சாபேகர்                    வாசுதேவ் சாபேகர் (பலிதானம்: 1898, ஏப். 18)             (பலிதானம்: 1899, மே 12)             (பலிதானம்: 1899, மே 8) “வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே” என்ற வசனம் ... Read More »

நாடகத்திலும் வீரம் ஊட்டியவர்

நாடகத்திலும் வீரம் ஊட்டியவர்

தியாகி எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ் (பிறப்பு: 1886  ஜூன் 16 – மறைவு:  1940 டிசம்பர் 31) சினிமாவும்  தொலைக்காட்சிகளும் வராத அந்தக் காலத்தில் மக்களுக்கு பொழுதுபோக்குச் சாதனமாக விளங்கியது நாடகங்கள். இந்த நாடகத்தைக் கொண்டு மக்கள் உள்ளங்களில் சுதந்திரக் கனலை வளர்த்தவர்கள் பலர். அவர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் நாடக நடிகர், தேசபக்தர் எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ். இவருடைய இளமைக்காலத்திலேயே இவருக்கு நாட்டுப் பற்றும் தேசிய உணர்வும் ஏற்பட்டு, இந்த நாட்டுக்காக ஏதாவது செய்தாக வேண்டுமென்று உணர்வு ... Read More »

அறிவியல் தமிழின் புதல்வர்

அறிவியல் தமிழின் புதல்வர்

பெ.நா.அப்புசுவாமி (பிறப்பு: 1891, டிச. 31-மறைவு: 1986, மே 16) தலைப்பாகையும்  பஞ்சகச்சமும் கருப்புக் கோட்டுமாக, சாரட் வண்டி ஏறிக் கோர்ட் கச்சேரி போய்த் துரைகள் முன்னால் ஆஜராகி வாதி- பிரதிவாதி சார்பில் வலுவான வாதங்களை வைத்து மயிலாப்பூர் வக்கீல்கள் கலக்கிக் கொண்டிருந்த 1920 களில்,  லா பாயின்ட் தேடாமல் அறிவியலைத் தேடிப் படித்து அதைத் தமிழில் தந்தவர், சட்டம் படித்த  பெ.நா.அப்புசுவாமி.1917ல் எழுதத் தொடங்கி 1986 வரை அவர் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் எண்ணிக்கை சில நூறுகளை ... Read More »

கட்டபொம்மன் புகழ் பரப்பிய ம.பொ.சி.

கட்டபொம்மன் புகழ் பரப்பிய ம.பொ.சி.

வீரபாண்டிய கட்டபொம்மன் (பிறப்பு: 1760, ஜன. 3 –  பலிதானம்:  1799, அக். 16) பாஞ்சாலங் குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் 1799 அக்டோபர் 16-ல் தூக்கிலிடப்பட்டார். இந்த மாவீரனை “கொள்ளைக்காரன்” என்றும் “கொலைகாரன்” என்றும் பொய்யாக வருணித்து நூல்களை எழுதி வெளியிட்டனர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி எழுத்தாளர்கள்.  அவர்களையே பின்பற்றினர் இந்திய சரித்திராசிரியர்கள் இப்படி, ஒன்றை நூற்றாண்டு காலம் சரித்திராசிரியர்களால் நிலைநாட்டப்பட்டு விட்ட பழியிலிருந்து கட்டபொம்மனின் புகழ் மிக்க வரலாற்றை மீட்டுக் கொடுத்தது தமிழரசுக் கழகம். ... Read More »

தவப்புதல்வனை ஈந்த பெருமகன்

தவப்புதல்வனை ஈந்த பெருமகன்

சடையனார் நாயனார்(திருநட்சத்திரம்: மார்கழி -திருவாதிரை) (ஜனவரி 5) திருநாவலூரில் ஆதி சைவ குலத்தில் உதித்தவர் சடையனார்.  இவரது இல்லறத் துணைவி இசைஞானியார்.  மழலை பாக்கியம் இல்லாத சடையனார்,  பரம்பரையாக செய்து வரும் சிவத்தொண்டு தடைபடாமல் இருக்க ஒரு புத்திரனை தந்தருளுமாறு ஈசனை வேண்டினார். அவரின் வேண்டுகோளை ஏற்ற ஈசன் கயிலையில் தம் அணுக்கத் தொண்டராக இருந்த ஆலால சுந்தரர், சடையனாருக்கு மகனாகப் பிறக்குமாறு அருள் புரிந்தார். அந்த மகனின் ஆற்றலால் கவரப்பட்ட அந்நாட்டு மன்னனின் அறிவுரைப்படி நரசிங்க முனையரையர், சுந்தரருக்கு ... Read More »

அண்ணாமலையில் ஐக்கியமான அருளாளர்

அண்ணாமலையில் ஐக்கியமான அருளாளர்

பகவான் ரமண மகரிஷி (திருநட்சத்திரம்: மார்கழி- திருவாதிரை) (பிறப்பு: 1879-, டிசம்பர் 30- மறைவு: 1950, ஏப். 14) தற்காலத்தில் திருச்சுழி என வழங்கி வரும் பாண்டிய நாட்டுத் திருத்தலம் அக்காலத்தில், ‘திருச்சுழியல்’ என்று அழைக்கப்பட்டது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தேவாரம் பெற்ற திருச்சுழியலை மாணிக்கவாசகர், குலச்சிறையார் போன்ற முன்னணிச் சிவனடியார்கள் வழிபட்டுள்ளனர். சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால் இவ்வூர் திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது. செந்நெல்குடி என்ற ஊரில் பிறந்த விஷ்ணு பக்தர் ... Read More »

உயிர்த் தியாகத்தால் உயர்ந்த குரு!

உயிர்த் தியாகத்தால் உயர்ந்த குரு!

குரு தேக் பகதூர் (பிறப்பு: 1621, ஏப். 1 – பலிதானம்: 1675, நவ. 11) சீக்கியர்களின் ஒன்பதாவது குரு தீவிர சமயவாதியாக இருந்த மொகாலாயச் சக்கரவர்த்தி ஔரங்கசீப்பின் கொடுமையிலிருந்து லட்சக் கணக்கானக் குடிமக்களைக் காப்பதற்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்த மகாத்மா சீக்கியர்களின் மதகுரு தேக் பகதூர். இவர் குரு நானக்கிற்குப் பிறகு ஒன்பதாவது குருவாக வந்தவர். சொல்லொணாக் கொடுமையைச் சாத்வீக எதிர்ப்பு. அகிம்சை, மனமுவந்து தானே துன்பத்தை ஏற்ற சகிப்புத் தன்மை ஆகியவற்றால் எதிர்கொண்டு ... Read More »

Scroll To Top