Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் (page 10)

Category Archives: அமானுஷ்யம்

கேணிவனம் – 26

1-ஆம் காலக்கோடு (Timeline)-ல் நடந்தது..! (தொடர்ச்சி) லிஷாவை துப்பாக்கியைமுனையில் பிடித்தபடி சக்கரவர்த்தி அனைவரையும் அந்த கேணிவனக்கோவிலுக்குள் நடத்தி சென்றான். இன்ஸ்பெக்டர், சக்கரவர்த்தியை மெதுவாக நெருங்க முயற்சிக்க, சக்கரவர்த்தி அவர்பக்கமாய் திரும்பி அவருக்கும் துப்பாக்கியை நீட்டி எச்சரித்தான். ‘வேண்டாம் இன்ஸ்பெக்டர்… கிட்ட வராத… சுட்டுருவேன்…’ என்று மிரட்டவே, அவர் பின்வாங்கினார்… கோவில் மண்டபத்தில் ஆறு பேரும் நின்றிருக்க… சக்கரவர்த்தி, கொஞ்சம் பின்னுக்குவந்து அனைவரும் தனது பார்வையில் படும்படி வந்து நின்றுக்கொண்டான். அங்கிருந்த அனைவருக்கும் சக்கரவர்த்தியின் இந்த செயல் மிகவும் ... Read More »

கேணிவனம் – 25

1-ஆம் காலக்கோடு (Timeline)-ல் நடந்தது..! பொழுது விடிந்தது… லிஷா கண்விழித்தபோது, அந்த காலைவேளையில் காடு முழுவதும் பனி சூழ்ந்து… காடு கனவுலோகமாய் காட்சியளித்தது… சே! இந்தக் காட்டை பார்த்தா நேற்று நான் இப்படி பயந்தேன் என்று அவள் வியக்குமளவிற்கு அந்த காட்டுச்சூழல் ரசிக்கும்படியாய் ரம்யமாய் காட்சியளித்தது… திரும்பி கூடாரத்திற்குள் பார்க்க, தாஸ் மட்டும் இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தான். அனைவரும் எழுந்து ஆளுக்கொரு வேளையில் ஈடுபட்டிருந்தனர்… தாஸ் மட்டும் ஏன் இவ்வளவு நேரம் தூங்கிக்கொண்டிருக்கிறான் என்று அவனை எழுப்புவதற்காக அவனருகில் ... Read More »

கேணிவனம் – 24

ஆஆஆஆ….! லிஷா அலறிவிட்டாள். அவள் அலறல் கேட்டு அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர். ‘என்ன லிஷா என்னாச்சு..’ என்று சந்தோஷ் அவளை நெருங்கியபடி கேட்க, அப்போதுதான் அவனும் தாஸின் முகத்தைப் பார்த்தான். வித்தியாசமாக இருந்தது… ‘அய்யோ.. பாஸ்க்கு என்னாச்சு..?’ என்று அவனும் பதற்றமடைய… சக்கரவர்த்தி தாஸின் உடலை நெருங்கி வந்தார். ‘இருங்க.. நான் பாக்குறேன்..’ என்றுகூறி, அவனது கையைப் பிடித்துப் பார்த்தார். அவனது மார்பில் காதுவைத்துப் பார்த்தார்… ‘பயப்படாதீங்க… உயிரோடத்தான் இருக்கார்… ஆனா மயக்கமடைஞ்சியிருக்கார்…’ என்று கூறி, ... Read More »

கேணிவனம் – 23

திசைமாறி வந்துவிட்டோம் என்று தாஸ் சொன்னதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்து நின்றனர். ‘திக்கு தெரியாத காடு’ என்று கதைகளில் உபயோகப்படுத்தபடும் உவமை எவ்வளவு கொடுமையானது என்று அங்கிருந்த 6 பேரும் உணர்ந்து கொண்டிருந்தனர். காட்டில் தொலைந்து போவது என்பது, கிட்டத்தட்ட உயிருடன் இறந்து போவதற்கு சமம். அடுத்த என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் சிலையாய் நின்றிருக்க… சக்கரவர்த்தி மிகவும் கவலை கொண்டவராய் தாஸின் அருகில் வந்தார்… ‘தாஸ்? என்ன இப்படி சொல்றீங்க..? இது தப்பான ரூட்டுன்னு எப்படி ... Read More »

கேணிவனம் – 22

பானரோமிக் பார்வையில் மலைத்துப்பார்க்க வைக்கும் ஹரிஸாண்ட்டல் அதிசயம் இரயில்…. தாஸ், அந்த இரவு வேளையில் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் 11ஆவது ப்ளாட்ஃபாரத்தில் நின்றிருந்த ரயிலை, தன் மனதுக்குள் ரசித்தபடி, கவிதை என்று எதையோ எழுத முயன்றுக்கொண்டிருந்தான். இரயிலுக்குள், ஜன்னலோரத்தில் எதிரெதிர் இருக்கையில் சந்தோஷூம், லிஷாவும் அமர்ந்தபடி சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தனர்… அங்கு பரவியிருந்த விளக்கு வெளிச்சத்தில், ஆங்காங்கே வெவ்வேறு ஊரைச் சேர்ந்த பயணிகளின் நடமாடிக்கொண்டிருக்க, அவர்களது முகமும், நடையும், உடையும் தாஸை ஒரு குழந்தையாய் மாற்றி, ரயில் நிலையத்தை ... Read More »

கேணிவனம் – 21

ப்ரொஃபஸர் கணேஷ்ராமின் வீடு… அவர் வீடு, பெரியளவில் இல்லாவிட்டாலும், ஒரு குட்டி பங்களா என்றே சொல்லலாம்…  ரசனையுடன் கட்டியிருந்தார்… வீட்டின் மாடியிலிருந்த ஒரு அறையை, பிரத்யேகமாக தனது ஆய்வுக் கூடமாக மாற்றியிருந்தார். (குட்டி ரகசியம் : முன்னொருநாள், இவர் வீட்டுக்கு வந்தபோது, இந்த அறையை பார்த்த தாஸ்-க்கு மிகவும் பிடித்துப் போகவேதான், பின்னாளில் பிரம்மாண்டமாய் Ancient Park என்று தனது ஆஃபீஸை வடிவமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து நிறைவேற்றினான்) இப்போது, அதே அறையில் தாஸ்-ம், சந்தோஷூம், லிஷாவும் ... Read More »

கேணிவனம் – 20

காலை 10.30 மணி… ரெட்ஹில்ஸலிருந்து பூதூர் செல்லும் ரோட்டில், ரெண்டு பக்கமும் வயல்களும் பனைமரங்களும் சூழ்ந்திருக்கும் வளைவான பாதைகளில், இன்ஸ்பெக்டர் வாசுதேவனின் ஜீப் சீறிக்கொண்டிருந்தது… சென்னை மாநகரத்தின் மிகச்சொற்ப தூரத்தில் இப்படி வயல்படர்ந்த கிராமம் இருப்பது சில சமயம் கடத்தல்காரர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது என்று மனதளவில் வாசுதேவன் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். லிஷா சந்தோஷூக்கு கடைசியாக செய்த ஃபோன்கால்-ஐ ட்ரேஸ் செய்ததில், அது இந்த பூதூர் கிராமத்தின் செல்ஃபோன டவரிலிருந்துதான் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று இன்று காலை அவருக்கு தகவல் வந்திருந்தது… ... Read More »

கேணிவனம் – 19

இன்ஸ்பெக்டர் வாசு ஃபோனில் பேசிக் கொண்டிருக்க… தாஸூம் சந்தோஷூம் அவர் பேசுவதை ஆவலாக பார்த்துக் கொண்டிருதனர்… ‘ஹலோ..?’ ‘. . . . . . . . ‘ ‘அப்படியா..?’ ‘. . . . . . . . ‘ ‘அந்த ஃபோன்கால்-ஐ ட்ரேஸ் பண்ண மேட்டர் என்னாச்சு..?’ ‘. . . . . . . . ‘ ‘அப்படியா..? வேற எதுவும் வழி இல்லியா..?’ ‘. . . ... Read More »

கேணிவனம் – 18

கடத்தல்காரனிடமிருந்து வந்த ஃபோன்கால், ஒருவகையில் மிரட்டலை விட்டு சென்றாலும், ஒரு வகையில் லிஷா இன்னும் உயிரோடு இருப்பதை ஊர்ஜிதப்படுத்தியிருந்ததால் தாஸ் சற்று ஆறுதலாயிருந்தான்… ஆனால், இருப்பிடம் தெரியாத பிரம்ம சித்தர் சமாதியை, எங்கென்று போய் தேடுவது… சோழ மன்னன், அதுவும் எந்த காலத்து சோழன், அவன் பெயரென்ன என்று ஒன்றும் தெரியாத நிலையில் எப்படி தேடுவது… மேலும், நான் சித்தர் சமாதியை தேடிக்கொண்டிருப்பதை எப்படி வெளியே தெரிந்தது… யாரோ தன்னை ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து வந்திருக்கிறார்கள். யாராயிருக்கும்… இந்த ... Read More »

கேணிவனம் – 17

காலை 7.30 மணி… தாஸூம் சந்தோஷூம் தி-நகர் போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்திருந்தனர்… இன்ஸ்பெக்டர் வாசு, சந்தோஷின் தொலைபேசி அழைப்பினால் ஸ்டேஷனுக்கு அந்த காலை வேளையில் துரிதமாக வந்திருந்தார். நடந்த நிகழ்வுகளை விசாரித்து, லிஷா முன்னாள் இரவு ஓட்டிக் கொண்டு போன தாஸின் கார் நம்பரை வெவ்வேறு ஸ்டேஷனுக்கு தெரிவித்து, தேடிப்பார்க்குமாறு உத்தரவிட்டிருந்தார். சந்தோஷ், ஒரு சிலையைப் போல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்… இரண்டு நாட்களுக்கு முன்பும், இதே போலீஸ் ஸ்டேஷனில், விரக்தியாய் அமர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. ... Read More »

Scroll To Top