Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் (page 11)

Category Archives: அமானுஷ்யம்

கேணிவனம் – 16

ஆபீசுக்கு பின்புறம், பீச் வியூ பார்க்கில், தாஸும் சந்தோஷூம் புகை பிடித்துக் கொண்டிருந்தனர்… சந்தோஷ் ஆழ்ந்த சிந்தனையில் கடற்கரையை பார்த்தபடி புகை இழுத்துக் கொண்டிருந்தான்… சிகரெட்டை பிடித்திருந்த அவனது கைகள், அவனுக்கும் தெரியாமல் நடுங்கிக் கொண்டிருந்ததை எதிரிலிருந்த தாஸ் கவனித்தான்… ‘சந்தோஷ்..? ஏதாவது பிரச்சினையா..?’ என்று கேட்டதும், கவனம் கலைந்த சந்தோஷ் தாஸிடம் திரும்பினான்… ‘ஏன் பாஸ்… அப்படி கேக்குறீங்க..?’ ‘உன் கை சிகரெட் பிடிக்கும்போது நடுங்குது!?! ஒருவேளை ஏதாவது பதற்றத்துல இருக்கியோன்னு தோணுது… அதான் கேட்டேன். ... Read More »

கேணிவனம் – 15

அந்த மதிய வேளையில் போலீஸ் ஸ்டேஷன் கொஞ்சம் அமைதியாகவே இருந்ததால்… லிஷா போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தபோது, அனைவரது கவனமும் அவள்மேல் திரும்பியது. உள்ளே உணவருந்திமுடித்து தினசரியை புரட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர்  ‘வாசு’வுக்குஅருகில் சென்று நின்றாள்… ‘சார் வணக்கம் என் பேரு லிஷா…’ லிஷாவின் வணக்கத்தால் பேப்பரிலிருந்து கவனம் கலைந்த இன்ஸ்பெக்டர் வாசு, அவளை ஏறிட்டு பார்த்தார்… ‘என்னம்மா விஷயம்..?’ ‘சார், என் வருங்கால ஹஸ்பெண்ட்-ஐ இங்க அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கீங்க..? அதான் உங்ககிட்ட நடந்த உண்மையை சொல்லலாம்னு ... Read More »

கேணிவனம் – 14

லிஷாவைப் பற்றி அவதூறாக கம்ப்ளைண்ட்டில் குணா எழுதியிருந்ததைப் படித்த சந்தோஷ்… போலீஸ் ஸ்டேஷனில் உறைந்து போய் அமர்ந்திருந்தான். ‘சார், இது அநியாயம் சார், இதெல்லாம் பொய்..’  என்று தனக்கருகிலிருந்த கான்ஸ்டெபிளிடம் கூற, அவர் அவனை சிறிதும் சட்டை செய்யாமல் அமர்ந்திருந்தார். ‘சார்… உங்ககிட்டதான் சார் சொல்லிட்டிருக்கேன். இந்த கம்ப்ளைண்ட்ல எழுதியிருக்கிறதெல்லாம் சுத்த பொய் சார்..’ ‘அதுக்கு நான் என்னய்யா பண்ண்டடும்..? எதுவா இருந்தாலும் ஐயா வந்ததும் பேசிக்கோ..’ என்று அவர் தனது வேலையில் மூழ்க… சந்தோஷால் இதை ... Read More »

கேணிவனம் – 13

தாத்தா, தாஸ் தன்னிடம் கேட்ட அந்த சித்தரைப் பற்றி தொடர்ந்தார்… ‘அந்த சித்தரோட பேரு என்னன்னு இன்னும் சரியா தெரியலப்பா… ஆனா, நாம தேடின மாதிரி, பிரம்மா கடவுளை உபாசகம் பண்ணிக்கிட்டு வாழ்ந்த ஒரு சித்தரோட சமாதி இருக்கிற இடம் தெரிஞ்சிருக்கு..’ என்று கையில் ஒரு புத்தகத்தை நெஞ்சோடு அணைத்து கட்டிபிடித்தபடி சொன்னார். ‘எப்படி தெரிஞ்சுது தாத்தா..?’ ’18ஆம் நூற்றாண்டுல, பூலித்தேவ ராசா காலத்து ஓலைச்சுவடிகள்ல சில சுவடிகள் சித்தர்களோட சமாதிகளை பத்தி சொல்லுது… அந்த சுவடிகளை ... Read More »

கேணிவனம் – 12

ப்ரொஃபெஸர் கணேஷ்ராம், ஃபோனில் தாஸிடம், தான் ஓவியத்தில் கண்டுபிடித்த மூன்றாவது நபர் பற்றி கூறிக்கொண்டிருந்தார். ‘அந்த மூணாவது நபர், அரசருக்கு பக்கத்துல, உக்காந்துட்டிருக்கிற மாதிரியிருக்கு… ஒரு அரசன் நின்னுட்டிருக்கும்போது, பக்கத்துல உக்கார்ற தகுதி ரொம்ப சிலருக்குத்தான் இருக்கும்… அந்த வகையில பாக்கும்போது, ஒண்ணு யாராவது ஒரு பெரிய புலவரா இருக்கலாம்… இல்லன்னா யாராவது ஒரு முனிவராவோ இல்லை சித்தராவோ இருக்கலாம்..’ ‘நீங்க என்ன சார் நினைக்கிறீங்க..?’ ‘எனக்கு தெரிஞ்சு அது புலவரா இருக்க வாய்ப்பில்லை..!’ ‘ஏன்..?’ ‘ஏன்னா, ... Read More »

கேணிவனம் – 11

சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவில்… CTH ரோட்டில்…. ஒரு கார் சீறிக்கொண்டிருந்தது. உள்ளே…. தாஸ் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்க, அருகில் லிஷா அமர்ந்திருந்தாள். ‘இன்னும் எவ்வளவு தூரம் போகணும்…’ ‘ஆல்மோஸ்ட் தேர்… ஏன் லிஷா? சந்தோஷ் இல்லாம போரடிக்குதா..?’ ‘அப்படியில்ல… சும்மாதான் கேட்டேன்..’ என்று பேசியவள், சற்று தயங்கி… ‘உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா..?’ ‘என்ன லிஷா..?’ ‘நேத்து, நீங்க சந்தோஷ்கிட்ட பேசும்போது இந்த வார்ம்ஹோல் எங்கேயிருக்குன்னு வெளிநாட்டுக்கு சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்க..?’ ‘ஆமா..?’ ‘அப்ப ஏன், நம்ம நாட்டு விஞ்ஞானிங்ககிட்ட ... Read More »

கேணிவனம் – 10

இரவு 7 மணி… ANCIENT PARK-ல் வாடிக்கையாளர்கள்… கூடத்தில் அங்குமிங்கும் புத்தகங்களில் முகம் புதைத்திருந்தனர். ஒருவிதமான அமைதி அந்த கூடத்தில் கனத்துக்கொண்டிருந்தது. லிஷா சடாரென்று அவசர அவசரமாக ANCIENT PARKக்குள் நுழைந்தாள். அவள் அப்படி அவசரமாக நுழைந்ததை, அங்கே கூடத்தில் புக் படித்து கொண்டிருக்கும் சில வாடிக்கையாளர்கள் கவனம் கலைந்தவர்களாக அவளை மிதமாக முறைத்தனர். அவள் அவர்களை சட்டை செய்யாமல் அங்கிருந்து, தாஸின் ஆஃபீஸ் அறைக்கு சென்று கதவை பதற்றத்துடன் திறந்தாள்… அறை காலியாக இருந்தது…கான்ஃபரன்ஸ் அறைக்குள் ... Read More »

கேணிவனம் – 9

‘என்ன லிஷா சொல்றே… குணாவைக் காணோமா..? எங்கே போனான்…?’ என்று சந்தோஷ் அதிர்ச்சியாய் கேட்க… ‘ஆமா சாண்டி(Sandy), சாப்பிட்டு முடிச்சி கூடவே வந்த ஆளு, கை கழுவிட்டு, கான்ஃபரன்ஸ் ஹால் பக்கம் போயிட்டிருந்தாரு… அப்புறம் ஆளக்காணோம்… தேடிப்பாத்தா எங்கேயும் இல்ல..?’ என்று லிஷா குழப்பமாக கூற… தாஸ் சட்டென்று எழுந்து… கான்ஃபரன்ஸ் ஹால் பக்கம் வேகமாக நடந்தான்… லிஷா அவனை பின்தொடர்ந்து போக, சந்தோஷ் வாசலை நோக்கி ஓடினான். கான்ஃபரன்ஸ் ஹாலில், பழையபடி ஆரஞ்சு கலர் வெளிச்சமும், ... Read More »

கேணிவனம் – 8

சுவற்றில் ப்ரொஜெக்ட் செய்யப்பட்டிருந்த ஓவியத்தை பார்த்துக் கொண்டிருந்த தாஸ்… எழுந்து அந்த ஓவியத்தை நெருங்கி சென்றான். ‘சந்தோஷ், நாங்க ரெண்டு பேரும் எப்படி வெவ்வேற காலக்கட்டத்துக்கு வந்து சேர்ந்தோம்னு தெரிஞ்சிடுச்சி…’ ‘எப்படி பாஸ்…’ என்று சந்தோஷ் கேட்டுக் கொண்டிருக்க… தாஸ் அந்த ஓவியத்தை நெருங்கி வந்து உற்றுப் பார்த்தான்.  இதுவரை அந்த ஓவியத்தில் பார்க்காத ஒரு விஷயம், தாஸ் கண்களுக்கு தெரிந்தது. அது… அந்த ஓவியத்தை சுற்றி வரையப்பட்டிருந்த பார்டர். ஓவியத்தின் மையப் பகுதியிலேயே இதுவரை தனது ... Read More »

கேணிவனம் – 7

‘யோவ் ரைட்டர்… எல்லாம் உன்வேலதானா..? நீ என்ன வில்லனா..?’ என்று குணா, தாஸை முறைத்துக் கொண்டிருந்தான்… ‘சாரி குணா… என்னை வில்லன் மாதிரி நடந்துக்க வச்சிட்டீங்க…’ ‘நான்தான் உன் சகவாசமே வேண்டாம்னு சொல்லியிருக்கேன்ல..? அப்புறம் ஏன்யா எனக்கு தொல்லை கொடுக்குறே..?’ என்று குணா கோபப்பட ‘குணா… நான் உங்களை இங்க வரவழைச்சதே நம்ம நல்லதுக்குதான்…’ ‘என்ன நல்லது..?’ ‘நாம மறுபடியும், அந்த காட்டுக்கோவிலுக்கு போக வேண்டியிருக்கும்…’ என்று கூற, உடனே குணாவிற்கு, அவன் அந்த காட்டுக் கோவிலில் ... Read More »

Scroll To Top