Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் (page 30)

Category Archives: அமானுஷ்யம்

பேய்கள் ஓய்வதில்லை – 10

சார் நான் ரெண்டு டிக்கெட் வாங்கினேன் முகேஷ் கூற அப்ப எங்க போச்சு இன்னொரு டிக்கெட்? என்றார் கண்டக்டர். தம்பி நீங்க நல்லா தூங்கிட்டு வந்துருக்கீங்க! ஏதோ நினைப்புல கூட பிரெண்ட் வந்தான்னு சொல்லறீங்க  என்றார் சக பயணி ஒருவர். இல்லசார் ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் வந்தோம். பேசிகிட்டே வந்தோம். இடையில கொஞ்சம் கண் அசந்துட்டேன். இப்ப ப்ரெண்ட காணோம். அப்படியா? உங்க கிட்ட மொபைல் இருக்கு இல்ல எடுத்து ப்ரெண்டுக்கு கால் பண்ணுங்க! நல்ல யோசனை ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 9

இருள் சூழ்ந்த இரவு வேளையில் சில சில்வண்டுகள் சத்தம் பேயிறைச்சலாக இருந்தது. கிராமம் என்பதால் வேறு சப்தங்கள் இல்லை! ஆங்காங்கே பட்டியில் உள்ள மாடுகள் வாலை சுழற்றும் சப்தங்களும் ஒரு சில நாய்களின் குறைப்புக்களும் தவிர அந்த ஊரே நிசப்தமாக இருந்தது. நள்ளிரவு தாண்டிய நேரம் என்பதால் ஊரின் அனைத்து வீடுகளும் அடைத்துக் கிடந்தன. சிலர் திண்ணையிலும் வாசலிலும் கட்டில் விரித்து படுத்துக் கிடந்தனர். புது ஊர் புதிய இடம் என்ற எந்தவித பயமும் இன்றி செல்வி ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 8

கண்ணாடியில் தெரிந்த புகை படிந்த உருவத்தை கண்டதும் வீல் என அலறினான் முகேஷ்! அதே சமயம் ரத்தக்கறை படிந்த அந்த துணியை சுவைத்துக் கொண்டிருந்த ரவி திரும்பினான். அவன் கண்களில் ஒரு கனல்! ஏய்! ஏன் இங்க வந்தே போ! போயிரு! என்று கத்தினான். முதன் முதலாக நண்பனை கண்டு பயந்தான் முகேஷ்! பின் சுதாரித்துக் கொண்டு டேய்! நான் உன் ப்ரெண்டுடா நல்லா பாரு! என்றான். யாரு! நீயா? நீ இல்லே என் ப்ரெண்டு! என்று ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 7

முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் தான் மணக்க போகும் பெண் என்று அழைத்துவரும் செல்வியின் நடவடிக்கைகள் வினோதமாக இருக்கிறது. அவளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறுகின்றனர். அதே சமயம் முகேஷின் நண்பன் ரவிக்கும் பேய் பிடித்து கொள்கிறது. அது அவனை தன்னுடன் வருமாறு அழைக்கிறது. இதற்கிடையில் ராகவனின் நண்பர் மணி தன் வாழ்க்கையில் நடந்த இரு பேய் பற்றிய சம்பவங்களை கூறி வருகிறார். இனி} ஹீரோ ஹோண்டா ஸ்பெலண்டெரை ஆன் செய்து மிக லாவகமாக ஓட்டிக்கொண்டு நத்தம் ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 6

முகேஷ் மிகவும் பயந்து போயிருந்தான். அவனுடன் வந்த பெரியவரை காணவில்லை! உள்ளே நுழையும் போது ரவியை பார்த்து நாய்கள் பயங்கரமாக குரைக்க ஆரம்பித்தது. அவனுக்கு வேர்த்து வழிந்தது. இன்று யார் முகத்தில் முழித்தோமோ தெரியலை? வீட்டுல அப்பா அம்மாவும் இல்லே சரியான சமயத்தில இந்த ரவி பயல் வந்து நம்மை இந்த ஆட்டு ஆட வைக்கிறானே என்று மனதில் புலம்பிக் கொண்டிருந்தான். வேறு என்ன செய்ய முடியும் உள்ளே நுழைந்தான். வா ரவி என்று அழைத்தான். ரவி ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 5

செல்வி அந்தம்மாவிடம் இருந்து கையை உதறிய சமயம் தெருவில் ஒரே கூட்டமாய் மக்கள் ஓடினார்கள். என்னடா இது எங்கே ஒடுகிறார்கள் என்று ஒரே ஆச்சர்யமாக போய் விட்டது ராகவனுக்கு என்ன இது இன்று காலையில் இருந்து நடப்பது எல்லாம் வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டு ஓடுபவர்களை மறித்து எங்கே ஓடறீங்க? என்ன விசயம் என்றான். நம்ம ஏரிக்கரையோரமா ஏதோ பிணம் கிடக்காம்! போலிஸ் வந்திருக்கு அதான் போறோம். என்று சொல்லிவிட்டு சென்றான் ஒருவன். இது என்னடா ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 4

அமாவாசை இருட்டு எனில் அந்த பகுதி மிகவும் பயங்கரமாக காட்சி தந்திருக்கும். ஆனால் அமாவாசைக்கும் பவுர்ணமிக்கும் இடைப்பட்ட அஷ்டமி இரவு ஆனதால் அரைநிலா வெளிச்சத்தில் சுருண்டு விழுந்த ரவியை தட்டி எழுப்ப முயன்ற முகேஷ் திடீரென அலறினான். ஏனேனில் அப்போது நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்கும். தனியாக அத்துவானக் காட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத இரவில் இப்படி ஒரு விசித்திர அனுபவ நேரத்தில் பின்னால் இருந்து யாரோ தொட்டால் கத்தாமல் என்ன செய்வான். ஆனால் அவன் பயந்தது ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 3

முகேஷ் செல்போனை ஆன் செய்தான்!முதலில் முகேஷின் பயந்த குரல் பின்னர் ரவியின் உடைந்த குரல் மாறி ஆக்ரோஷமாய் ஏண்டா மடையா எத்தினி பேயி படம் பார்த்திருப்பே? இப்படி ட்யூப் லைட்டா இருக்கியே? ரவி உடம்புல நான் புகுந்துட்டேன்! டொட்டடொய்ங்க்! என்ன.. து! நீ ரவி உடம்புல புகுந்திட்டியா? யாரு யாருடா நீ! அது! அது என்ன எத்தினி பேரு சேர்ந்து அடிச்சி கொன்னு போட்டாங்க தெரியுமா? அவங்களை நான் பழி வாங்க வேண்டாம்! என்னது உன்னை அடிச்சி ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 2

எ.. என்னது உசுரு உன். உன்னோடதா? ஒண்னும் புரியலை? ஏண்டா மடையா எத்தினி பேயி படம் பார்த்திருப்பே? இப்படி ட்யூப் லைட்டா இருக்கியே? ரவி உடம்புல நான் புகுந்துட்டேன்! டொட்டடொய்ங்க்! என்ன.. து! நீ ரவி உடம்புல புகுந்திட்டியா? யாரு யாருடா நீ! அது! அது என்ன எத்தினி பேரு சேர்ந்து அடிச்சி கொன்னு போட்டாங்க தெரியுமா? அவங்களை நான் பழி வாங்க வேண்டாம்! என்னது உன்னை அடிச்சி கொன்னுட்டாங்களா? ஆமா! பிரண்ட்! ம்ம்ம்! ரவி அழ ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 1

ரெண்டுங்கெட்டான் வயசு என்று சொல்வது போல பொன்னேரியும் ஒரு ரெண்டுங்கெட்டான் நகரம். அதை நகரம் என்றும் சொல்லமுடியாது. கிராமம் என்று ஒதுக்கிவிடவும் முடியாது. அனைத்து வசதிகளும் இருக்கிறது என்று சொல்ல முடியா விட்டாலும் ஓரளவு வசதிகள் உள்ள நகரம் அது. ஊருக்கு ஒதுக்குபுறமாய் ஒரு ரயில் நிலையம், மையத்தில் பேருந்து நிலையம். பல்பொருள் அங்காடிகள் என நிறைந்து நின்றாலும் புழங்கும் மக்கள் எல்லோருமே பெரும்பாலும் கிராமவாசிகளே. ஏனெனில் பொன்னேரியைச் சுற்றியுள்ள பகுதிகள் கிராமங்களே அதை விடுத்து நாலாபுறமும் ... Read More »

Scroll To Top