Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் (page 29)

Category Archives: அமானுஷ்யம்

பேய்கள் ஓய்வதில்லை – 20

மணி சுமார் விடியற்காலை மூன்று இருக்கும் திடுமென விழித்துக் கொண்டான் வினோத். தூரத்தில் ஆம்புலன்சின் சைரன் ஒலியும் பதட்டமான குரல்களும் அவன் காதில் ஒலிக்க எழுந்து வெளியே வந்தான். மவுல்வியும் அப்போதுதான் எழுந்து வெளியே வந்திருந்தார். பனிமூடியிருந்தது அந்த பிரதேசமே தூரத்து காட்சிகள் ஒன்றும் விளங்க வில்லை! என்ன தம்பி! இவ்வளவு சீக்கிரம் எழுந்திட்டீங்க? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கலாம் இல்ல! இல்லே திடுமென விழிப்பு வந்துடுத்து? ஆமாம் அது என்ன சத்தம் ஆம்புலன்ஸ் சைரன் மாதிரி ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 19

அதிகாலையில் அந்த அதிசயக் காட்சியை பார்த்து பிரமை பிடித்தவன் போல நின்றான் முகேஷ். அவனோடு வந்து பாதி வழியில் காணாமல் போய் அவனுக்கு சவாலும் விட்ட ரவி அங்கே அமைதியாக சாதுவாக கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான். சித்தப்பா! இது இது எப்படி? நான் எதுவும் உங்க கிட்ட சொல்லவே இல்லை? ஆனா.. சித்தப்பா என்று அவனால் அழைக்கப்பட்ட சுவாமிஜி முறுவலித்தார்! பக்தனின் குறையை தானே கலைவதுதானே ஒரு இறைவனின் கடமை! அப்ப நீங்க கடவுளா? இங்க ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 18

இன்னிக்கு ராத்திரியே என்னை கொன்னவனோட பொணம் விழும்! அதை உங்க யாராலும் தடுக்க முடியாது! கண்களில் கோபம் மின்ன சொன்ன செல்வியை பார்த்து பாய் தன் சாந்தமான விழிகளால் அமைதிப்படுத்தினார். அம்மா ப்ரவீணா! பழிக்கு பழி வாங்கி விட்டால் எல்லாம் சரியாயிடுமா? அவனுக்கும் குடும்பம் இருக்கும். அவன் திரும்பவும் உன்னை பழி வாங்குவான்! தவறுக்கு சரியான தண்டனை மன்னிப்புதான்மா! என்றார். பாய்! நீங்க வேணா இப்படி அஹிம்சை பேசலாம்! ஆனா பாதிக்கப்பட்டது நான்! எனக்குத்தான் அந்த வலியும் ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 17

கொண்டபள்ளி ஒரு டிபிகல் ஆந்திர கிராமம். மலையடிவாரத்தில் பல குடிசைகள் சில கான்க்ரீட் வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக மாடு இருந்தது. ஆனாலும் விவசாயம் படுத்து விட்டதால் இப்போது பலர் பக்கத்து கம்பெனிகளுக்கு வேலைக்கு சென்று விடுகிறார்கள். பேய்,பிசாசு, காத்து கருப்பு இவை மீது மிகுந்த நம்பிக்கையும் பயமும் அந்த மக்களுக்கு உண்டு. பேய் அடித்துவிட்டது! பிசாசு மிரட்டிவிட்டது என்று எப்பொழுதும் சுவாமிஜியிடம் திருநீறு மந்திரித்து தாயத்து கட்டிச் செல்வார்கள். சுவாமிஜியும் நேரம் காலம் பார்ப்பது இல்லை! ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 16

வாம்மா! பிரவீணா! வா! என்று அந்த மசூதியின் மவுல்வி அழைக்கவும் சலாம் பாய் என்று கையை முகத்தில் வைத்து செல்வி முகமன் கூறவும் மிகவும் அதிசயமாக இருந்தது மணிக்கும் ராகவனுக்கும். வினோத்திற்கு வியர்த்து வாங்கியது நடப்பது எதையும் நம்ப முடியவில்லை அவனால். இப்படி உக்காரும்மா! என்று செல்வியை தனது எதிரில் அமரவைத்த அந்த மவுல்வி கண்களை மூடிக்கொண்டு எதையோ ஜபித்தார். பின்னர் தன் கையில் இருந்த மயில் இறகினால் மூன்று முறை தடவினார். ஒரு கிண்ணத்தில் இருந்த ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 15

அந்த முழு பூசணிக்காய் முழுவதுமாக வெடித்து சிதற அதன் பாகங்கள் இரத்த சிவப்பில் ஆங்காங்கே சிதறிக்கிடக்க அந்த பேய் பிடித்த பெண்மணி அப்படியே மயங்கி சரிந்தார். முகேஷ் வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருக்க அவனது சித்தப்பாம் அந்த பெண்ணின் உச்சி முடியை ஒரு ஆணியில் கட்டி அதை வெட்டினார். பின்னர் சிறிது விபூதியை கையில் எடுத்து ஏதோ மந்திரம் உச்சரித்து அப்பெண்ணின் நெற்றியில் பூசினார். இரண்டு எலுமிச்சை பழங்களையும் திருஷ்டி போல சுற்றி வீசிவிட்டு கையில் ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 14

எனக்கு எல்லாம் தெரியும் நீங்க பாயை பார்க்க போறதும்  இந்த வீணாவுக்கு தெரியும் என்ற செல்வியை மிரட்சியுடன் பார்த்த மணி  என்னமா சொல்றே? உம் பேரு செல்விதானே! என்றார் அது இப்போ! ஆனா போன ஜென்மத்துல நான் வீணா! வீணாவா என்னம்மா சொல்றே? என்ன மணி மாமா! என்னை தெரியலை உங்களுக்கு! நான் தான் பிரவீணா! ஆப்ப கடை வைச்சிருந்தாங்களே பார்வதியம்மா அவங்களோட ஒரே பொண்ணு! அட என்னம்மா கதை இப்படி போவுது சரி!  நீதான் நீ ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 13

ஆட்டோ சீரான வேகத்தில் திருச்சானூர் செல்லும் சாலையில் பயணித்து கொண்டிருந்தது. முகேஷ் மவுனத்தை கலைத்து பேச ஆரம்பித்தான். சந்திரன் உங்களுக்கு எப்படி எங்க சித்தப்பாவை பழக்கம்? உங்களுக்கு தமிழ் தெரியுமா? நான் தமிழ் நாடுதான் தம்பி! உங்க சித்தப்பாவை போல பிழைப்புக்காக திருப்பதி வந்தவன்! அப்ப நீங்க என்னை தெலுங்குல  கூப்பிட்டீங்க? இங்க வந்து ஒரு இருபது இருபத்தைஞ்சி வருஷம் ஆகி போச்சு தம்பி! இங்க இருக்கறவங்களோடு பழகி பழகி தமிழ் மறந்து போச்சு! எல்லாம் பிழைப்புக்கதான் ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 12

கண்டிப்பாக பைத்தியம் முற்றிவிட்டது என்று மணி கூறவும் வினோத், இல்லீங்க ஐயா, நான் பைத்தியம் இல்லே! செல்வி இதுக்குள்ளாறத்தான் இருக்கா! உள்ளே பாத்திரங்கள் உருளும் ஓசையும் ஏதோ சமையல் வாசனை கூட  என் மூக்குக்கு உறைக்கிறது கொஞ்சம் நம்புங்க! என்றான். சரிப்பா! நம்பறோம்! செல்வி இதுக்குள்ளாற இருந்தாலும் இருக்கட்டும் இப்ப நாம வீட்டுக்கு போவோம்! இந்த அர்த்த ராத்திரியில இங்க நின்னுகிட்டிருக்கிறது தப்பு என்றார் மணி. என்ன சொல்றீங்க நீங்க? செல்விய தனியா விட்டுட்டு போறதா? மறுபடியும் ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 11

ரவி காலிங்… என்று மின்னும் எழுத்துக்களையே கண்கொட்டாமல் பார்த்த முகேஷ் ஆன் பட்டனை ஆன் செய்தான். ஹலோ! ரவி எங்கேடா போயிட்டே! இப்படியா செய்வே? என்று கோபமாக கேட்டான். மறுமுனையில் கரகரத்த குரல் பேசியது. நான் ரவி இல்ல! அவன் உடம்புல இருக்கற ஆவி! என்னை திருப்பதி கூட்டிப் போய் துரத்திடலாம்னு நினைச்ச இல்ல! அது ரொம்ப தப்பு முகேஷ். இப்ப ரவி என் கட்டுப்பாட்டில் இருக்கான். அவனை உன்னால கட்டுப்படுத்த முடியாது. என் காரியம் முடியறவரைக்கும் ... Read More »

Scroll To Top