Home » 2016 » December (page 10)

Monthly Archives: December 2016

ஆசார்யர் விவேகானந்தர்

ஆசார்யர் விவேகானந்தர்

ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு நாள்  ‘ஜெய் ராதே பிரேமமயீ. நரேன் உலகிற்குப் போதிப்பான்’ என்று கைப்பட எழுதி சுவாமிஜியின் ஆசார்யத்துவத்தை சாசனம் செய்தார். சாஸ்திரங்களின் கருத்துகளையும் விதிகளையும் கற்றுத் தெளிந்து, கடைப்பிடித்து, தற்கால மக்களுக்கு ஏற்றபடி அளித்து மக்களை உயர்த்துபவரே ஆசார்யர். “நாராயணம் பத்மபுவம் வஸிஷ்டம் சக்திஞ்ச தத்புத்ர பராசரம் ச வ்யாஸம் சுகம் கௌடபதம் மஹாந்தம்” -என்பது நாம் போற்றும் ஆசார்ய பரம்பரை. பின் ஆதிசங்கரர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீமத்வர், ஸ்ரீசைதன்யர், ஸ்ரீராமகிருஷ்ணர் என ஆசார்யர் பரம்பரை ... Read More »

இன்று: டிசம்பர் 14

இன்று: டிசம்பர் 14

இந்தியா – எரிபொருள் சேமிப்பு நாள் உலகக் குழந்தைகள் தொடர்பு நாள் 1287 – நெதர்லாந்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர் சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1542 – இளவரசி மேரி ஸ்டுவேர்ட் முதலாம் மேரி என்ற பெயரில் ஸ்கொட்லாந்தின் அரசியானாள். 1819 – அலபாமா ஐக்கிய அமெரிக்காவின் 22வது மாநிலமானது. 1899 – யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது. 1900 ... Read More »

கொழுப்பை குறைக்கும் உணவுகள்

கொழுப்பை குறைக்கும் உணவுகள்

கொழுப்பை குறைக்கும் உணவுகள். திடீரென்று எடை கூடுகிறதா? களைப்பாக இருக்கிறதா? ஜலதோஷம் அடிக்கடி ஏற்படுகிறதா? குறிப்பாக பெண்களுக்கு முடி கொட்டுகிறதா? அப்படி எனில் உங்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகரித்து வருகிறது என்று அர்த்தம். உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொலஸ்டிரால் அளவைப் பாருங்கள். கொழுப்பை குறைக்கும் உணவுகள்கொலஸ்டிரால் இருக்கிறது என்றால் உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாலே போதும். அளவுடன் முட்டை சாப்பிடலாம். ஆனால், நெய், வெண்ணெய் முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும். பெண்கள் தைராய்டு ... Read More »

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி

இதயத்திற்கு வலிமையை வழங்கும் நெல்லிக்கனியை உண்டு தண்ணீரை குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்று நோய்கள் எதுவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது. நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் ... Read More »

நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான்!

நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான்!

மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள். அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும். மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும். முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் ... Read More »

சுவாமி விவேகானந்தர் கண்ட ஸ்ரீ இராமானுஜர்

சுவாமி விவேகானந்தர் கண்ட ஸ்ரீ இராமானுஜர்

மேலைநாடுகளிலிருந்து வெற்றித்திருமகனாகத் தாய்நாட்டிற்குத் திரும்பிய சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணர் காட்டிய வழியில் வீடும் நாடும் நலம்பெறத் துறவிகள் நடத்தக்கூடிய ஒரு சங்கம் தோற்றுவிக்க மனம் கொண்டார். சமுதாயத்தில் மகிழ்ச்சி இருந்தாலொழியத் தனிமனித மோட்சம் உபயோகமற்றது என்றும் கருதினார். ஆனால், சக துறவி யோகானந்தர், சமூக சேவை வீடு பேறு பெற உதவாது. சமூக சேவையை முன் வைத்தால், தாம் சங்கத்தில் இணைய முடியாது என்றும் சமூகசேவையை ஆன்மிகத்துடன் தொடர்பு படுத்துவது கிறிஸ்து மதத்தினர் செய்வது, இதை ... Read More »

இன்று: டிசம்பர் 13

இன்று: டிசம்பர் 13

நிகழ்வுகள் 1577 – சேர் பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார். 1642 – ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார். 1888 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது. 1937 – சீனாவின் நான்ஜிங் நகரம் ஜப்பானியரிடம் வீழ்ந்ததை அடுத்து அங்கு பல பொதுமக்கள் கொல்லப்பட்டும் பாலியல் வதைக்கும் உள்ளாக்கப்பட்டனர். 1941 – இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீது போரை ... Read More »

இன்று: டிசம்பர் 12

இன்று: டிசம்பர் 12

நிகழ்வுகள் 627 – பைசண்டைன் பேரரசு இராணுவம் ஹெராகிளியஸ் தலைமையில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன. 1098 – சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர். 1787 – பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமானது. 1812 – ரஷ்யாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது. 1817 – நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார். 1862 – யாசூ ... Read More »

நாவல் பழத்தின் மருத்துவ குணம்

நாவல் பழத்தின் மருத்துவ குணம்

நாவல் பழத்தின் மருத்துவ குணம். நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். நாவல் பழத்தின் மருத்துவ குணம்சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் ... Read More »

நீங்கள் செம்மறி ஆடுகள் அல்ல! சிங்கங்கள்!

நீங்கள் செம்மறி ஆடுகள் அல்ல! சிங்கங்கள்!

ஓ சிங்கங்களே! எழுந்து வாருங்கள். நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அமரத்துவம் பெற்ற ஆன்மாக்கள், அழியாத பேரின்பத்தை குழந்தைகள். அப்படியா? இது உண்மையா? உண்மை என்றால் நாம் ஏன் அதனை உணரவில்லை? சுவாமி விவேகானந்தர் கூறும் கதை ஒன்றைக் காண்போம். ஓர் அழகிய கிராமம். அந்தக் கிராமத்தில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தான். அவனிடம் ஆட்டு மந்தை ஒன்று இருந்தது. அவன் தினந்தோறும் மேய்ச்சலுக்காக ஆட்டுமந்தையைக் காட்டுக்கு ஓட்டிச் செல்வான். மாலையில் ... Read More »

Scroll To Top