Home » 2016 » December » 05

Daily Archives: December 5, 2016

விதியா? மதியா?

விதியா? மதியா?

ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று கேட்டான். “மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன் விதியா, இல்லை அவன் மதியா?”. ஞானி சொன்னார். “ஒரு காலை உயர்த்தி மறு காலால் நில்” கேள்வி கேட்டவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் இடது காலை உயர்த்தி வலது காலால் நின்றான். ஞானி சொன்னார். “சரி அந்த இன்னொரு காலையும் உயர்த்து” அவனுக்குக் கோபம் வந்து விட்டது. நம் நடிகர் வடிவேலு மாதிரி “என்ன சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு” என்று சீறினான். “இரண்டு ... Read More »

மாற்றங்கள் உருவாக்கும் வாய்ப்புகள்!!!

மாற்றங்கள் உருவாக்கும் வாய்ப்புகள்!!!

வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் இடையே எத்தனையோ வேறுபாடுகள் இருக்கின்றன என்றாலும் ஒரு வேறுபாடு மிகவும் பிரதானமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அது என்னவென்றால் வெற்றியாளர்கள் மாற்றங்கள் நிகழும் போது அதற்குத் தகுந்தாற் போல் உடனடியாக மாறி அந்த மாற்றங்களுடன் வரும் வாய்ப்புகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தோல்வியாளர்களோ நிகழும் மாற்றங்களைக் கண்டு முகம் சுளிக்கிறார்கள். மனம் வருந்துகிறார்கள். புலம்புகிறார்கள். எனவே அந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவும், மாற்றங்களுடன் வரும் வாய்ப்புகளைக் கண்டு கொள்ளவும், பயன்படுத்தவும் தவறி விடுகிறார்கள். ... Read More »

இன்று: டிசம்பர் 5

இன்று: டிசம்பர் 5

நிகழ்வுகள் 1082 – பார்சிலோனா மன்னன் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டான். 1360 – பிரெஞ்சு நாணயம் பிராங்க் அறிமுகப்படுத்தப்பட்டது. 1492 – கொலம்பஸ் ஹிஸ்பனியோலா தீவை அடைந்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே. 1497 – போர்த்துக்கல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான். 1746 – ஸ்பானிய ஆட்சிக்கெதிராக ஜெனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது. 1848 – கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக ... Read More »

பானை

பானை

முல்லா ஒருமுறை பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு பானை இரவல் வாங்கினாராம். பல நாட்கள் வரை முல்லா பானையைத் திருப்பித் தராததால், பக்கத்து வீட்டுக்காரர் வந்து பானையைத் திருப்பிக் கேட்டார். அதற்கு முல்லா… “அடடே…, உங்களிடம் வாங்கிய பானையை திருப்பிக் கொடுக்காமல் இருந்ததிலும் ஒரு லாபம் இருக்கின்றது. அந்தப் பானை ஒரு குட்டி போட்டு இருக்கின்றது, “… என்று சொல்லி அதனுடன் ஒரு சிறிய பானையும் கொடுத்தார். பக்கத்து வீட்டுக்காரர் மகிழ்ச்சியில் இரண்டு பானையும் வாங்கிச் சென்றார். அதேபோல் ... Read More »

சிகாகோ சொற்பொழிவுகள் – புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு

சிகாகோ சொற்பொழிவுகள் – புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு

செப்டம்பர் 26, 1893 நான் பெளத்தன் அல்ல என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனாலும் நான் ஒரு பெளத்தன். சீனாவும் ஜப்பானும் இலங்கையும் அந்த மகானின் உபதேசங்களைப் பின்பற்றுகின்றன. இந்தியாவோ அவரைக் கடவுளின் அவதாரம் என்று போற்றி வணங்குகிறது. நான் பெளத்த மதத்தை விமர்சிக்கப் போவதாகச் சற்று முன் கூறினார்கள். அதன் பொருளை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் அவதாரம் எனக்கூறி நான் வழிபடுபவரை நானே விமர்சிப்பது என்பது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ... Read More »

Scroll To Top