Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் (page 3)

Category Archives: அமானுஷ்யம்

கறுப்பு வரலாறு – 20

சொல்லுங்க கரிகாலன் எதுக்காக நீங்க சங்கரை கொன்னீங்க என்று பொறுமையாக கேட்டார் இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட். சார், நான் அவரை கொலை பண்ணலை. சரி. ஆனா உங்கள் வண்டியில் ரத்த கறை கிடைச்சிருக்கு. அவரு உங்களோட காலை வந்தவரு திரும்பி வரலை. ஆமாம் சார். ஆனா என் வண்டியை ரகு தம்பியும் ஓட்டுவாரு. அப்ப ரகு இந்த கொலை செஞ்சாருன்னு சொல்றீங்களா. அப்படி சொல்லலை சார். எல்லா புள்ளைங்களும் நல்ல புள்ளைங்க தான். ஆனா………… என்று இழுத்தார். ஆனா ... Read More »

கறுப்பு வரலாறு – 19

நான்கு நண்பர்களும் பழனியப்பனின் அறையில் இருந்தார்கள். நிலைமை இறுக்கமாக இருந்தது. சங்கரின் கொலையை அவர்கள் ஜீரணிக்க முடியவில்லை. கரிகாலன் தான் கொலையை செய்தது என்பது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. யாரும் சங்கரின் வீட்டில் இதைப் பற்றி தகவல் சொல்லவில்லை. அது போலீஸின் வேலை என்று தடுத்துவிட்டார் பழனியப்பன். இன்னும் நமக்கு தஞ்சை போலீஸ் பாதுகாப்பு தரவில்லையே என்று வருத்தப்பட்டார். ஆனால் லிப்டின் ஆப்பரேட்டர் ஆள் மாறியதை நண்பர்கள் காணத் தவறவில்லை. சார் நாம் இப்ப அடுத்தது என்ன ... Read More »

கறுப்பு வரலாறு – 18

ரமேஷ் சென்னையின் தலைமை தொலைபேசி நிலையத்தின் இயக்குனருக்கு முன்பு அமர்ந்திருந்தான். மிஸ்டர் ரமேஷ் இப்ப ஒரு சில மாவட்டங்களை தவிர்த்து நம்ம தமிழ் நாடு முழுவதும் டிஜிடல் எக்ஸசேன்ஜ் தான். போன கால்கள் இப்பவே எடுத்துக் கொடுத்திடலாம். ஆனா வந்த கால்கள் கண்டுபிடிக்கனும்னா இனிமே தான் சர்வீஸ் ஆக்டிவேட் பண்ணவேண்டியதிருக்கும். அதுவில்லாம இது ஒரு பொலிடிகல் ப்ராப்ளமா ஆகிடக்கூடாது. ஏற்கனவே நாங்க போன் டாப்பிங்க் பண்றோம் அப்படின்னு எதிர் கட்சிகள் கூச்சல் போடறாங்க. ஒரு நிமிடம் அமைதியாக ... Read More »

கறுப்பு வரலாறு – 17

ரமேஷ் இரண்டாவது நாளே சென்னை கிளம்பினான். பழனியப்பனுக்கு எதுவும் தெரிய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான் மாணவர்களை. தம்பிரானையும் ஞானப்ரகாசத்தையும் சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்தான். காவல் துறை இந்த விவகாரத்தில் நுழைந்துவிட்டது என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டாம் என்று பார்த்துக் கொண்டான். கரிகாலன் விஷயமும் பத்திரிகை துறைக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டான். அடுத்து சந்திரசேகர் என்று சொல்லிக் கொண்டான். வீட்டுக்கு வந்ததும் மாடிக்குச் சென்று திறந்தவெளி நீச்சல் குளத்தில் குளித்தான். படுக்கையறைக்கு வந்து ஜெயாவின் ... Read More »

கறுப்பு வரலாறு – 16

தஞ்சையில் அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் வந்து தங்கினான். ரகுவை தனியாக பிடித்து விவரங்களை அறிந்துக் கொண்டான். ரவியை தனியாக சந்தித்து பேசினான். ரவியிடம் கரிகாலனை கண்காணிக்கும் பணியில் அமர்த்தினான். உணவகத்தில் தனியாக சவிதாவைப்பிடித்தான். அவளிடமும் பேசினான். நீலாவை லிப்டில் பிடித்து அவன் அறைக்கு அழைத்துச் சென்று பேசினான். பழனியப்பனிடமும் கரிகாலனிடமும் பேசவில்லை. அவன் வந்த்து அவர்கள் இருவருக்கும் தெரிய வேண்டாம் என்று சொன்னான். இருவரையுமே சந்தேகிப்பதாகவும் இருவருக்கும் நான் இங்கிருக்கும் விவரம் தெரியக் கூடாது என்றும் கூறினான். ... Read More »

கறுப்பு வரலாறு – 15

அழகான இந்தியில் பேசத் தொடங்கினார் பாஸ்கர் பாராஷேர். ரமஷின் மேலதிகாரி. ரமேஷ் வளர்ந்த நாடுகள் நம் நாட்டில் அதிகம் உளவு செய்யும் பகுதிகளை அறிந்திருக்கறீர்களா. ஆமாம் சார். நாட்டில் எங்கே பெட்ரோல் கிடைக்கிறது என்பது நம் அரசாங்கத்தைவிட முதலில் அவர்களுக்கு கிடைக்கிறது. அது போல அணு ஆயுத சோதனைகள், வைரம், தங்கம், ராணுவ ஒப்பந்தங்கள், அரசியல் மாற்றங்கள், மதவாதத்தினால் மாற்றங்கள் ஏற்படக்கூடிய இடங்கள், எங்கெல்லாம் தீவிரவாதம் ஊடுருகிறது என்றெல்லாம். சரி தான் ரமேஷ். அந்த பட்டியலில் தமிழக ... Read More »

கறுப்பு வரலாறு – 14

மத்திய உளவுத்துறை அதிகாரி ரமேஷ் கடிகாரத்தை பார்த்தான். 45 நிமிடம் ஓடியிருந்தான். வழக்கமான நேரம் தான். ஆனால் வழக்கமான தூரம் இல்லை. மிக தொலைவில் வந்திருந்தான். செல்பேசியை எடுத்து மனைவி ஜெயாவை அழைத்தான். பிக் மீ அப் என்று விட்டு வைத்தான். மெதுவாக கடலோரத்தில் இருந்த மணல்வெளியில் தன் வெற்று கால்களை பதித்தான். நீலாங்கரை கடல் அன்று மிக அழகாக நீலமாக காட்சியளித்தது. செல்பேசி ஒலித்தது. டீக் ஹெய். தீஸ் மின்டோமே பஹூஞ்ச் தான் ஹூன் என்று ... Read More »

கறுப்பு வரலாறு – 13

எனக்கு ஒரு குழப்பமாகவும் பயமாகவும் இருக்கு. நீங்க தான் தஞ்சை காவல்துறையிடம் சொல்லி எங்களுக்கு பாதுகாப்பு தரணும். ஏன்னா என்னை நம்பி பெற்றோர்கள் அவங்க பிள்ளைகளை ஒப்படைச்சிருக்காங்க. நன்றி. அவசியம் சொல்றேன். இன்னொரு புறம் நடக்கும் பேச்சுக்களை கேட்காமல் குழப்பான சூழ்நிலையில் ஒரு தொலை பேசி பேச்சு மேலும் குழப்பத்தையே தரும். அதை புரிந்துக் கொண்ட பழனியப்பன் தன்னுடைய இரு மாணவர்களுக்கும் விளக்கினார். வணக்கம் பழனியப்பன். உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி. சங்கரோட பிரேத பரிசோதனை அறிக்கை ... Read More »

கறுப்பு வரலாறு – 12

சார் உங்க கிட்ட ஒன்னு கேட்கனும் என்றான் ரகு பழனியப்பனின் அறைக்கு வந்து. உட்காரு ரகு. சொல்லு என்றார். சார், சுற்று முற்றும் பார்த்தவிட்டு தொடர்ந்தான். சார், அன்னிக்கு தம்பிரான் கிட்டேர்ந்து அவர் எழுதின கட்டுரை வாங்கி படிச்ச உங்களோட முகம் இறுகி போயிட்டுத்தே எதுக்கு. ஹா ஹா, ஐந்து சின்ன பசங்களை கூட அழைச்சிகிட்டு வந்திருக்கேன்னு நினைச்சேன். ஆனா நீங்கள் எல்லாருமே புத்திசாலி பசங்கத்தான். ஒரு ஓவியனுக்கு கவனித்தல் தான் ஆயுதம். அந்த திறமை உன்கிட்டு ... Read More »

கறுப்பு வரலாறு – 11

மறுநாள் காலை சிற்றுண்டியில் சந்தித்தனர் அனைவரும். கரிகாலனும் சவிதாவும் மௌனமாக இருக்க, அனைவரும் கதையளத்துக் கொண்டிருந்தனர். பழனியப்பன் சவிதாவைப் பார்த்து ஞானப்ரகாசம் சார் கொடுத்த பக்கங்களையெல்லாம் கம்ப்யூட்டரில் ஏத்திட்டியா என்றார். இல்லை சார். நேத்து உடம்பு சரியில்லை என்றாள். பரவாயில்லை இன்னிக்கு பண்ணு. சார் மாத்திரை வாங்கனும். நானும் ரவியும் போயிட்டு வரட்டுமா. அவருக்கு இவர்கள் நடுவில் நடக்கும் காதல் கதை தெரியும். எதுவும் தப்பதண்டா நடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். சரி. ஆனால் 30 நிமிடத்துக்குள் ... Read More »

Scroll To Top