Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » கறுப்பு வரலாறு – 11

கறுப்பு வரலாறு – 11

மறுநாள் காலை சிற்றுண்டியில் சந்தித்தனர் அனைவரும். கரிகாலனும் சவிதாவும் மௌனமாக இருக்க, அனைவரும் கதையளத்துக் கொண்டிருந்தனர்.

பழனியப்பன் சவிதாவைப் பார்த்து ஞானப்ரகாசம் சார் கொடுத்த பக்கங்களையெல்லாம் கம்ப்யூட்டரில் ஏத்திட்டியா என்றார்.

இல்லை சார். நேத்து உடம்பு சரியில்லை என்றாள்.

பரவாயில்லை இன்னிக்கு பண்ணு.

சார் மாத்திரை வாங்கனும். நானும் ரவியும் போயிட்டு வரட்டுமா.

அவருக்கு இவர்கள் நடுவில் நடக்கும் காதல் கதை தெரியும். எதுவும் தப்பதண்டா நடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

சரி. ஆனால் 30 நிமிடத்துக்குள் திரும்பி வரனும். புரியுதா என்றார் ரவியைப் பார்த்து சற்று கண்டிப்புடன் அதே சமயத்தில் அவனைப் பார்த்து கண்ணடித்தப் படியே.

இல்லை சார். கட்டாயம் அரைமணியில் வந்திடறோம் என்றான் ரவி.

நான் வரட்டுமா என்றார் கரிகாலன்.

வேண்டாம் நாங்க ஆட்டோல போறோம் என்று காட்டமாக சொல்லிவிட்டு கிளம்பினாள் சவிதா.
ஆட்டோ தஞ்சை பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த மருந்துக் கடைக்கு வந்து நின்றது.
ரவி, எனக்கு மருந்து வேண்டாம். உன்னோட பேசத்தான் வெளியே வரச் சொன்னேன் என்றாள் சவிதா அவசரமாக.

என்ன விஷயம் சொல்லு.

ரவி, நேத்து கரிகாலன் என்ன செஞ்சாறு தெரியுமா என்று தொடங்கி அனைத்தையும் கூறினாள்.
என்ன. கரிகாலன் சாரா. நம்பவே முடியலையே. இப்பவே பழனியப்பன் சார்கிட்டே சொல்ல்லாம் என்றான் கோபமாக.

இரு. இன்னொரு அதிர்ச்சியான விஷயம் சொல்றேன்.

என்ன என்றான் ரவி குழப்பத்துடன்.

நேத்து ஞானப்ரகாசம் சார் கொடுத்த கட்டுரை வார்த்தைக்கு வார்த்தை மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய களப்பிறர் ஆட்சியில் தமிழகம் அப்படிங்கற புத்தகம்.
என்ன.

ஆமாம். ஞானப்ரகாசத்தை பார்த்து மயிலை சீனி காப்பியடிச்சாரா இல்லை மயிலை சீனியை பார்த்து ஞானப்ரகாசம் காப்பியடிச்சாரா.

சே. சே. மயிலை சீனியை பத்தி எனக்கு தெரியும். அவருடைய பல கட்டுரைகளை நான் படிச்சிருக்கேன். இந்த குழப்பம் தீரனும்னா ஞானப்ராகசத்திற்கு போன் போடுவோம் என்ற அவளை இழுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த தொலைபேசி கூடத்திற்கு சென்றான்.

இருவரும் ஒரு அறைக்குள் நுழைந்துக் கொண்டு இருவரும் கேட்பதுபோல தொலைபேசிக் கருவிகளை வைத்துக் கொண்டு அவருடைய எண்ணை சுழற்றி சவிதாவை பேசச் சொன்னான்.
சார் வணக்கம். நான் சவிதா பேசறேன்.

சொல்லும்மா உன்கிட்டேர்ந்து கால் வரும்னு நான் எதிர்பார்தேன்.
சார். தப்பா எடுத்துக் கூடாது. நீங்கள் கொடுத்த கட்டுரை வரிக்கு வரிக்கு மயிலை சீனி எழுதன புத்தகத்தில வந்திருக்கு.

என்ன சொல்றே. மயிலை சீனி வேங்கடசாமி எழுதின களப்பிறர் ஆட்சியில் தமிழகம் அப்படிங்கற புதத்த்தை பத்தியா சொல்றே.

ஆமாம் சார்.

இருக்காதே. நான் உன்கிட்டே கொடுத்து என்னுடை கம்பராமாயண்த்தோட உரைநடையாச்ச என்று சொல்லி பெரிதாக சிரித்தார்.

என்ன சார் சொல்றீங்க.
ஆமாம்மா. உங்க கூட்டத்தில ஒரு ஐந்தாம் படை இருக்கான். அவன்கிட்ட என் கட்டுரை மாட்டக்கூடாதுன்னு தான் நான் கம்பராமாயணத்தை எடுத்து கொடுத்தேன்.
ஆனா அவன் என்னடான்னு கம்பராமாயணத்தை எடுத்துட்டு மயிலை சீனியோட புத்தகத்தை வெச்சிட்டான். ஹா ஹா என்றார் களிப்புடன்.

சார் எனக்கு ஒன்றும் புரியலை.
பரவாயில்லைம்மா. நான் சொல்றத நல்லா கேட்டுக்க. யாருக்கும் தெரியாம இன்னும் 15 நிமிஷத்தில நீ பெரிய கோவிலுக்கு வந்து சேரு. வடக்கு மூலையில் நான் இருப்பேன். என்கிட்டேர்ந்து நீ ஒரிஜினல் காபி வாங்கிட்டுப் போ. ஆனால ஒன்னு இதுவும் தொலைஞ்சிட்டா என்னால ஒன்னும் பண்ணமுடியாது. என்கிட்ட நிறைய காப்பி இருக்கு. ஆனா என்னோட உயிருக்கும் உன்னோட உயிருக்கும் ஆபத்து.

சரி சார். நான் ஜாக்கிரதையா இருக்கேன்.

போனை வைத்துவிட்டு இருவரும் திறுதிறுவென்ற முழித்தார்கள். ஆராய்ச்சின்ற பேருல காதல் ஜோடியாக ஊரை சுற்ற நினைத்தவர்களுக்கு சங்கரின் மரணம், ஞானப்ராகசம் 30 வருடங்களுக்கு முன் வாங்கிய அடிகள், இப்போது கரிகாலனின் நடத்தை, காணால் போன கம்பராமாயணத்தின் உரைநடை என்று பீடிகை அதிகரித்துக் கொண்டே போனது.

சவி, நான் சொல்றேன் நேத்து நடந்த பிரச்சனைக்கு நடுவில கரிகாலன் தான் பேப்பர்ஸை மாத்தியிருக்கனும். ஞானப்ரகாசம் சொன்ன ஐந்தாம் படை இவருதான். இவரைப் பத்தி உடனே பழனியப்பன் சாருக்கும் சந்திரசேகர் சாருக்கும் சொல்லனும் என்றான் ரவி.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top