Home » 2017 » May (page 4)

Monthly Archives: May 2017

சுவாமி விவேகானந்தரின் இன்றைய அவசியம்

சுவாமி விவேகானந்தரின் இன்றைய அவசியம்

சுவாமி விவேகானந்தர் (பிறப்பு: 1863  ஜன. 12- மறைவு:  1902, ஜூலை 4) நமது தேசத்தின் மகத்தான ஒரு துறவியின் 150 ஆவது பிறந்த வருடத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் நம்மில் சிலருக்கு ஒரு கேள்வி எழலாம். “மாறி வரும் தற்போதைய நவீன சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தரின்  கருத்துக்களுக்கான அவசியம் என்ன?” ஏனெனில் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சூழ்நிலைகள் முற்றிலும் வேறானவை. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் நமது நாடு பெருமளவு மாறியுள்ளது. ... Read More »

பூசணிக்காய், சுண்டைக்காய்… என்னென்ன சத்துகள் உள்ளது?

பூசணிக்காய், சுண்டைக்காய்… என்னென்ன சத்துகள் உள்ளது?

பூசணிக்காய், சுண்டைக்காய்… என்னென்ன சத்துகள் உள்ளது? ––––––––––––––––––––––– கொத்தவரைக்காய்: இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. சிறுவர்கள், நோயுற்றோர் இதனை தவிர்ப்பது நல்லது. குறிப்பிடும் படியான சத்துக்கள் இல்லை. வாயுத் தொல்லை லேசான நெஞ்சுவலியை உண்டாக்கும். பூசணிக்காய்: இதில் புரதம், கொழுப்பு சத்துக்கள் உள்ளது. இதனை, ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது. யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கும், மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கும் மிகமிக நல்லது. ... Read More »

மாற்றம் விரும்பிய சனாதனி

மாற்றம் விரும்பிய சனாதனி

மகாதேவ கோவிந்த ரானடே (பிறப்பு: 1842, ஜன. 18- மறைவு: 1901 ஜன. 16) நமது நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட பெருமக்களில் ஒருவர் மகாராஷ்டிராவில் பிறந்த மகாதேவ கோவிந்த ரானடே.  சிறந்த அறிவுஜீவி, சீர்திருத்தவாதி, எழுத்தாளர், நீதிபதி, அரசியல் தலைவர் என்ற பல பரிமாணங்களை உடையவர் ரானடே. மராட்டியத்தின் நாசிக் மாவட்டத்தில், நிமாத் என்ற ஊரில் மிகவும் பாரம்பரியமான சித்பவன் பிராமணர்  குடும்பத்தில் 1842, ஜனவரி 18-ல் பிறந்தார் ரானடே. தனது பட்டப்படிப்பு, சட்டக்கல்வி முடித்தவுடன் (1871) மும்பை சிறுநீதிமன்றத்தில்  மாஜிஸ்திரேட்டாகச் சேர்ந்தார்.   பிற்காலத்தில் ... Read More »

தக்காளி, மாதுளை, நெல்லி… கோடை காலத்தின் அமிர்தம்!

தக்காளி, மாதுளை, நெல்லி… கோடை காலத்தின் அமிர்தம்!

தக்காளி, மாதுளை, நெல்லி… கோடை காலத்தின் அமிர்தம்! –––––––––––––––––––––––––– கோடை வெயிலில் உடலை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி எளிய சில வழிகளை நேற்று பார்த்தோம்… இன்று மேலும் சில வழிமுறைகளை பார்ப்போம்… தினமும், வெள்ளரி, கோஸ், பூசணி, வாழைத்தண்டு, கேரட், புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை இவைகளை ஜூஸ் செய்து சாப்பிடுங்கள். இவை உங்களை கோடைக்காலத்தில் நலமாக வைத்திருக்க உதவும். இலகுவான புரதத்தினை சேர்த்துக் கொள்ளுங்கள். சோயா, பருப்பு வகைகள் போன்றவை எளிதான சத்தான புரதங்கள். பாதாம், பிஸ்தா ... Read More »

தேசத்தின் சொத்து

தேசத்தின் சொத்து

ப.ஜீவானந்தம் (பிறப்பு: 1907, ஆக. 21 -மறைவு: 1963, ஜன. 18) வீரத்துறவி விவேகானந்தருக்குப் பிறகு இளைய சமுதாயத்தை தமிழகத்தில் வசீகரித்தவர் ஜீவா என்று அழைக்கப்படும் ப.ஜீவானந்தம். நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி, பட்டப்பிள்ளை – உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து.  ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து.  அவர்கள் குல தெய்வம் அது. வெள்ளையரை எதிர்த்துப் போராடிய காலம். திராவிடர்களுக்கு இழைக்கப்படும் ... Read More »

10 மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்!

10 மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்!

10 மில்லி எண்ணெயில்… பறந்து போகும் நோய்கள்! –––––––––– நம் உடலில் ஏற்படக்கூடிய ரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள், கல்லீரல், நுரையீரல் நோய், புற்று நோய், பக்கவாதம், நரம்பு சம்பந்தமான நோய், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள். இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச் ... Read More »

தேசிய சங்​க​நா​தமாக முழங்கியவர்

தேசிய சங்​க​நா​தமாக முழங்கியவர்

டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயு​டு (பிறப்பு: 1887, ஜூன் 4-  மறைவு: 1957 ஜூலை 23) தென்​னாட்​டுத் தில​க​ரா​கப் புகழ்​பூத்த வ.உ.சி,​​ 1934-இல்  ‘தேசிய சங்​க​நா​தம்’ எனும் தலைப்​பில் 32 பக்​கங்​க​ளில் டாக்​டர் பி.வர​த​ரா​ஜுலு நாயு​டு​வின் வாழ்க்கை வர​லாற்றை எழு​தி​னார்.​ இந்​தச் சிறு​வெ​ளி​யீட்​டில் டாக்​டர் நாயு​டு​வின் தேசி​யத் தொண்​டு​கள் 1933 வரை​யில் நிகழ்ந்​தவை மிகச் சுருக்​க​மா​கக் கூறப்​பட்​டுள்​ளன.​ ​ ‘டாக்​டர்’  எனும் பட்​டப் பெயர்,​​ அவர் சித்த வைத்​தி​யம்,​​ ஆயுர்​வேத வைத்​தி​யம் இரண்​டி​லும் தேர்ச்சி பெற்று மருத்​து​வத் தொழி​லில்  பெரும்​பு​கழ் ... Read More »

விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை!

விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை!

விஷக்கடிகளுக்கு மருந்தாகும்… சிறியாநங்கை, பெரியாநங்கை! ––––––––––––––––––––––– சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதனை நிலவேம்பு என்றும் அழைப்பார்கள். இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத் தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் தரும். அழகைக் கொடுக்கும். நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு பாம்பைக் கடித்துக் கொன்றபின், கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து, தமது புண்களை ஆற்றிக்கொள்ளும் என்பர். ‘சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் ... Read More »

நேதாஜிக்கு வழிகாட்டியவர்

நேதாஜிக்கு வழிகாட்டியவர்

ராஷ் பிஹாரி போஸ் (பிறப்பு: 1886, மே 25 – பலிதானம்:  1945,  ஜன. 21) நமது நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட உத்தமர்களில் நாம் என்றும் மறக்க முடியாதவர்கள் ராஷ் பிஹாரி போஸ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இருவரும் ஆவர். இவர்களில் மூத்தவரான ராஷ் பிஹாரி போசின் வீரமயமான வாழ்க்கை பலரும் அறியாதது. உண்மையில் நேதாஜிக்கு ஆதர்ஷமாகத் திகழ்ந்த வாழ்க்கை ராஷ் பிஹாரி போஸின் அர்ப்பண மயமான  வாழ்க்கை. வங்கத்தின் பர்த்வான் மாவட்டத்தில், சுபல்தஹா கிராமத்தில், அரசு ஊழியர் வினோத் பிஹாரி போஸின் மகனாக ... Read More »

பித்தம் அகற்ற 10 மணிக்கு உறக்கவும்!

பித்தம் அகற்ற 10 மணிக்கு உறக்கவும்!

உடல் பித்தத்தைக் கட்டுப்படுத்த… 10 மணிக்குள் உறங்க வேண்டும்! ––––––––––––––––––––––––––– ஓய்வு என்பது தூக்கத்தை குறிக்கிறது. இது ஐம்பூதங்களான  நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் (வானம்) ஆகியவற்றில், ஆகாயத்திற்கு  கட்ப்பட்டது என்று கூறுவார்கள். தூக்கம் அல்லது ஓய்வானது, கல்லீரல், பித்தப்பை ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க துணை செய்கிறது. அதற்கு, கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும். முடிந்தவரை இரவு 10 மணிக்கு தூங்க முயற்சிக்கவும். இரவு 11 மணி – 3 மணி வரை ஆழ்ந்த உறக்கத்தில் ... Read More »

Scroll To Top