Home » 2016 » July (page 3)

Monthly Archives: July 2016

பழி வாங்கும் போது நமக்கு துன்பம் வரும்!!!

பழி வாங்கும் போது நமக்கு துன்பம் வரும்!!!

ஒரு மிகப் பெரிய செல்வந்தன் இருந்தான் ஏராளமான தொழில் செய்பவன்..! ஊருக்கு வெளியே ஒரு ஜவுளித் துணி குடோனும் அதனருகில் ஒரு கோழிப்பண்ணையும் வைத்திருந்தான்..அருகில் உள்ள காட்டில் ஒரு ஓநாய் இருந்தது..! அது தினமும் அந்த பண்ணைக்கு வந்து 4 கோழிகளை பிடித்து சாப்பிட்டு ஓடிவிடும்..அதனால் செல்வந்தனுக்கு மிகப்பெரிய நஷ்டம்..ஓநாயின் இந்த அட்டகாசத்தை ஒழிக்க ஆட்களை ஏற்பாடு செய்து அதை பிடிக்க முடிவு செய்தான்.. அதன் படி ஆட்களையும் நியமித்தான்..! அந்த பொல்லாத ஓநாய் பிடிக்க வந்தவர்களை ... Read More »

மூன்று வகை செல்வங்களும் எவை தெரியுமா!!!

மூன்று வகை செல்வங்களும் எவை தெரியுமா!!!

செல்வம் மூன்று வகைகளில் வரும் அவை: 1. லட்சுமி செல்வம், 2. குபேர செல்வம், 3. இந்திர செல்வம் எனப்படும். லட்சுமி செல்வம்…… பாற்கடலை,  மந்தார மலையை  மத்தாகவும் வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் வாலையும் அசுரர்கள் தலையையும் பிடித்துக் கடைய, சந்திரன், ஐராவதம், காமதேனு, தன்வந்திரி இவர்களுடன் மகாலட்சுமியும் வெளிப்பட்டாள். இந்த மகாலட்சுமிதான் இந்திரன் இழந்த செல்வத்தை மீண்டும் அவனுக்குக் கொடுத்தாள். மேலும் குபேரனை அளகாபுரிக்கு அதிபதியாக ஆக்கினாள். கிருஷ்ணனின் நண்பனான குசேலனுக்கு அளவற்ற ... Read More »

ஆடி அமாவாசை சிறப்பு!!!

ஆடி அமாவாசை சிறப்பு!!!

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தை பாகத்தைக் குறிப்பிடும் சொல்லாகும். சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் பூமிக்கு நேராக வரும் பொழுதும் அமாவாசை திதி உண்டாகிறது. சந்திரன் சூரியனில் இருந்து பிரிந்து பூமியைச் சுற்றிவரும் மார்க்கத்தில், பூமிக்கும் சூரியனுக்கும் 180–வது பாகையில் வரும்பொழுது பவுர்ணமி திதி நிகழும். திதிகள் பூர்வபக்கத் திதிகள், அபரபக்கத் திதிகள் என இருவகைப்படும். அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் பவுர்ணமி இறுதியாகவுள்ள 15 திதிகளும் பூர்வபக்கம் எனப்படும். பவுர்ணமிக்கு அடுத்த பிரதமை ... Read More »

ஆடி அமாவாசை!!!

ஆடி அமாவாசை!!!

அமாவாசை அன்று காலையில் எழுந்து, அருகில் இருக் கும் ஆற்றிலோ, குளத்திலோ ஸ்நானம் செய்து விட்டு, இறந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரையோரங்களில் இருப்பார்கள். அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். அதன்பின்னர், முதியவர்களுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும். அமாவாசை அன்று வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்வார்கள். அன்றைய ... Read More »

வழிபாட்டிற்குரிய லிங்கங்கள்!!!

வழிபாட்டிற்குரிய லிங்கங்கள்!!!

இடைவிடாது, எப்போதும் அவன் ஆடிக்கொண்டே இருப்பதாலேயே நம் இயக்கம் நடைபெறுகிறது. அத்தகைய இறைவனுக்கு, அடி,முடி காணுவதும் நம்மால் இயலாத ஒன்று. என்றாலும் இந்த ஈசனை நாம் “சிவன்” என்கிறோம். சிவன் என்றாலே மங்களத்தைக் குறிக்கக் கூடிய ஒரு சொல். இந்தச் சிவ வழிபாடு தொன்றுதொட்டே, அதாவது மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற நாகரீகங்கள் இருந்த காலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. நாம் வழிபட ஒரு உருவம் யார் தந்தது என்ற ஆராய்ச்சியிலும் புக வில்லை. ... Read More »

புங்க மரம்!!!

புங்க மரம்!!!

பொது பெயர்: புங்க மரம், கரஞ்சி மரம்,derris indica அறிவியல் பெயர்; Milletia pinnata, Pongamia pinnata பட்டாணி ,உளுந்து, நிலக்கடலை வகையை சேர்ந்த லெகூம் (legume)குடும்பத்தினை சேர்ந்தது, எனவே காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் நிலை செய்யும் வேர் முடிச்சுகளை (root nodules)கொண்ட வெகு சில மரங்களில் புங்கை மரமும் ஒன்று. பரவலாக ஆசியா,ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள் பிரதேசங்களில் காணப்படும் மித மற்றும் வறண்ட(arid and semi arid) நில தாவரம் ஆகும். கோடையில் மிக ... Read More »

மகத்துவம் நிறைந்த மஞ்சள்!!!

மகத்துவம் நிறைந்த மஞ்சள்!!!

மஞ்சள் என்றால் மங்களம் என்பது தமிழர் மரபு!!! மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உண்டு. முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள் என்பார்கள். இதை முட்டா மஞ்சள் என்பார்கள்.இது உருண்டையாக இருக்கும். இரண்டாம் வகை கஸ்தூரி மஞ்சள். வில்லை வில்லையாகத் தட்டையாக நிறைய வாசனையோடிருக்கும். மூன்றாவது வகை விரலி மஞ்சள் என்ற பெயர்.  நீட்ட நீட்டமாக இருக்கும்.  கறி மஞ்சளும் இதுதான். மஞ்சளை ஒருசில பொருட்களுடன் சேர்த்து சருமத்தை பராமரித்து வந்தால் சருமத்தின் கருமை நிறம் முற்றிலும் நீங்கி சருமம் ... Read More »

மிகக் கடினமானவை மூன்றுண்டு!!!

மிகக் கடினமானவை மூன்றுண்டு!!!

மிகக் கடினமானவை மூன்றுண்டு 1. இரகசியத்தை காப்பது. 2. இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது. 3. ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.   நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும் 1. இதயத்தால் உணர்தல். 2. சொற்களால் தெரிவித்தல். 3. பதிலுக்கு உதவி செய்தல்.   பெண்மையை காக்க மூன்றுண்டு 1. அடக்கம். 2. உண்மை. 3. கற்பு.   மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு 1. சென்றதை மறப்பது. 2. நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது. 3. வருங்காலத்தைப் பற்றிச் ... Read More »

மங்குஸ்தான் பழம்!!!

மங்குஸ்தான் பழம்!!!

பழங்களின் அரசி:- கணனியில் வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும்.இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும். அதிகப்படியான உடல் கொழுப்பைக் குறைத்து மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு நோய்களைத் தவிர்க்க மங்குஸ்தான் பழச்சாறு குடிக்கலாம் என்று அமெரிக்க ஆய்வில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.மங்குஸ்தான் பழச்சாறு பருகினால், சி-ரீயாக்டிவ் புரோட்டினின் அளவு நம் ... Read More »

தூங்கும் முறை!!!

தூங்கும் முறை!!!

எப்படி  தூங்கறீங்க? நீங்க தூங்கும் முறை சரிதானா? அடிக்கடி புரண்டு படுக்கிறீர்களா? சரியான நேரத்தில் தூங்க முடியவில்லையா? அப்படியானால், முதலில்  கவனியுங்கள். சில ‘’டிப்ஸ்’’களை தந்துள்ளது, இதோ : சிலர், படுக்கையில் படுத்தவுடன் தூங்கி விடுவர், சிலருக்கு தூக்கம் வராது. புரண்டு படுத்தபடி தவியாய் தவிப்பர். அதனால், தூக்கம் வந்தவுடன் படுக்கைக்கு போங்க. ’டிவி’ பார்ப்பதோ, கத்தலான பாடல் கேட்பதோ வேண்டாம். மிதமான இசை கேட்கலாம். புத்தகம் படிக்கலாம். தூக்கம் வந்தவுடன் படுக்கைகு போகலாம். படுக்கப்போகும் முன், ... Read More »

Scroll To Top