Home » படித்ததில் பிடித்தது » ஆடி அமாவாசை சிறப்பு!!!
ஆடி அமாவாசை சிறப்பு!!!

ஆடி அமாவாசை சிறப்பு!!!

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தை பாகத்தைக் குறிப்பிடும் சொல்லாகும். சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் பூமிக்கு நேராக வரும் பொழுதும் அமாவாசை திதி உண்டாகிறது. சந்திரன் சூரியனில் இருந்து பிரிந்து பூமியைச் சுற்றிவரும் மார்க்கத்தில், பூமிக்கும் சூரியனுக்கும் 180–வது பாகையில் வரும்பொழுது பவுர்ணமி திதி நிகழும்.

திதிகள் பூர்வபக்கத் திதிகள், அபரபக்கத் திதிகள் என இருவகைப்படும். அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் பவுர்ணமி இறுதியாகவுள்ள 15 திதிகளும் பூர்வபக்கம் எனப்படும். பவுர்ணமிக்கு அடுத்த பிரதமை முதல் அமாவாசை இறுதியாகவுள்ள 15 திதிகளும் அபரபக்கம் எனப்படும். பூர்வபக்கம், அபரபக்கம் என்பன முறையே சுக்லபட்சம், கிருஷ்ணபட்சம் என்றும்; வளர்பிறை, தேய்பிறை என்றும் அழைக்கப்படும்.

‘அமா’ என்றால், ஓரிடத்தில் பொருந்தியது (சேர்ந்தது– குவிந்தது) என்று பொருள்படும். ஓர் ராசியில் சூரியன், சந்திரன் இருவரும் சேர்ந்து உறவாகும், வாசியான நாள் ‘அமாவாசி’ எனப்படும்.

சூரியன் ஞானகாரகன், ஆத்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார். உயிர்களின் ஆத்ம அமைப்பு சூரியனால்தான் நிகழ்கின்றன. ஆண்மை, ஆற்றல், பராக்கிரமம், வீரம், தீரம், தவம் யாவும் சூரியனாலேயே தோன்றுகின்றன.

சந்திரன் மனதிற்கு அதிபதி. மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, உற்சாகம், இன்பம் முதலியன சந்திரனால் அடையத்தக்கவை. இத்தகைய சூரியர், சந்திரர் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் நாள் புனிதமான நாள் ஆகும். சகல தேவர்களும் அமாவாசையின் அதிபர்களாவர். சிறப்புமிக்க அமாவாசை தினத்தில் விரதம் மேற்கொள்வது, இறைவனுக்கு மகிழ்ச்சி அளிப்பதும், பெருமை தருவதுமான நன்னாளாகும்.

மாதந்தோறும் வரும் அமாவாசை தினமானது, இறந்த நமது முன்னோர்களை நினைத்து விரதம் அனுஷ்டிக்க ஏற்ற நாளாகும். இவற்றில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்றவை முக்கியத்துவம் கொண்டவை. மிகவும் விசேஷமானது ஆடி அமாவாசையாகும். ஆடி மாதத்தில் சந்திரன் உச்சம் பெற்ற கடக ராசியில், சூரியன் சஞ்சரிப்பதே இதற்கு காரணம். சூரியன் சிவ அம்சம். சந்திரன் சக்தியின் அம்சம். இவ்விரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில் ஒன்றிணைவதால் ஆடி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த விரதம் நமது முன்னோர்களை வேண்டி வணங்கும் விரதம் என்றாலும், இறந்த தந்தைக்காக பிள்ளைகள் அனுஷ்டிக்கும் விரதம் என்று கூறுவார்கள்.

காலையில் எழுந்து ஆற்றிலோ, குளத்திலோ நீராடிவிட்டு, கரையோரத்தில் அமர்ந்து அந்தணர்களைக் கொண்டு தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆற்றிலோ, குளத்திலோ நீராட முடியாதவர்கள் வீட்டில் நீராடிவிட்டு அருகில் உள்ள ஆலயத்துக்கு சென்று, அங்கு அந்தணர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு இந்தியாவில் காசியும், இலங்கையில் கீரி மலைக் கடற்கரையும் விசேஷமான தலங்களாக கருதப்படுகிறது.

வீட்டை சுத்தம் செய்து சமையல் செய்ய வேண்டும். யார், யாரை வணங்க வேண்டுமோ, அவர்களை நினைத்தபடி இலைகளை போட்டு, சமைத்த உணவை அதில் படைத்து தீப– தூரம் காட்டி வழிபட வேண்டும். பின்பு இலையில் இருந்து எல்லா பதார்த்தங்களிலும் சிறிது சிறிது எடுத்துத், தனியாக ஓர் இலையில் வைத்து, காகம் உண்ணக் கூடியதான உயரமான இடத்தில் வைக்க வேண்டும். அவ்வுணவைக் காகங்கள் உண்ணத் தொடங்கிய பின்னர், விரதம் இருப்பவர்களும் வீட்டில் உள்ளவர்களும் உணவை உண்பார்கள். நமது முன்னோர்களே காகங்களாக வந்து, உணவை உண்பதாக நம்பிக்கை இருக்கிறது.

மேற்கண்டவாறு விரதத்தை மேற்கொள்வதால், இறந்த நமது முன்னோர்களின் அருள் பூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

தேவலரிடம் உள்ள நூலை பறிக்க வந்த அசுரர்களை அழித்து தேவலரைக் காத்திட்ட ஸ்ரீ சௌடேஸ்வரி அன்னை தேவலரை நோக்கி கூறினாள்.

மகனே! உன் பகை நீங்கியது. புனிதமான நூல் காப்பற்றப்பட்டது. விரும்பும் இடத்திற்குச் செல்க. எப்பொழுது நீ என்னை நினைத்தாலும் உன் முன் இருப்பேன். இன்று ஆடி அமாவாசை. இவ்வமாவாசை இரவில் நீ என்னை நினைத்தாய். உனக்காக நானும் அவதரித்தேன். இவ்வவதாரம் தேவாங்கர்க்குச் சொந்தமான அவதாரம். எனவே இவ்வாடி அமாவாசை எனக்குப் பிறந்தநாள். இதே நாளில் நீயும் பகைவரிடமிருந்து காப்பாற்றப்பட்டாய். எனவே உனக்கும் இது பிறந்த நாள்.

தேவாங்க குலத்தோர் அமாவாசை நாளில் வேறு காரியங்கள் செய்யாமல் என்னைத் தியானித்தால் சீரும் சிறப்பும், வலிமையும், செல்வமும், புகழும், பெருமையும், ஆயுளும், ஆரோக்கியமும் மற்றும் அணைத்து மங்கலங்களும் பெற்று வாழ்வர் என்று தேவாங்க மகரிஷிக்கு வரம் தந்து மறைந்தாள் ஸ்ரீ சௌடேஸ்வரி.

எனவே தான் பெரியவர்கள் அமாவாசையை விடுமுறைத் தினமாகக் கொண்டு அன்று அன்னையை நினைத்து வாழ்ந்தனர். நாம் அன்னையின் அருளைப்பெற கடும் தவத்தையோ, துறவு மேற்கொள்வதையோ வேறு கடுமையான விரதங்களையோ அவள் நமக்கு விதிக்கவில்லை. என்னை நினையுங்கள் வருகின்றேன் என்ற அந்தக் கருணையை நினைந்து நினைந்து உருக வேண்டாமா.

சூரி­யனைப் “பிதிர் காரகன்” என்­கி றோம். சந்­தி­ரனை “மாதுர் காரகன்” என்­கி றோம். எனவே, சூரி­யனும் சந்­தி­ரனும் எமது பிதா மாதாக்­க­ளா­கிய வழி­படும் தெய்­வங்­க­ளாகும்.

சூரிய பகவான் ஆண்மை,ஆற்றல்,வீரம் என்­ப­வற்றை எல்லாம் எமக்குத் தர­வல்­லவர். சந்­திரன் எமது மன­துக்கு அதி­ப­தி­யா­னவர். இதனால் மகிழ்ச்சி, தெளி­வான தெளிந்த அறிவு, இன்பம், உற்­சாகம் என்­ப­வற்றை எல்லாம் தர­வல்­லவர். இத்­த­கைய பெரு­மை­களை எல்லாம் தரு­கின்ற சூரிய, சந்­தி­ரனை தந்தை, தாய் இழந்­த­வர்கள் அமா­வாசை, பூரணை தினங்­களில் வழி­பாடு செய்வர்.

தை அமா­வாசை, ஆடி அமா­வாசை இரண்­டுமே பித்­ருக்­களைப் பூஜிக்கும் முக்­கிய நாட்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றன. என்ன காரணம்? சூரி­யனின் வட திசைப் பய­ண­மான உத்­த­ரா­யணம் தை மாதம் ஆரம்­ப­மா­கி­றது. தென்­திசைப் பய­ண­மான தட்­சி­ணா­யனம் ஆடி மாதம் தொடங்­கு­கி­றது. அத­னால்தான், ஆடி மற்றும் தை மாத அமா­வா­சைகள் விசே­ஷ­மா­ன­தாக விளங்­கு­கின்­றன. இந்த இரண்டு தினங்­களும் பித்­ருக்­களின் ஆசியை நமக்குப் பெற்­றுத்­தரும் அரு­மை­யான தினங்கள். ஏன்? தெரிந்தோ தெரி­யா­மலோ, வாழ்வில் நம்மை அறி­யாது பல பாவங்­க­ளுக்கு நாம் உட்­ப­டு­கிறோம். பல பிற­வி­களில் செய்த பாவங்­களும் இப்­பி­ற­வியில் நம்மை நிம்­ம­தி­யின்றி தவிக்க விடு­கின்­றன. ஆழ­மாகச் சிந்­தித்தால், நமது தவ­றுகள் நமக்குப் புரியும்.

வய­தான பெற்­றோர்­களை சரி­வர பரா­ம­ரிக்­காமல் அவர்­களை முதியோர் இல்லம் அனுப்­பு­வது… நக­ரத்தின் பழக்­கங்கள் அவர்­க­ளுக்குப் பிடிக்­காது என்று கூறி, கிரா­மத்தில் பெற்­றோரை தனியே வைக்­கி­றார்கள்… பெற்­ற­வர்­களை ஷிப்ட் முறை போல அடுத்த மக­ளிடம் அல்­லது மக­னிடம் அனுப்­பு­வது… என்ன வேதனை அந்தப் பெற்­றோர்­க­ளுக்கு! பெற்­றோரை உதா­சீ­னப்­ப­டுத்­தி­விட்டு பிற­ருக்கு கல்விச் செல­வுக்கு உத­வு­கிறேன்… கோயிலில் அன்­ன­தானம் செய்­கிறேன் என்­பதால், நம் பாவம் நீங்கி புண்­ணியம் பெரு­கி­வி­டாது. இவை அனைத்தும், இப்­பி­ற­வியில் நடை­முறை வாழ்வில் தினமும் நடப்­பதை நாமே பார்க்­கிறோம். இவற்றின் விளை­வுதான்,நமக்கு ஏற்­ப­டு­கின்ற கார­ண­மில்­லாத பிரச்­னைகள்.மனக்­கஷ்­டங்கள்

இவற்­றுக்குப் பரி­கா­ரமே பித்­ருக்­களை பூஜிப்­பதும், குல­தெய்­வத்தை ஆரா­தனை செய்­வ­தும்தான் என சாஸ்­தி­ரங்கள் கூறு­கின்­றன.

குடும்­பத்தில் ஓர் ஆண் வாரிசு தோன்­றி­யதும், ஆனந்­தப்­பட்டு தன்­னு­டைய பித்ரு கட­மை­களைச் செய்து தங்­களைக் கரை­யேற்­றுவான் என எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கின்­றனர். அதற்­கா­கவே ஏற்­பட்­டது பித்ரு தர்ப்­பண பூஜை. தேவ­லோக மூலி­கை­யான தர்ப்­பையைக் கொண்டு, எள் வைத்து ஜாதி, மத, பேத­மின்றி தர்ப்­பணம் செய்து மூதா­தை­யரை மகிழ்­விக்க வேண்­டி­யது ஒவ்­வொ­ரு­வரின் முக்­கியக் கட­மை­யாகும்.

திரு­வண்­ணா­ம­லையில் சிவ­பெ­ருமான் வல்­லாள மகா­ரா­ஜா­வுக்குத் தர்ப்­பணம் கொடுப்­பது வரு­டந்­தோறும் விழா­வா­கவே நடை­பெற்று வரு­கி­றது. குடந்­தையில் சார ங்க பாணிப் பெருமாள் தன் பக்­த­னுக்கு திதி கொடுக்­கிறார். தில­தர்ப்­ப­ண­பு­ரியில் ஜடா­யு­வுக்கு ஸ்ரீராமன் தர்ப்­ப­ண­ம­ளிக்­கிறார்.

செங்­கல்­பட்­டுக்கு அருகில் நென்­மேலி என்ற இடத்தில் உள்ள பெரு­மா­ளுக்கு ‘சிராத்த சம்­ரட்­சணப் பெருமாள்’ என்ற திரு­நாமம். தினமும் கோயில் குளக்­க­ரை யில் பெருமாள் எழுந்­த­ருளி மூதா­தை­ய­ருக்கு சிராத்தம் கொடுக்­கிறார்.

கொடு­முடி, பவானி,திருப்­புட்­குழி, ராமேஸ்­வரம், வேதா­ரண்யம், கன்­னி­யா­கு­மரி போன்ற இடங்­களில் ஆடி அமா­வாசை, தை அமா­வாசை தினங்­களில் விசேஷ பூஜைகள் நடை­பெறும். ‘கூடு­துறை’ எனப்­படும் ஆறுகள், கடல்கள் சங்­க­ம­மாகும் கரை­யோ­ரங்­களில் திர­ளாக மக்கள் கூடி அன்று பூஜை செய்­வது வழக்கம்.

முண்டம், தண்டம், பிண்டம் என்றே முறை­யாக பித்­ரு­பூஜை செய்யும் வழக்­கமும் உண்டு. முண்டம் என்­பது, அல­காபாத் திரி­வேணி சங்­க­மத்தில் பித்­ருக்­க ளைப் பூஜித்து, முடி களைந்து நீராடி அட்­சய வடத்தின் வேர்ப்­பா­கத்தைத் தரி­சிப்­பது. ‘தண்டம்’ என்­பது, காசி சென்று ‘பஞ்­ச­நதி சிராத்தம்’ செய்து, இறந்த முன்­னோர்­களைப் பூஜித்து கங்­கையில் நீராடி ஸ்ரீவி­சு­வ­நாதர், அன்­ன­பூ­ரணி, கால பைரவர் ஆகி ­யோரை தரி­சித்து தண்டம் சமர்ப்­பிப்­ப­தா கும். இங்கு அட்­சய வடத்தின் மத்­திம பாகத்தைத் தரி­சிக்க வேண்டும். அடுத்து ‘பிண்டம்’ கொடுப்­பது! கயையில் அட்­சய வடத்தின் நுனி பாகத்தைத் தரி­சித்து, பித்­ருக்­க­ளிடம் பூஜை செய்­தது திருப்தி தானா? குறை­களை மன்­னிக்­கவும் என வேண்டி, ஆல மரத்­த­டியில் நின்று வழி­பட்டு வர வேண்டும்.

இவ்­வாறு முறைப்­படி பூஜை செய்து பித்­ருக்­களைத் திருப்­தி­ப­டுத்­து­வதால் அவர்கள் நம்மை மனம் குளிர ஆசிர்வதிக்கின்றனர். அவர்கள் மனம் மகிழ்ந்து அளித்த நற் பலன்கள் அனைத்தும் சுவரில் எறிந்த பந்து போன்று நம்மிடம் திரும்பி வந்து சேரும். தெய்வத்தன்மை பொருந்திய பித்ருக்கள் கங்கை, அருகில் ஆடி அமாவாசை தினத் தன்று காத்து இருப்பது நம் ஐதீகம். சிரமம் பார்க்காமல் ஆடி அமாவாசை சென்று பித்ருக்களைக் கரைசேர்க்கும் பூஜையைச் செய்வது குடும்பத்துக்கு மிகவும் புண்ணி யம் சேர்க்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top