Home » 2016 » July (page 10)

Monthly Archives: July 2016

ராஜா ராம் மோகன் ராய்!!!

ராஜா ராம் மோகன் ராய்!!!

ராஜா ராம் மோகன் ராய்:- ‘ராஜா ராம் மோகன் ராய்’ என்றும், ‘ராம் மோகன் ராய்’ என்றும் போற்றப்படும், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் ‘நவீன இந்தியாவை உருவாக்கியவர்’ என்று அழைக்கப்பட்டார். அவர், முதல் இந்திய சமூக சமய சீர்திருத்த இயக்கமான ‘பிரம்ம சமாஜத்தை’ நிறுவியவர் ஆவார். நாட்டில் “சதி” என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகித்தார். ராஜா ராம் மோகன் ராய் அவர்கள், ஒரு பெரும் கல்வியாளராகவும், சுயாதீன ... Read More »

சுபாஷ் சந்திர போஸ்!!!

சுபாஷ் சந்திர போஸ்!!!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். ‘இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர். நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை ... Read More »

நேரத்தை வீணடிக்காதீர்கள்!!!

நேரத்தை வீணடிக்காதீர்கள்!!!

அந்த செல்வந்தனுக்கு அன்று மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. அவனது உயிரை கவர்ந்து வர எமதர்மன், எமதூதன் ஒருவனை அனுப்பியிருந்தான். செல்வந்தன் வழக்கம் போல காலையில் படுக்கையிலிருந்து எழுந்தான். எழும்போதே அவனுக்கு எதிரே கையில் பாசக்கயிற்றுடன் கூற்றுவனின் சேவகன் நின்றுகொண்டிருப்பதை பார்த்து திடுக்கிடுகிறான். “யார் நீ? உனக்கென்ன வேண்டும்?” “நான் எமதர்மராஜனின் ஏவலாள். இன்றோடு, இத்தோடு உன் ஆயுள் முடிகிறது. புறப்படு என்னோடு!” “நான் சாவதற்கு தயாராக இல்லை. எனக்கு இன்னும் கடமைகள் பல பாக்கியிருக்கிறது. நீ போய்விட்டு ... Read More »

சீதையின் கூறிய கதை!!!

சீதையின் கூறிய கதை!!!

சீதையின் பொறுமை:- இலங்கை அசோகவனத்தில் ராவணனால் சிறைவைக்கப்பட்டிருந்த சீதையைக் கண்டு ராமன் அனுப்பிய செய்தியை அனுமன் சொன்னான். பின்னர், அங்கிருந்த அரக்கியர் கூட்டத்தைக் குறிப்பிட்டு, தேவி, உன்னைப் பயமுறுத்திய இவ்வரக்கியரை நான் கொல்ல நீ அனுமதிக்க வேண்டும். இவர்கள் கொடுமையே உருவானவர்கள்.இராவணனுடைய ஆணையால் மட்டுமல்ல; இவர்களுக்கு இயற்கையாக உள்ள கொடுமைக்குணம் உன்னைத் துன்புறுத்த இவர்களைத் தூண்டியது. இவர்களைத் தண்டிக்க வேண்டும். காது, மூக்கை, அறுக்க கீழே வீழ்த்தி உதைக்க வேண்டும் எனக்கு அனுமதி தா! என்றான். அனுமனின் ... Read More »

எதை நாம் செய்கிறோம்!!!

எதை நாம் செய்கிறோம்!!!

ஒரு நாள் சாயங்கால வேளையில் வயதான பெண்மணி ஒருவர் கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர்கவணித்தார். வாகணங்கள் செல்லும்போது அந்தபெண்மணி கை காட்டி நிறுத்தப்பார்த்தார் ,ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை. அந்த நபர் அருகில் சென்று என்ன பிரச்சனை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.கார் டயர் பஞ்சர் ஆகி விட்டது என்று அந்த பெண்மணி கூறினார். என் பெயர் தயாளன் நீங்கள் காரில் உட்காருங்கள் நான் டயர் மாத்தி கொடுக்கிறேன் என்று டயரை கழட்ட ஆரம்பித்தார்.சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு ... Read More »

கீதை சொல்லும் பாதை!!!

கீதை சொல்லும் பாதை!!!

கீதை சொல்லும் பாதை! ஒரு ஊரில் வயதான முதியவர் ஒருவர் தன் பேரனுடன் வசித்து வந்தார். தினமும் அதிகாலையில் எழுந்து, சமையலறை மேஜை அருகில் அமர்ந்து, பகவத் கீதை படிப்பது அவர் வழக்கம். அனைத்து விஷயங்களிலும் அவரைப் பின்பற்ற நினைத்த பேரனும், கீதை படிக்க முற்பட்டான். ஒருநாள் தாத்தாவிடம், நானும் உங்களைப்போல் தினமும் பகவத் கீதை படிக்கிறேன். ஆனால், எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை; புரிந்த கொஞ்சமும், புத்தகத்தை மூடி வைத்ததும் மறந்துவிடுகிறது. இப்படி அதைப் படிப்பதால், ... Read More »

பெரிய முட்டாள்தனம்!!!

பெரிய முட்டாள்தனம்!!!

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த ஒரு வைரத்தை வழியிலே கண்டெடுத்தான்.அதன் மதிப்பு என்ன வென்று தெரியாம அதை தன் கூட இருந்த கழுதையோட காதிலே மாட்டிவிட்டான். அதைக் கண்காணிச்ச ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று,,”இந்த கல்லை எனக்கு கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன்.எவ்வளவு வேண்டும் கேள்” என்றான். பிச்சைக்காரன், ‘அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக் கல்லை வைத்துக் கொள்’ என்றான். அதற்குள் வைரவியாபாரிக்குள்ள சாத்தான் பூந்துட்டு இன்னும் குறைவா வாங்குன்னு சொல்ல அவர்,’ஒரு ... Read More »

நாரதர் நடத்திய திருமணம்!!!

நாரதர் நடத்திய திருமணம்!!!

மகாபலி சக்ரவர்த்திக்கு நூறு பிள்ளைகள். இவர்களில் மூத்தவன் பாணாசுரன். சோணிதபுரத்தை ஆட்சி செய்த இவன், சிறந்த சிவபக்தன்; சிவனருளால் ஆயிரம் கரங்களையும் அரிய வரங்கள் பலவற்றையும் பெற்றவன். ஆனால்… காலப்போக்கில் அவனிடம், ‘தம்மை எதிர்க்க எவரும் இல்லை!’ என்ற அகந்தையும் அதிகார மமதையும் வளர்ந்தன. ஒரு நாள் சிவபெருமானிடமே, ”ஸ்வாமி, தங்களது அருளால் பெரும் வல்லமை பெற்றுத் திகழும் என்னை எதிர்க்க ஒருவனும் இல்லை. என் தோள்கள் தினவெடுக்கின்றனவே!” என்று இறுமாப்புடன் கூறினான் பாணாசுரன். ‘பெரும் வீரனான ... Read More »

தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்!!!

தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்!!!

தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயங்கள்:- சிதம்பரம் சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், கடலூர் திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில், கடலூர் சிவபுரி உச்சிநாதர் திருக்கோயில், கடலூர் திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோயில், கடலூர் ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் திருக்கோயில், நாகப்பட்டினம் மகேந்திரப் பள்ளி திருமேனியழகர் திருக்கோயில், நாகப்பட்டினம் திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம் அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் சாயாவனம் சாயாவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் பூம்புகார் பல்லவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், ... Read More »

தண்டனையில் இருந்து தப்பிக்க!!!

தண்டனையில் இருந்து தப்பிக்க!!!

சனி பகவானின் தண்டனையில் இருந்து தப்பிக்க – ஒரு சிறந்த பரிகாரம் ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம். எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது – அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் – சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி – கொடுமையாக தண்டிக்கிறார். நான் ... Read More »

Scroll To Top